Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டின் அராஜகச் செயல்களுக்குச் சிங்கள ஊடகங்கள் துணைபோகின்றன - வாராந்த ஆய்வு

Featured Replies

இலங்கையில் இன்று இடம்பெறுவது அராஜகச் செயல்களாகவே நோக்கப்படுகின்றன..எனினும் இலங்கை அரசாங்கமோ அல்லது சிங்கள மக்களோ இதனை அராஜகம் என்றில்லாமல் நாட்டைக்காக்கும் செயல்கள் என்றே கருதுகின்றனர்.

இதில் சிங்கள ஊடகங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. சிங்கள ஊடகங்கள் ஒவ்வொன்றும் வெளியிடும் போர் சம்பந்தமான செய்திகள் எந்த ஒரு கட்டத்திலும் படையினரைப் பாதித்து விடக்கூடாது என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளன. குறிப்பாக போர்க்கள நிலவரங்களைப் பொறுத்தவரையில் சிங்கள ஊடகங்கள் படையினருக்கு வெற்றி என்ற வகையிலேயே அதனைக் காட்டுகின்றன. ஒருபோதும் அவை செய்தியின் அடிப்படை அம்சமான “சமநிலை” என்ற வகையில் மறுத்தரப்பின் செய்திகளைப் பிரசுரிப்பதில்லை. இது சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் செயல்களாகவே சிங்கள ஊடகங்கள் நோக்குகின்றன. அத்துடன் நாட்டுக்குத் தாம் சேவை செய்வதாக அவை எண்ணுகின்றன.

இலங்கையில் ஊடகங்களில் அடிப்படைத் தன்மைகள் ஒழுக்கக்கோவைகள் என்பன உரியமுறையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது பொதுவான அம்சமாகும். சிங்கள ஊடகங்களுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் தமது தரப்பினரைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே செயற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும் தமிழ் ஊடகங்கள் பெரும்பாலான விடயங்களில் ஊடகத்துறையின் உண்மை அம்சங்களைக் கடைபிடிக்கின்றன. இது முன்பிருந்தே இலங்கையின் ஊடகத்துறையில் இருந்து வந்த பழக்கமாகும். அது இன்று போர்ச் சூழ்நிலையில் அது அதிக தாக்கத்துடன் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

சாதாரணமாகச் சிங்கள ஊடகங்களைப் பொறுத்தவரை சிங்கள மக்களைக் காப்பாற்றி மாற்று இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம்களைத் தாழ்வுக்கு உள்ளாக்கும் வகையிலேயே செயற்படுகின்றன. உதாரணமாக ஹெரோய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்படுவாராக இருந்தால் அவர் சிங்களவராக இருந்தால் சிங்கள ஊடகங்கள் எந்த ஒரு இன அடையாளப்படுத்தலையும் வெளிக்காட்டாது செய்திகளை வெளியிடுகின்றன. எனினும் குறித்த சம்பவத்தில் தமிழரோ அல்லது முஸ்லிம்களோ தொடர்புபட்டிருந்தால் அவர்களின் இன அடையாளங்களை வெளிப்படையாகக் காட்டுவதற்குத் தயங்குவதில்லை. இந்த விடயத்தில் தமிழ் ஊடகங்கள் ஓரளவு ஊடக ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கின்றன எனக்கூறலாம்.

பொதுவாகத் தமிழ் ஊடகங்கள் எந்த ஒரு சம்பவம் இடம்பெற்றாலும் அதில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் இன அடையாளங்களைச் செய்தியாக்குவதில்லை. ஆனால் பெரும்பாலான சிங்கள ஊடகங்கள் இதனைக் கருத்திற் கொள்வதில்லை. இந்த முறையானது தற்போதைய யுத்தச் சூழ்நிலையில் அந்த ஊடகங்களினால் தீவிரமாகவே கைக்கொள்ளப்படுகிறது எனக்கூறலாம். ஊடகங்களின் இந்தச் செயற்பாடானது இலங்கையின் இனப்பிரச்சினையில் விட்டுக்கொடுக்க வேண்டிய தரப்பாக விளங்கும் சிங்களத்தரப்பை அதிலிருந்து விலகவே செய்யும் எனக் கூறமுடியும்.

ஏனெனில் இன்று இலங்கையில் அரசாங்கம் மேற்கொள்கின்ற அனைத்து அராஜகச் செயல்களையும் யுத்தம் என்ற அடிப்படையில் சரியானவையே என்ற அடிப்படையில் சிங்கள ஊடகங்கள் செய்தியாக்குகின்றன. இது அரசாங்கம் செய்கின்ற மோசமான செயல்களையும் சரியானவையாக சிங்கள மத்தியில் காட்டுவதற்கே உதவும்.

பொதுவாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு நாளும் இடம்பெறுகின்ற ஆட்கள் காணாமல் போதல், கொலைகள் மற்றும் கடத்தல்கள் என்பவற்றைச் சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களுக்குச் சென்றடையாத வண்ணம் பார்த்துக்கொள்கின்றன. யுத்தம் இடம்பெறுமாக இருந்தால் அதன்போது மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றேயாக வேண்டும் என அரசாங்கம் கூறும் நியாயங்களை அந்த ஊடகங்கள் ஏற்றுக்கொள்வதைப்போல நடந்து கொள்கின்றன. போர் நிலவரம் தொடர்பாக கொழும்பில் அரசாங்கம் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தும் போது அங்கு அரசாங்கத்தரப்பு எதனைச் சொல்கிறதோ அதனை மாத்திரம் எழுதும் அளவிற்குச் சிங்கள ஊடகங்கள் செயலற்றுப் போயுள்ளன. இது நாட்டைப்பற்றிய சிந்தனையை அடிப்படையாகக்கொண்டது எனக்கூறமுடியாது.

ஏனெனில் ஊடகவியலாளர் என்போர் நாட்டில் நடக்கின்ற விடயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து எதிர்காலத்திற்கு அது எந்தளவு பாதிப்பை அல்லது நன்மையை அளிக்கமுடியும் என்பதை உணரக்கூடியவர்களாக இருப்பர். ஆனால் இங்கு அரசாங்கம் மேற்கொள்கின்ற செயல்கள் யாவும் நாட்டை அதள பாதாளத்திற்குக் கொண்டு செல்லும் என்ற உண்மை தென்படுகின்ற போதும் அதனை வெளிப்படுத்தச் சிங்கள ஊடகங்கள் முன்வருவதில்லை. இது நாட்டுப் பற்று என்பதை விடச் சிங்கள இனப்பற்று என்றே கூறவேண்டும். இதனை நன்றாக புரிந்துகொண்ட அரசாங்கமும் சிங்கள ஊடகங்களைப் பயன்படுத்தித் தமது ஆட்சியைத் தக்கவைக்கும் செயற்பாட்டைச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

இதற்குக் காரணம் இலங்கையில் ஊடகத்துறை தொழில்சார் தகமையுள்ள துறையாக அல்லாமல் வந்தோரை வரவேற்கும் துறையாக இருப்பதுவேயாகும். இதனைத் தற்போதைய சூழ்நிலையில் மாற்றமுடியாது. மாற்ற முனைபவர்கள் நிச்சயமாக இனத்துரோகிகளாகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்படக்கூடிய நிலை அச்சம் இன்று மேலிட்டுள்ளது. எனவே தெரிந்தோ தெரியாமலோ இலங்கைத் தேசம் எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் பாரிய பின்னடைவுகளுக்கும் நாசங்களுக்கும் சிங்கள ஊடகத்துறையும் ஒரு காரணமாக அமையப்போகிறது என்பதே உண்மை.

கட்டுரை மூலம் : தமிழ்வின் இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.