Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலையற்ற வாழ்வுடன்...[பாகம்-2]

Featured Replies

நிலையற்ற வாழ்வுடன்.....

[ கதை கருத்துக்களம் அரட்டை பகுதிக்கு அல்ல...! ]

பாகம்-1

தொடர்கதை ::...

நெற்றியில் சுரக்கும் வியர்வைத்துளிகளை தனது சேலைத்தலைப்பினால் துடைத்து விட்டுக்கொண்டு வீதியின் ஓரமாக இருந்த அம் மரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டாள் கமலம். தனது சேலை முடிப்பில் இருந்து கொஞ்சப்பணத்தினை எடுத்து எண்ணும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவளின் கண்களில் அவ்வளியாக ரோந்தில் வந்த இராணுவத்தினர் கண்களில் பட்டனர். தனது எண்ணும் பணியினை இடையிலையே கைவிட்டவளாக நிமிர்ந்து அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சற்று நிமிடங்களில் அருகில் வந்தவர்கள் "ஏ அம்மா இங்க இருக்கக் கூடாது எழும்பி அங்கால போய் இருங்க." என்ற கட்டளையுடன் விலகிச்சென்றனர். அவசர அவசரமாகவே அவ்விடத்தில் இருந்து விலகி சற்று தூரத்தில் அமைந்திருந்த பேரூந்து தரிப்பு நிலையத்தில் மீண்டும் உட்கார்ந்தவள் தனது காசினை எண்ணும் பணியினை தொடர்ந்தாள்.

அருகில் பேரூந்துக்காக காத்திருந்தவர்கள் தன்னை ஏதோ பிராணியைப்போல் நோட்டமிடுவதை கண்டுகொண்டவள் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை என்றே சொல்லலாம். "ஐயோ இருநூறு ரூபா தானே சேர்ந்திருக்கு. மிகுதிக்கு என்ன பண்ணுறது...? பொழுதும் இருட்டிட்டுதே... இனி எங்க போறது....?" அவளுடைய வார்த்தைகளில் ஏக்கம்,ஏமாற்றம் இரண்டும் கலந்தே இருந்தது. இருந்தாலும் தன் மகனை எப்படியாவது காப்பாற்றி...

தொடரும்....

.:. எழுதுவது இதயநிலா ....

Edited by ithayanila

  • தொடங்கியவர்

நிலையற்ற வாழ்வுடன்.....

பாகம்-2

தொடர்கதை ::...

விடவேண்டும் என்ற உள்ளுணர்வு அவள் கால்களுக்கு மீண்டும் தெம்பினை ஊட்டின. அவ்விடத்தினை விட்டு எழுந்தவள் அருகில் இருந்த கடையில் இருந்தே தனது முயற்சியைத் தொடர்ந்தாள். "ஐயா தர்மம் பண்ணுங்கையா....ஐயா..." எனறவாறே கடை வாயின் தூராமாக ஓரத்தில் ஒதுங்கி நிற்கும் கமலத்திற்கு ஒரு இரண்டு ரூபாவினை தனது கையாளிடம் கொடுத்து அனுப்பி விடுகிறார் முதலாளி. "நன்றி ஐயா..." என்றவாறே நன்றி கலந்த முகத்துடன் அப்பகுதியினை விட்டு அடுத்தமைந்த ஒரு வீட்டின் கேட் ஓரமாக வந்தடைந்தவளை அவ்வீட்டின் நாய் வரவேற்கும் என்பதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வீட்டு முற்றத்தில் நின்று குரைக்கும் நாயின் ஆவேச வார்த்தைகள் கூட அவளை ஒன்றும் செய்யவில்லை என்றே கூறலாம். இப்படியான சந்தர்ப்பங்களில் அவள் தளரும்போதெல்லாம் தனது காலினை இளக்கப்போகும் அவளது குழந்தை வினோத்தே அவளது மனத்தினை தூக்கி நிறுத்திக் கொண்டான்.

நீண்ட நேர நாயின் வரவேற்பு ஓசையின் பின் வீட்டிலிருந்து விரைவாக வெளிவருகிறார் வீட்டுக்கார அம்மா."என்ன உங்கட தொந்தரவு தாங்க முடியாது.....நில் வாரன்." தன் பங்கிற்கு எதையோ எடுப்பதற்காக உள்ளே சென்று திரும்புகிறார் அந்த அம்மா. கையில் இருந்த ஒரு பத்து ரூபா நோட்டினை கமலத்தின் கையளில் திணித்தவரின் கண்களில் கமலத்தின் கண்களில் இருந்து வளிந்த கண்ணீர்த் துளிகளின் சில தனது கைகளை நனைத்திடக் கண்டார். இதுவரையில் எத்தனையோ இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களை அவரும் கண்டிருக்கிறார். ஆனால் யாரும் இவ்வளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு அழுபவர்களாக இருந்ததில்லை.....

தொடரும்....

.:. எழுதுவது இதயநிலா....

Edited by ithayanila

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.