Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறது...........

Featured Replies

இலங்கையில் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருவது கவலையளிக்கிறது - பிரதமர் மன்மோகன் சிங்

வீரகேசரி நாளேடு

இலங்கையில் 25 வருட காலத்துக்கும் மேலாகத் தொடரும் இனப்பிரச்சினை காரணமாக அப்பாவி மக்கள் பலியாகி வருவது மிகுந்த கவலையை அளிக்கின்றது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட அயல் நாடுகளில் அமைதி நிலவ வேண்டியது இந்தியாவின்நலன்களுக்கு அத்தியாவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். பயிற்சியை முடித்துக்கொண்ட இந்திய அயல் நாட்டு சேவை அதிகாரிகள் மத்தி

யில் புதனன்றுமாலை உரையாற்றுகையிலேயே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறினார்.புதுடில்லியில் அவரது இல்லத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் கூறுகையில்,

இலங்கை இனப்பிரச்சினையின் தாக்கம் தீவிரமடைவதன் மூலம் இந்தியாவுக்குப் பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதிகளவு அகதிகள் அங்கிருந்தும் வருகின்றனர். இதனால் இலங்கைக்கு மாத்திரமல்ல, இந்தியாவுக்கும் நெருக்கடி ஏற்படுகின்றது. இலங்கை இனப்பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினையாகும். மறுபுறம் அது இந்திய வெளிநாட்டுக் கொள்கையுடன் சம்பந்தப்பட்டதாக அமைந்து விடுகின்றது. அயல் நாடுகளுடன் இந்தியா எப்போதும் சுமுக உறவைப் பேணவே விரும்புகின்றது. இதனடிப்படையில் பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளுடன் தனது உறவைப் பேணி வருகின்றது. எனினும், இந்தியா தனது தேசியத்தைப் பாதுகாப்பதில் அவதானமாகவுள்ளது. அயல் நாடுகளும் தம்மை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே இந்தியா விரும்புகின்றது. ஏனெனில், குறித்த நாடுகளின் பிரச்சினை இந்தியாவின் பிரச்சினையாக மாறியிருக்கின்றது என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:

அணுசக்தி ஒப்பந்தம்

அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இடசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதனால், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் அந்த நாட்டுடன் மட்டும் அன்றி ரஷ்யா, பிரான்ஸ் போன்ற பிற அணுசக்தி நாடுகளுடனும் புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். பரஸ்பர தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் நலனை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

ஆனால், உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் காரணமாக சில முட்டுக்கட்டைகளும் தடைகளும் ஏற்பட்டு உள்ளன. என்றாலும் தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் தாண்டி வரும் மாதங்களில் இந்த ஒப்பந்தத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

அணுசக்தி பிரச்சினையில் சில உலக நாடுகள் இந்தியாவுக்கு எதிராக தடை கோரி வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று ஆகும். இந்தியா அணுசக்தி நாடு என்ற அமெரிக்காவின் பாராட்டை நாம் முதன் முதலாக பெற்று இருக்கிறோம். அணுசக்தியை பயன்படுத்தி நமது தேச நலன்களை பாதுகாக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. அணு ஆயுதம் பரவல் தடை சட்டம், அணு ஆயுத சோதனை தடை சட்டம் ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திடவில்லை. இருந்தாலும் சிவில் துறையில் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக மேற்கண்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்தவில்லை. தீவிரவாதம்

சில அயல் நாடுகளில் தீவிரவாதிகளுக்கு ஊக்கம் அளிக்கும் செயல்கள் நடந்து வருவதால் நமது நாட்டின் பாதுகாப்பில் புதிய பரிமாணம் ஏற்பட்டு உள்ளது. அணு ஆயுதங்களும் முக்கியமான தொழில்நுட்பங்களும் தீவிரவாத சக்திகளின் கைகளில் கிடைத்தால் நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

அயல் நாடுகளுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது. சீனாவுடனான எல்லை பிரச்சினைக்கு சிறப்பு பிரதிநிதிகள் மூலம் சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கலா டாடர் கப்பல் பொர்தலபாடங்கள் குடுத்துட்டு இங்கால ஈழ தமிழர் பலியாகிரது அவருக்கு கவலையளிக்கிறது.. ஐயொடா :D

நீங்கள் சிங்களவருக்கு காசு குடுக்ரது .. .. அது எங்களுக்கு கவலையளிக்கிறது

சரத் பொன்சேகா உங்கள் நாட்டு இரனுவதொடு கலந்துரைய்யாடுவது.. .. அது எங்களுக்கு கவலையளிக்கிறது

தமிழ் நாட்டு ஈழ ஆதரவாளர்கலை உள்ள பிடிச்சு பொடுரது .. அது எங்களுக்கு கவலையளிக்கிறது

நீங்கள் இரன்டு முகதொட கதைக்ரது ..... அது எங்களுக்கு கவலையளிக்கிறது

உங்களிட்ட பிள்ளையயும் கில்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுர பழக்கம் இருக்கு.. அது எங்களுக்கு கவலையளிக்கிறது

Edited by kuddipaiyan26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.