Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரை ஒட்டுமொத்தமாக அடக்கும் நோக்கில் வன்னி மீதான அரச, இராணுவ முனைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை ஒட்டுமொத்தமாக அடக்கும் நோக்கில் வன்னி மீதான அரச, இராணுவ முனைப்பு

29.06.2008 / நிருபர் எல்லாளன்

சிங்கள அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இது பற்றிக் குறிப்பிடுகையில் வன்னிப் பிரதேசம் 400000 ற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் சிங்கள அரசானது தனது இராணுவ நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அங்கு வாழும் மக்களை பலியாக்கி வருகின்றது. வன்னி மீது முழு அளவிலான பொருளாதாரத்தடை , மருந்துத் தடை, எரிபொருள் தடை என்பவற்றினை விதித்து மக்களை படுகொலை செய்வதற்கு முயல்கின்ற அதேவேளை எரிபொருள் தடை மூலம் வன்னியில் மக்களின் பொதுப் போக்குவரத்துச் சேவைகள், விவசாய நடவடிக்கைகள் என்பவற்றினை முடக்குவதற்கும் வைத்தியசாலை உள்ளிட்ட மிக முக்கிய நிறுவனங்களின் செயற்பாடுகளையும் முடக்குவதற்கும் முயல்கின்றது.

மறுபுறத்தில் புலிகளை அழிப்பதற்கான யுத்தம் என்ற போர்வையில் கடந்த இரண்டு வருடங்களாக மன்னார், வவுனியா, மணலாறு , கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்களது வாழ்விடங்களை நோக்கி தொடர்ச்சியான பல்குழல் மற்றும் ஆட்லெறி எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இதனால் மாந்தை கிழக்கு மற்றும் மடுப் பிரதேசங்களிலிருந்தும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், பாலைப்பாணி ஆகிய பிரதேசங்களில் இருந்தும் மேலும் பல கிராமங்களிலும் இருந்தும் வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணிப் பிரதேசத்திலிருந்தும் அதனை அண்டிய கிராமங்களில் இருந்தும் மக்கள் இடம் பெயர வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இடம் பெயர்ந்த மக்கள் தற்காலிக குடிசைகள் கூட இல்லாது மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் வாழும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு மற்றும் உணவு அல்லாத நிவாரணங்களை வழங்குவதற்கும் கூட சிங்கள அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிவாரண உதவிகளையும் நிறுத்தவதற்கு அரசு மறைமுகமாக முயல்கிறது.

அதேவேளை விமானத் தாக்குதல்கள் , கிளைமோர்த் தாக்குதல்கள் என்பவற்றின் மூலம் பொதுமக்களை படுகொலை செய்துவரும் படைகள் பொது மக்களின் நடமாட்ட சுதந்திரத்தினை தடை செய்து வருகின்றன.

இவ்வாறு வன்னியில் வாழும் பொதுமக்கள் மீது தொடர்ச்சியான நெருக்குவாரங்களை கொடுத்து மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதன் மூலம் புலிகளைத் தனிமைப்படுத்தி வன்னியை இலகுவாக கைப்பற்றி விட முடியுமென சிங்களப்படைகளும் அரசும் முயல்கின்றன.

தெடர்ந்தும் பொதுமக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டு பல்லாயிரக் கணக்கில் இடம் பெயர வைக்கப்படுவார்களாயின் அதன் எதிர்விளைவுகள் என்பது மிகவும் பாரதூரமானதாகக் கூட அமையலாம்.

http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.