Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மொறட்டுவவில் தமிழ் மாணவர்களுக்கு அடி-உதை: 10 மாணவர்கள் உட்பட 30-க்கும் அதிகமானோர் கைது

Featured Replies

மொறட்டுவவில் தமிழ் மாணவர்களுக்கு அடி-உதை: 10 மாணவர்கள் உட்பட 30-க்கும் அதிகமானோர் கைது

[வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 07:07 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவ கட்டுப்பெத்தவில் இன்று காலை பேருந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலையடுத்து மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்குள் தமிழ் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் பல்கலைக்கழகத்திற்குள் இருந்த தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். 10-க்கும் அதிகமான தமிழ் மாணவர்களை சிங்கள மாணவர்கள் நையப்புடைத்தனர் என்று பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள மாணவர்களால் தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மாணவர்களை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்து சென்றுள்ளனர்.

மொறட்டுவ காவல் நிலையத்தில் 10-க்கும் அதிகமான தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வன்முறையில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

இவர்கள் தவிர மேலும் 30 தமிழர்கள் மொறட்டுவ காவல் நிலையத்திற்கு கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதேநேரம் மொறட்டுவவில் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் வீடுகள் சில சிங்களக் காடையர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. அது மட்டுமன்றி வெள்ளவத்தை மற்றும் தெகிவளையில் வீதியால் செல்லும் தமிழ் இளைஞர்கள் மீது சிங்களக் காடையர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாகவும் எனினும் தமிழ் இளைஞர்கள் அவர்களிடம் இருந்து தப்பியோடினர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவங்கள் குறித்து அரசியல்வாதிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான ஒரு கலவரம் வெடிக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக அரசியல்வாதிகள் பலரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை கண்டியில் இன்று மாலை இடம்பெற்ற பேருந்து குண்டுவெடிப்புக்குப் பின்னர் கண்டியிலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் சிறியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பேருந்து குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இருந்த மகாவலி ஆசிரியப் பயிற்சி கலாசாலையில் பயின்ற தமிழ் மாணவர்கள் நான்கு பேரை அங்கு கல்வி பயின்ற சிங்கள மாணவர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதினம்

மீண்டும் தமிழ் மக்களுக்கு ஆபத்தின் அறிகுறி வெளிப்பட்டுள்ளது......

1983இல் கட்டுபெத்தையில் நான் பெற்ற துயர அனுபவம் நினைவுக்கு வருகிறது.

ஆனி மாதத்தில் 1983இல் வவுனியா நகரில் வான் படையினரின் தாக்குதலுக்கு

பதிலடியாக கட்டுப்பெத்தையில் மாணவர்களின் மீது காடையர்கள் தாக்கினார்கள்....

சிங்கள மாணவர்கள் சிலர் அறையில் வைத்து பூட்டப்பட்ட தமிழ் மாணவர்களின் உடமைகள்

மற்றும் படிப்பு சம்பந்தமான எல்லாவற்றையும் எரித்து அழித்தனர்....

எறத்தாழ 25வருடத்தின் பின்பும் இதே நிலைமை தமிழர்களைப்பொறுத்தவரை...

எமது தாயக மீட்பே எல்லாவற்றிற்கும் தீர்வு....

அதன் பின்பு உலகத்தில் மிகச்சிறந்த நாடாக கட்டி எழுப்புவோம்.....

குனிய குனிய குட்டுகிறவனும் மடையன்...குட்டு வாங்கிறவனும் மடையன் என்னும்

நிலைமையை மாற்றுவோம்........

காட்டு மிராண்டிகளும் இருந்து எம்மினம் எப்போது முழுமையாக காப்பற்றப்படப்போகிறதோ.?

மொரட்டுவையில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 46 தமிழர்கள் கைது

மொரட்டுவ கட்டுப்பெத்த பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 21 பேர் பலியானமையை அடுத்து சுமார் 46 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு மொரட்டுவ காவல்துறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த 18 மாணவர்களும் 8 மாணவிகளும் அடங்குகின்றனர். ஏனைய தமிழர்கள் வியாபார தளங்களிலும் கட்டுப்பெத்த பிரதேசத்திலும் தங்கியிருந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை இன்று காலையில் கட்டுப்பெத்த பிரதேசத்தில் அமுல்செய்யப்பட்ட காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று மாலை 6 மணியுடன் நீக்கப்பட்டமையை அடுத்து மொரட்டுவைக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் பி ராதாகிருஸ்ணன் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து உரையாடினார். இதன்போது விசாரணையின் பின்னர் சந்தேகமற்றவர்களை தாம் விடுவிப்பதாக காவல்துறையினர் பிரதி அமைச்சரிடம் உறுதியளித்துள்ளனர்.இதில் முதலில் தமிழ் மாணவிகளை விடுவிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் மாணவ மாணவிகளினதும் ஏனைய கைதுசெய்யப்பட்டவர்களினதும் பெற்றோருக்கும் கைதுதொடர்பாக அறிவிக்குமாறு காவல்துறையினர் பிரதி அமைச்சரிடம் கேட்டுள்ளனர்.

இதேவேளை மொரட்டுவ பிரதேசத்தில் இன்று காலை முதல் பதற்றம் ஏற்பட்டு தமிழர்களுக்கு எதிரான வியாபார தள தாக்குதல் உட்பட்ட சிற வன்முறைகளும் இடம்பெற்றன எனினும் இன்று மாலையில் அது ஓரளவு தணித்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட சிங்கள மாணவர்களே தமிழ் மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு இங்கு இடமில்லை என்ற கோசத்துடன் அவர்கள் தம்மை தாக்கியதாக தப்பிவந்த மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்

ஆதாரம்__ tamilwin.com

ஆக குண்டு வைத்தவர்கள் கையில் அகப்பட்டவர்கள்தான் என்ற நிலையாகிவிட்டதா? கொழும்பு நகர் முழுவதுமே ஏற்கெனவே சல்லடைபோட்டுத் தேடிவிட்ட பின்பும், இராணுவம் பொலிஸ் புகாத இடமே கொழும்பில் இல்லை என்றாகிவிட்ட நிலையிலும் தமிழர்தான் குண்டு வைப்பிற்குக் காரணமென்றால் எவ்வாறு நம்புவது.

இராணுவத்தில் ஆட்பற்றாக்குறை, தப்பியோடுதல் எனும் நிகழ்வுகள் தொடரும் போது இவ்வாறான செயற்பாட்டின் மூலம் தமிழர் மீதான வெறுப்புணர்வைத் தூண்டி இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் திட்டமாகவுமிருக்கலாம். 20 பேர் இறந்தால் எமக்கென்ன? நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற கூட்டம் ஆட்சி செய்யும் போது இது பொல் சம்பவங்கள் எதுவும் நடக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.