Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேலை நிறுத்தத்தைத் தடுத்தால் அரசின் கதை இன்றோடு காலி! நாடாளுமன்றில் ஜே.வி.பி. எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய வேலைநிறுத்தப் போராட் டத்தைத் தடுத்து நிறுத்தவோ இடையூறு செய்யவோ அரசும், படைகளும் முயன் றால் இந்த அரசுக்கு இன்றைய நாள்தான் கடைசி நாள். இன்றோடு அரசைக் காலி செய்து வீட்டுக்கு அனுப்பி விடுவோம்''

இப்படி நேற்று நாடாளுமன்றத்தில் எச்சரித்தது ஜே.வி. பி.

தமது தொழிற்சங்கங்களின் பிரதான பங்களிப்புடன் இன்று நடக்கும் நாடுதழு விய பணிப் புறக்கணிப்புப் போராட்டத் தில் சகலரும் ஒன்று திரண்டு பங்கேற்கவேண் டும் என்றும் அந்தக் கட்சி அழைப்பு விடுத் திருக்கின்றது.

ஜே.வி.பியின் எம்பியும் இன்றைய வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்திருக்கும் ஜே.வி.பி. தொழில் சங்கத்தின் தலைவருமான லால்காந்தவே நேற்று நாடாளுமன்றத்தில் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

நாம் ஏற்பாடு செய்திருக்கும் வேலை நிறுத்தம் நீதியானது. தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப சம்பள அதிகரிப்பைக் கோரி இந்த வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்படவில்லை.

அப்படிப் பார்த்தால் 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு போதாது. மேலும் தேவைப்படும். ஆனால் நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொண்டு நீதியான முறையிலேயே நாம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

இந்தச் சம்பள அதிகரிப்புக் கோரிக்கையுடன் தொடர்புபட்ட கோரிக்கைகளை நாம் ஜனாதிபதியிடம் மே மாதம் 28ஆம் திகதி அனுப்பி வைத்தோம்.

இதற்கு ஜனாதிபதியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அரசின் கவனத்தை இது தொடர்பில் ஈர்ப்பதற்காக நாம் ஆர்பாட்டம் ஒன்றையும் நடத்தினோம். அதன் பிறகே வேலை நிறுத்தம் செய்யத் தீர்மானித்தோம்.

போராட்டத்தைத் தடுக்கச் சதி

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைப் பார்த்த அரசு மிகவும் பயந்துபோயுள்ளது. சதி நடவடிக்கை மூலம் போராட்டத்தைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

எந்தவித சதி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நாம் இதிலிருந்து பின்வாங்க மாட்டோம். தொழிற்சங்கங்களுடன் மோதுவதை ஜனாதிபதி நிறுத்த வேண்டும்.

அவ்வாறு மோதினால் அரசின் பயணத்திற்கு முற்றுப்பபுள்ளி வைக்கும் இறுதி நாளாக 10ஆம் திகதி அமைந்து விடும்.

எமக்கு ஏதும் நேர்ந்தால் எமக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் தொழில் சங்கங்களையும் இணைத்துக் கொண்டு அடுத்த நடவடிக்கை தொடர்பாக 11ஆம் திகதி தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்.

இந்த வேலை நிறுத்தத்தில் நாம் வெற்றி பெறுவோம். இதையாராலும் தடுக்க முடியாது என்றார்.(த07)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய வேலைநிறுத்தப் போராட் டத்தைத் தடுத்து நிறுத்தவோ இடையூறு செய்யவோ அரசும், படைகளும் முயன் றால் இந்த அரசுக்கு இன்றைய நாள்தான் கடைசி நாள். இன்றோடு அரசைக் காலி செய்து வீட்டுக்கு அனுப்பி விடுவோம்''

அப்படி போடு அரிவாளை :wub: நாங்கள் எதுவும் செய்யத்தேவையில்லை போல இருக்கு நீங்களே எல்லாத்தையும் முடிச்சிடுவிங்கள் தானே :lol: . எல்லாம் நல்லபடியாய் நடக்கவேணும் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாங்கம் சில தொழிற்சங்கங்களை மிரட்டி பணிய வைத்துள்ளது. பார்ப்பமே ஜே.வி. பி.

என்னத்தை கிழிக்கப் போறாங்க எண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்காவின் சகல வேலைகளும் நடைபெறுகின்ற, பேரூந்துப்போக்குவரத்து நடைபெறுகின்றது. ஜேவிபியின் வேலை நிறுத்தம் படுதோல்வி என அங்கிருந்துவரும் தகவல்கள் கிடைக்கின்றன,

ஸ்ரீ லங்காவின் சகல வேலைகளும் நடைபெறுகின்ற, பேரூந்துப்போக்குவரத்து நடைபெறுகின்றது. ஜேவிபியின் வேலை நிறுத்தம் படுதோல்வி என அங்கிருந்துவரும் தகவல்கள் கிடைக்கின்றன,

அரசு சார்பான தொழிற்சங்கங்கள் வேலையை புறக்கணிக்காது அதனால் ஒரு சில பஸ்கள் ஓடும். ஒரு சிலர் வேலைக்கு சென்றிருக்கலாம்.200 300 பஸ் ஓடும் இடத்தில் 40 .50 ஓடினால் அதன் முடிவை நீங்களே ....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசு சார்பான தொழிற்சங்கங்கள் வேலையை புறக்கணிக்காது அதனால் ஒரு சில பஸ்கள் ஓடும். ஒரு சிலர் வேலைக்கு சென்றிருக்கலாம்.200 300 பஸ் ஓடும் இடத்தில் 40 .50 ஓடினால் அதன் முடிவை நீங்களே ....................

இந்த போராட்டாத்தால் எமக்கு எந்த நன்மையும் இல்லை ஜேபிவியை புலிகளுடன் அரசு தொடர்பு படுத்திய்தால் தான் பல சிங்களவர்கள் இந்தப்போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கவில்லை. போராட்டம் படுதோல்வி என சக்தி செய்திகள் கூட தெரிவிக்கின்றன. அரசாங்கத்துக்கும் இவர்கள் எதிரி ஜேவிபிக்கும் எதிரி. ஆகவே சக்தி செய்திகள் கொஞ்சமாவது நடுநிலையுடன் தான் செய்தி சொல்லும்.

இஞ்ச

சக்தி சொல்லிச்சுது பத்தி வைச்சுட்டுது எண்டு நில்லாமல்

எங்களுக்கு என்ன நன்மையோ அதை கவனிப்பிங்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.