Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்களின்றிச் செல்லும் உளவு விமானம் இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களின்றிச் செல்லும் உளவு விமானம் இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு

Wednesday, 16 July 2008

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை உளவு பார்ப்பதற்காக யு.ஏ.வி. எனப்படும் ஆட்களின்றிச் செல்லக்கூடிய கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறிலங்கா விமானப்படை இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. கடந்த அக்டோபர் மாதம் அநுராதபுரம் விமானப் படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்ட விமானத்துக்குப் பதிலாகவே இது கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ள உளவு விமானம் வடபகுதி யுத்த முனையில் புலிகளின் நடமாட்டம் மற்றும் படையினருக்கு எதிராக அவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் என்பவற்றை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னணிக் காவல் நிலைகள் அமைந்திருக்கும் பகுதிகளிலேயே இதனுடைய கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னிப் பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக படையினர் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளைப் பொறுத்த வரையில் உளவு விமானத்தின் வரவு மிகவும் முக்கியமானது என படை வட்டாரங்கள் தெரிவித்தன. யுத்த முனையில் விமானப் படை இரண்டு விதமான பணிகளை மேற்கொண்டுவருகின்றது. ஒன்று – விடுதலைப் புலிகளுடைய இலக்குகளை இனங்கண்டு அவற்றைத் தாக்கி அழிப்பது. இரண்டாவது - தரையில் நடவடிக்கைகளை மேற்கொண்டள்ள படையினரக்கு உதவும் வகையிலான தாக்குதல்களை நடத்துவது. இந்த இரண்டு விடயங்களிலும் குறிப்பிட்ட உளவு விமானத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருப்பதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆட்களின்றிச் செல்லக்கூடிய இந்த உளவு விமானங்கள் 1996 ஆம் ஆண்டுப் பகுதியிலேயே முதல் முறையாக சிறிலங்கா விமானப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

இவ்வாறான விமானங்களில் பல விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன. அல்லது தொலை இயக்கிகளைப் பயன்படுத்தி தமது பகுதிகளுக்குள் அவற்றை அவர்கள் இறக்கியிருக்கின்றார்கள். இவை அனைத்தையும்விட அநுராதபுர விமானத்தளத் தாக்குதலின் போதுதான் பல உளவு விமானங்கள் அழிக்கப்பட்டன.

http://www.ajeevan.ch/

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசாங்கம் இஸ்ரேலிடமிருந்து புதிய ரக ஆளில்லா வேவு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளது. புதிய தொழிநுட்பங்களுடன் தாயாரிக்கப்பட்ட இவ் ஆளில்லா வேவு விமானம் இரவு பகல் என சமநேரத்தில் துல்லியமாக இலக்குகளை இனங்காணக்கூடியது. கொள்வனவு செய்யப்பட்ட வேவு விமானம் தற்பொழுது வடபோர் முனையில் சிறீலங்கா வான்படையினரால் பறப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கிளாலி, முகமாலை, நாகர்கோவில் ஆகிய முன்னரங்க நிலைகளில் இரவு பகலாக வேவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. நீண்ட நேரம் பறப்பில் ஈடுபடும் திறணைக் கொண்ட இந்த வேவு விமானம் அதிகாலை 3 மணி வரை பறப்பில் ஈடுபடுகின்றது.

வடபோர் முனையில் விடுதலைப் புலிகளின் ஆளணி மற்றும் தளபாட முன்னகர்வுகளைக் கண்காணிகும் நோக்கியேலேயே இந்த வேவு விமானம் பயன்பாட்டில் உள்ளதாகச் சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.

http://www.pathivu.com/?p=2111

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.