Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலம்போல வெளித்தோன்றும் மகிந்த ஆட்சியின் பலவீனங்கள்

Featured Replies

சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி அதிகாரத்திற்கு இப்போது சிறிலங்கா பாராளுமன்றம் ஒரு பலவீனமான விடயமாகவே இருக்கின்றது. பாராளுமன்றத்தில் அவர் எவ்வளவு தூரம் தன்வசம் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு 'பெரும்பான்மை"யைப் பெற்றுக்கொண்டு விட்டபோதிலும் இது ஒரு நம்பிக்கையற்ற பலவீனமான பெரும்பான்மை என்பது அவருக்கு நன்கு தெரியும்.

ஏனெனில் அவரது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் சாம, பேத, தான, தண்டம் என்பனவற்றைப் பிரயோகித்தே இவர்களைத் தம்வசம் இழுத்துக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.

மகிந்தவின் வசம் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றில் அவரது மிரட்டலுக்குப் பணிந்தோ அல்லது பணத்திற்கோ பதவிக்கோ பணிந்தோ அவருடன் இணைந்துள்ளனர். இதனால் அவர்களை தம்வசம் வைத்திருப்பதற்காக மாபெரும் அமைச்சரவையொன்றையும் அவர் அமைக்க வேண்டி ஏற்பட்டது.

இந்த அமைச்சரவையானது மகிந்தவுக்குப் பெரும் சுமையானதாக மாறிவிட்டது. அமைச்சுக்களின் செலவீட்டிற்கான நிதியானது பெரும்தொகையாக, இன்று மகிந்த அரசாங்கம் எதிர்கொள்கின்ற நிதி நெருக்கடிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இது இருக்கின்றது.

இந்நிலையில் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றி எண்ணியே பார்க்க முடியாத நிலையில் மகிந்த உள்ளார். அதேவேளை மேலும் மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சிகளிலிருந்து பிரித்தெடுக்கும் கைங்கரியத்தில் அவர் ஈடுபட்டிருப்பதாகவே கருதமுடியும்.

உதாரணமாக மாகாணசபைத் தேர்தலுக்கு முன்மூன்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிரித்தெடுத்து ஐ.தே.க.விற்கு தேர்தலில் ஓர் பின்னடைவை ஏற்படுத்த மகிந்த திட்டமிட்டுள்ளார். இது மேலும் அவருக்குப் பலம் சோர்க்கும் எனக்கருதிவிட முடியாது. நீண்ட நோக்கில் இது மேலும் பலவீனப்படவே வழி வகுக்கின்றது.

அதாவது, ஆட்சியாளர்கள் தற்போது தம்மிடம் உள்ள அதிகாரங்களைப் பலப்படுத்தி தக்கவைத்துக் கொள்ளும் வகையிலான காய்நகர்த்தல்களை மட்டுமல்ல, அடுத்த தேர்தல்களை இலக்குவைத்தும் அவற்றைச் செய்வார். இவ்வகையில் பார்த்தால் இந்தப் பிளவு வேலைகள் மகிந்தவிற்குப் பலவீனமானதாகவே மாற வாய்ப்புகள் உண்டு.

இன்று சிறிலங்காவின் இந்தப் பெரிய அமைச்சரவை சாதகமான விளைவுகள் எதனையும் ஏற்படுத்தியதாகத் தெரியாத நிலையில் இவ்வாறானவர்களின் கட்சித் தாவல்களுக்கு விலையாக அமைச்சரவையை மேலும் பெருப்பித்தால் அது மகிந்தவிற்கு மேலும் பலவீனத்தையே ஏற்படுத்தும். அது மட்டுமல்லாது இவ்வாறு இணைந்து கொண்டிருப்பவர்களும் இணைய முன்வருபவர்களும் மகிந்தவுக்கு என்றுமே நம்பிக்கைக்குரியவர்களாகவும

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது, ஆட்சியாளர்கள் தற்போது தம்மிடம் உள்ள அதிகாரங்களைப் பலப்படுத்தி தக்கவைத்துக் கொள்ளும் வகையிலான காய்நகர்த்தல்களை மட்டுமல்ல, அடுத்த தேர்தல்களை இலக்குவைத்தும் அவற்றைச் செய்வார். இவ்வகையில் பார்த்தால் இந்தப் பிளவு வேலைகள் மகிந்தவிற்குப் பலவீனமானதாகவே மாற வாய்ப்புகள் உண்டு.

இல்லவே இல்லை. மகிந்தவின் பிரதான எதிர்கட்சிகளான ஐ.தே.க, ஜே.வி.பி என்பன மகிந்தவால் மிக துல்லியமாக உடைக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க மேலும் நிச்சயமாக உடையும் கோழி ரனில் கட்சி தலைவராக இருக்கும் வரை. தெற்கில் மகிந்த தான் தற்பொழுது ராசா. இது தொடர்ந்து நீடிக்கும். தெற்கு மக்களுக்கு மகிந்த தவிர வேறொரு தெரிவும் தற்போதைக்கு இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.