Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளைவான் கடத்தல்களுக்கு அரசும் படையினருமே பின்னணி! ஆதாரங்களுடன் விவரங்களை ஐ.தே.க. நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டில் இடம்பெற்று வரும் வெள்ளை வான்களில் ஆள்களைக் கடத்தும் நடவடிக்கை களுக்கு அரசும் இராணுவத்தினருமே பின்னணி என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படை யாகவே குற்றம் சாட்டியிருக்கின்றது ஐக்கிய தேசியக் கட்சி.

இத்தகைய வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்பான முழு விவரங்களையும் உரிய ஆதா ரங்களுடன் தமது கட்சி விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் ஐ.தே.க. அறி வித்திருக்கிறது.

ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஐ.தே.கட்சியின் பிர தம கொறடா ஜோஸப் மைக்கல் பெரேரா இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

அவர் தமது உரையில் மேலும் தெரி வித்ததாவது:

இன்று நாட்டில் ஊடகவியலாளர்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். யுத்தம் தொடர்பாகவும், அரசின் ஊழல் மோசடிகள் தொடர்பாகவும் ஊடகங்களில் வெளிப்படுத்த முடியாமல் உள்ளது.

அவ்வாறான விடயங்கள் தொடர்பான உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுத் தாக் கப்ப டுகின்றனர்.

தாக்குபவர்களைக் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு தாக்கப்பட்டவர்களை மேலும் மேலும் காயப்படுத்தும் விதத்தில் அரசு செயற்படுகிறது.

அரசு இவ்வாறான செயற்பாடுகளை உடன்நிறுத்தி குற்றவாளிகளை சட்டத் தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசால் ஊடகவியலாளர்களைப் பாது காக்க முடியாதுவிட்டால் இந்த நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைக ளைத் தீர்க்க முடியாதுவிட்டால் ஆட்சி யைக் கலைத்துவிடவேண்டும் .

இன்று நாட்டில் ஏராளமானவர்கள் வெள்ளைவான்களில் கடத்திச் செல்லப்படு கின்றனர். இந்தக் கடத்தல்களுக்குக் கார ணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த இதுவரையிலும் அரசினால் முடியவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் இந் தக் கடத்தல்களுக்குப் பின்னணியாக இருப் பவர்களே அரசுத் தரப்பினரும் படை யினரும்தான். எனவே அவர்கள்தொடர் பான தகவல்கள், விவரங்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்றார் ஆவர்

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைவான் கடத்தல், கொலைகளுடன் பாதுகாப்பு அமைச்சிற்கு நேரடித் தொடர்பு

* ஆதாரமிருப்பதாக எதிரணி கொரடா சபையில் தெரிவிப்பு

கொழும்பு உட்பட வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்றுவரும் வெள்ளைவான் கடத்தல்கள், கொலைகள், தாக்குதல்களுடன் பாதுகாப்பு அமைச்சிற்கு நேரடித் தொடர்பிருப்பதாக தெரிவித்த ஐ.தே.கட்சி, இச்சம்பவங்களுடன் இராணுவத் தளபதி தலைமையில் இயங்கும் கும்பலொன்று தொடர்புபட்டிருப்பதற்கான சகல ஆதாரங்களும் தமக்கு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடியது. இதையடுத்து, வெள்ளை வான் கடத்தல்கள், அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான விசேட அறிக்கையொன்றை ஐ.தே.க. சார்பில் எதிர்க் கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா விடுத்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது; யுத்தத்தின் போர்வையில் நாட்டில் வன்முறைகளுடன் ஆட்சிசெய்வது இந்த அரசுதான். இதனை அனைத்து ஆதாரங்களுடன் எம்மால் நிரூபிக்க முடியும். நாடு முழுவதும் வெள்ளை வான்களில் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர்கள் கடத்தப்படுகின்றார்கள். கொலை செய்யப்படுகின்றார்கள். தாக்கப்படுகின்றார்கள். அரசுக்கெதிராகவும் இராணுவ செய்திகள் தொடர்பாகவும் எழுதும் ஊடகவியலாளர்கள் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் வைத்தே கடத்தப்படுகின்றார்கள். கொடூரமாக தாக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறான சம்பவங்களை தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில், இச்செயல்களுக்கு அரசாங்கமே ஒத்துழைப்பு வழங்கிவருகிறது. வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புபட்ட முன்னாள் விமானப்படை வீரரான நிசாந்த கஜநாயக்க என்பவரை எமது கட்சி உறுப்பினர் அடையாளம் காட்டியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். இதனால் வெள்ளைவான் கடத்தல், கொலைகள் குறைந்தன.

ஆனால், பாதுகாப்பு உயரதிகாரி ஒருவரின் தலையீட்டையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்போது மீண்டும் அதிகளவில் வெள்ளைவான் கடத்தல்கள் நடக்கத் தொடங்கிவிட்டன.

இன்று நாட்டில் இடம்பெற்றுவரும் வெள்ளைவான் கடத்தல்கள், கொலைகள், தாக்குதல்களுடன் பாதுகாப்பு அமைச்சு நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது. இராணுவத் தளபதியின் தலைமையில் இயங்கும் கும்பலொன்றே கடத்தல்கள், தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இச்சம்பவங்களுடன் பாதுகாப்பு அமைச்சிற்கும் இராணுவத் தளபதிக்கும் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.

அண்மையில் பதவியேற்றுள்ள புதிய பொலிஸ் மா அதிபர் தனக்கு வெள்ளைவானை தெரியாதென்கிறார். பொலிஸ் பேச்சாளர், ஊடகவியலாளர்கள் வெளிநாட்டு விசாக்களை பெறுவதற்காக தாமே ஆட்களை வைத்து தம்மைக் கடத்துவிப்பதாகவும் தாக்குவிப்பதாகவும் கூறுகிறார்.

வெள்ளை வானை தெரியாத, கடத்தல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாத இவ்வாறான அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பொலிஸ் ஆணைக்குழுவிற்கு இந்த பாராளுமன்றம் ஊடாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பாதுகாப்பு நிலைவரங்கள், இராணுவ ஆய்வுகளை எழுதும் ஊடகவியலாளர்கள் இலக்குவைத்து தாக்கப்படுகின்றார்கள். கடத்தப்படுகின்றார்கள். ஆனால், பொலிஸ் பேச்சாளர் வெளிநாட்டு விசாவுக்காக ஊடகவியலாளர்கள் நாடகமாடுவதாக கூறுகிறார்.

இவ்வாறு யாராவது ஊடகவியலாளர் வெளிநாட்டு விசாவுக்காக நாடகமாடினால் அவர்களை கைது செய்யுங்கள், சட்டத்தின் முன் நிறுத்துங்கள் நாம் எதுவும் கூறமாட்டோம்.

இந்த அரசு சிம்பாப்வே அரசை அடியொற்றிச் செல்கின்றது. யுத்த குற்றச்செயல்கள் மோசமாக நடைபெறும் நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

சார்க் மாநாட்டுக்காக 300 பில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது. குண்டு துளைக்காத வாகனங்களை வாங்கவென பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்க்கைச் செலவுடன் போராடிவரும் நிலையில் அரசாங்கம் வீண் செலவுகளைச் செய்துவருகின்றது.

பயங்கரவாதத்துக்கான முடிவு கிட்டிவிட்டது. நாம் சமாதானத்தை கொண்டு வருவோம். புலிகள் மக்களை படுகொலை செய்வதற்கு இடமளிக்க முடியாது. சட்டமும் ஒழுங்கும் மக்களையும் அரச சொத்துகளையும் பாதுகாப்பது அவசியமானது. எனவே, இந்த அவசரகால சட்ட நீடிப்புக்கு ஒத்துழைக்குமாறு கோருகின்றேன்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே எவ்வளவு காலம் சொல்லிட்டு இருக்கப்போறிங்கள் முதல் சமர்ப்பியுங்கோ :) அதில் சேர்க்கவேண்டியதை நாங்கள் சேர்க்கிறம் (உங்களின் பெயரையும் தான் )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.