Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குழம்பிப் போயுள்ள மட்டக்களப்பில் கேள்விக்குறியாகியுள்ள அமைதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குழம்பிப் போயுள்ள மட்டக்களப்பில் கேள்விக்குறியாகியுள்ள அமைதி

-இலட்சுமணன்-

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியின் மத்திய பகுதியில் வைத்து கடந்த 22 ஆம் திகதி பிள்ளையான் குழுவின் ஆரையம்பதி பிரதேசப் பொறுப்பாளர் சாந்தன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து உருவான சூழல் காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் கொல்லப்படுவதற்கும் மேலும் 6 பேர் படுகாயம் அடைவதற்கும் 4 பேர் கடத்தப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

மட்டக்களப்பு - கல்லடியில் வைத்துப் பிள்ளையான் குழுவால் கடத்தப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களையும் விடுவிக்கக்கோரி ஏறாவூரில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 முஸ்லிம் இளைஞர்கள் கைதாகித் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளனர். இது ஓயாத பிரச்சினையாக மட்டக்களப்பின் முஸ்லிம் பிரதேசங்களில் தொடர்ந்தும் எரிந்து வருகிறது.

கொல்லப்பட்ட சாந்தன் அம்பாறை சவளக்கடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ராசிக் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்து விடுதலைப் புலகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவர், கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவருடன் இணைந்து கொண்டார்.

கருணாவி;ற்கும் பிள்ளையானுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவின் போது பிள்ளையானை ஆதரித்த இவர், தமிழ் - முஸ்லிம் எல்லைக் கிராமமான ஆரையம்பதி பிரதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள இவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதனைப் பயன்படுத்தி முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்துவதில் முன் நின்றார். இவரது செயற்பாடுகள் தமிழ் - முஸ்லிம் நல்லுறவில் பாரிய விரிசலுக்கு வித்திட்டதுடன் இப்பிரதேசத்தில் தொடர்ச்சியான பதட்ட நிலைக்கும் காரணமானது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திலே தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் இணைந்து செயற்பட்ட இரு இனங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் பிரித்தாழும் சூழ்ச்சிக்குப் பலியாகியதில் சகோதர இனங்கள் இரண்டுமே ஒன்றையொன்று பரஸ்பரம் சந்தேகப்பட வேண்டிய சூழல் தோற்;றுவிக்கப்பட்டு விட்டது. இரண்டு தரப்பிலும் உள்ள கடும் போக்காளர்கள் இந்த இரு இனங்களுக்கும் இடையே உருவாகக்கூடிய நல்லுறவைச் சிதைத்து விடத் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவான ஜிகாத் தனியாகவும், ஊர்காவல் படை என்ற போர்வையில் இராணுவத்துடன் இணைந்து கூட்டாகவும் தமிழ் மக்களைக் கொலை செய்தும் துன்புறுத்தியும் வருகின்றது. இக்குழுவினருக்கு சிறிலங்கா அரசு மட்டுமன்றி பாகிஸ்தான் உள்ளிட்டு இஸ்லாமிய நாடுகள் ஆயுத பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.

தமிழ்த் தரப்பைப் பொறுத்த வரை இராணுவத்துடன் ஒட்டி உறவாடும் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் கூட தமிழ் மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும், தமது பழைய பகைமைகளைத் தீர்த்துக்கொள்ளவும் அப்பாவி முஸ்லிம்களைப் பழிவாங்கி வருகின்றனர்.

இதேவேளை, முஸ்லிம் மக்களிடையே தமது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவும், தமது எஜமானர்களின் நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவேற்றவும் அப்பாவித் தமிழ் மக்களையும், வாய்ப்புக் கிடைக்கும் போது போராளிகளையும், ஒருசில வேளைகளில் தமக்கு இடைஞ்சலாக உள்ள ஒட்டுக்குழு உறுப்பினர்களையும் ஜிகாத் குழுவினர் கொலை செய்து வருகின்றனர்.

இவர்களைத் தவிர, கருணா 2004 ஏப்ரலில் அடைக்கலம் தேடிக் கொழும்புக்குச் சென்ற போது அவரது சகாக்களால் ஐநூறு, ஆயிரம் ரூபாய்க்கென விற்கப்பட்ட ஆயுதங்களும் கூட முஸ்லிம்களிடம நிறையவே உள்ளன.

இந்நிலையில், சாந்தனை விடுதலைப் புலிகளே சுட்டுக்கொண்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள விரும்பாத பிள்ளையான் குழு, பழியை முஸ்லிம்கள் மீது போட்டுவிட்டு துப்பாக்கிப் பிரயோகம், கடத்தல் என வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளது. தனது பேச்சாளராக முஸ்லிம் ஒருவரைக் கொண்டுள்ள பிள்ளையான் குழுவால் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயற்பட முடியும்? தனது அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சரை வைத்துக்கொண்டு தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து அவரால் எவ்வாறு காப்பாற்ற முடியும்?

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரை முஸ்லிம்களின் முதன்மைப் பிரதேசமாக காத்தான்குடியே விளங்கி வருகின்றது. முஸ்லிம்களின் கருத்துருவாக்கம் இங்கிருந்து வருவதை விரும்பாத ஏறாவூர், ஓட்டமாவடி ஆகியவை எப்போதுமே காத்தான்குடியின் தலைமைத்துவத்தை நிராகரிப்பவர்களாக இருந்து வருகின்றன. இந்த முரண்பாடு தேர்தல் சமயங்களின் போது துலாம்பரமாக வெளிப்படுபதைக் காணலாம்.

சனத்தொகை நிறைந்த பிரதேசமான காத்தான்குடி தனது இரு மருங்கிலுமுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் ஆக்கிரமிப்புச் செய்வதும், இதனால் தமிழ் மக்களோடு அடிக்கடி உரசல்கள் ஏற்படுவதும் வழக்கமானது. சனத்தொகைப் பெருக்கத்திற்கேற்ப இடவசதி மற்றும் ஏனைய வசதிகள் இல்லை என்பதனால் ஆரையம்பதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளைக் கையகப்படுத்துவதில் 1978 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வரையறுக்கப்பட்ட ஆரையம்பதி எல்லைக்குள் காத்தான்குடி நகர சபை மூக்கை நுழைப்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனால் ஆரையம்பதியினுடைய பல நிலப்பரப்புக்கள் பறிபோய் விட்டன. இப்போது ஆரையம்பதி மக்கள் சுற்றியுள்ள 46 இந்துக்கோயில் திருவிழாக்களுக்காக தீர்த்தமாடுவதற்காகக் கூட கடற்கரைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. (இதே போன்ற நிலை காத்தான்குடியின் வடக்கு எல்லையான கல்லடி - மஞ்சந்தொடுவாய் பகுதியிலும் உள்ளது.)

1978 ஆம் ஆண்டில் ஆரையம்பதி கிழக்குப் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் அரசும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்து செயற்படுத்திய திட்டத்தினால் கர்பலா என்ற கிராமம் உருவாக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் ஆரையம்பதியைச் சுற்றி காங்கேயனோடை, ஒல்லிக்குளம், கிச்சான் பள்ளம், சிகரம், பாலமுனை எனப் பல முஸ்லிம் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்தகைய செயற்பாடுகளால், தமிழ் - முஸ்லிம் உறவு என்பது எப்போதும் வெடிக்கக்கூடிய ஒரு கொதி நிலையிலேயே இருந்து வருகின்றது.

சாதாரண முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரை அவர்கள் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ விரும்பினாலும், பல்வேறு காரணங்களால் முஸ்லிம் மக்கள் என்ற வட்டத்துக்குள் நின்றே செயற்படுகிறார்கள். இது அரசியல்வாதிகள் அவர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.

1990 இல் இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை வருடா வருடம் பாரிய நினைவு கூரலாக அனுட்டிக்கப்பட்டு வருவதன் ஊடாக பழைய விடயங்கள் மக்கள் மனதில் இருந்து மறக்கப்பட்டு விடாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.