Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமாதான பேச்சுக்கு புலிகள் தயாரென பா.நடேசன் தெவித்துள்ளதாக சிபி இணையத்தளம் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான பேச்சுக்கு புலிகள் தயாரென பா.நடேசன் தெவித்துள்ளதாக சிபி இணையத்தளம் செய்தி

சிபி இணையத்தளம் 7ஃ11ஃ2008 3:32:17 Pஆ - யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தி சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியிலிருந்து ஒளிபரப்பாகும் "ரைம்ஸ் நெளவ்" தொலைக்காட்சிக்கு தொலைபேசிவாயிலாக வழங்கிய நேர்காணலின் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளமான சிபி செய்தி வெளியிட்டுள்ளது.இந்த நேர்காணலின் போது அவர் மேலும் தெர்வித்துள்ளதாவது விடுதலை புலிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரானவர்கள் அல்ல என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்திய அரசும் அதன் தீர்மானிக்கும் சக்திகளும் எமது மக்களின் நியாயமான அபிலாசைகளையும் சுதந்திர போராட்டத்தையும் அங்கீகரிக்கும் என்று நாம் திடமாக நம்புகிறோம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி அண்மையில் தனது தந்தையின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைத செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை சென்று நேரில் சந்தித்தது தொடர்பில் இது முற்று முழுதாக மனிதாபிமான அடிப்படையில் இடம்பெற்ற பயணம். என தெரிவித்துள்ள அதேவேளை நளினியின் விடுதலைஇ இந்தியாவின் மாற்றத்தை காட்டும் அல்லது புதிய புறச்சூழ்நிலைக்கான ஆரம்பமாக அமையும் என்று தாம் உணர்வதாக அவர் கூறியுள்ளதாக சிபி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நு-

நன்றி:-வீரகேசரி

வடக்கில் பலமான படைநர்வை இலங்கை இராணுவம் முன்னெடுத்திருக்கின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்தத்திற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் தாம் தயாராகவிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இந்தியாவின் 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சிக்கு தொலைபேசி வழியாக வழங்கிய செவ்வியிலேயே விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 6 வருடங்களாக அமுலிலிருந்த போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசாங்கமே இந்த வருட ஆரம்பத்தில் ஒருதலைப்பட்சமாக வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் ஒரு போதும் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரானவர்களல்ல எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், மீண்டும் போர்நிறுத்த உடன்படிக்கைக்குச் செல்வதற்கு தாம் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

"போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசாங்கமே ஒருதலைப்பட்சமாக வெளியேறியதுடன், தமிழர்கள் மீதும், தமிழர் தாயகத்தின்மீதும் போரினைப் பிரகடனப்படுத்தியுள்ளது" என்றும் நடேசன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள நளினியை விடுதலை செய்யுமாறு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறித்து அந்த ஊடகம் கருத்துக் கேட்டதற்கு, தமிழ் மக்களின் சட்டரீதியான கோரிக்கைகளுக்கும், அவர்களின் சுதந்திரப் போராட்டத்திற்கும் இந்தியாவிடமிருந்து அங்கீகாரம் கிடைக்கும் எனவும், அதன்மூலம் முழுமையான மாற்றம் ஏற்படும் எனவும் விடுதலைப் புலிகள் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நளினி விடுதலை செய்யப்படுவாரானால் அது முழுமையான மாற்றத்தின் முதற்படியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.