Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை மைதானத்தில் நடக்கும் பகல்-இரவு ஆட்டங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மைதானத்தில் நடக்கும் பகல்-இரவு ஆட்டங்கள்-பைரவி-

இந்தியா - சீன மறைமுகப் போரின் மைதானமாக மாறியுள்ள இலங்கை தனது அத்தனை தேசிய சொத்துக்களையும் இரண்டு நாடுகளிடமும் அடகுவைத்துவிட்டு, அதற்கு வட்டி கேட்பதுபோல தான் போட்டு வைத்துள்ள இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆயுதங்களை கேட்டுப்பெற்றுக்கொள்வதில் முனைப்பாக உள்ளது.

இந்த இரு பொருளாதார புலிகளின் சண்டைக்கு சாமரம் வீசுவதன் மூலம் இலங்கையில் புலிகளை நசுக்கி ஒழிப்பதற்குக காய்களை நகர்த்தலாம் என்ற பெரும் நம்பிக்கையுடன் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அப்படி என்னதான் குடுமிப்பிடி சண்டை என்று சற்று ஆழமாக நோக்கினால் அது பல படிநிலைகளில் அனல் பறக்க நடைபெற்று வருவதை காணலாம்.

கடற்படை ஆதிக்கம், அணு ஆயுதப்போட்டி, பிரபஞ்ச படை மேம்பாட்டுப் போட்டி, அயல்நாடுகளை அணைத்துக்கொள்வதில் போட்டி, அதற்கான எல்லை இழுபறி, பொருளாதார வளங்களை கையகப்படுத்துவதில் போட்டி போன்றவை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்; ~தொடர்ச்சியான பகல் - இரவு சண்டை காட்சிகளாக| நடைபெற்று வருகின்றன.

இவற்றில் இலங்கையை மையமாகக்கொண்டு நடைபெறும் பாரிய படைத்துறை பிரச்சினை என்றால் அது கடலாதிக்கம் என்று கூறலாம்.

இலங்கையில் சீனாவின் அண்மைக்கால அதிரடி பிரசன்னங்களாக கடந்த வருடம் கைச்சாத்திடப்பட்ட 36.7 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளவாட ஒப்பந்தம், நுரைச்சோலை அனல் மின்நிலையத்திட்ட உதவி, மன்னார் எண்ணெய்வள ஆராய்ச்சிக்கான அனுமதி, கொழும்பில் கலாச்சார மண்டப நிர்மாண உதவி, குடாநாட்டுக்கு மின் வழங்க காங்கேசன்துறைக்கு வழங்கிய நான்கு மின் பிறப்பாக்கிகள் ஆகியவை காணப்படுகின்ற போதும் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம், சீனா மேற்கொள்ளும் ஏனைய திட்டங்களின் நோக்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ள ஒன்று.

ship1il8.jpg

சீனா, தனது தேவைக்கான பெரும்பகுதி எண்ணெய் வளத்தை இந்து சமூத்திரப் பிராந்தியத்தினூடாகவே பெற்றுக்கொள்கிறது. அதற்காக தனது கப்பல்களின் தரிப்பிடங்களாக ஆங்காங்கே சில நாடுகளின் துறைமுகங்களைத்தான் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் தனது உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் பாகி;ஸ்தானுடனான தனது உறவைப்பலப்படுத்தி அந்நாட்டு துறைமுகத்தை பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்களை தவிர்த்துள்ள சீனா, அடுத்து இலங்கையை தனது வலைக்குள் வீழ்த்தியிருக்கிறது. அதற்காக மேற்கொண்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு சீனா, சுமார் ஒரு பில்லியன் டொலர்களை அள்ளி வீசியிருக்கிறது.

தனது பிராந்தியத்தில் எவர் அடிபட்டாலும் பரவாயில்லை. தனக்கு ஆயுதம் தரக்கூடிய எந்த நாட்டுடனும் சோடி சேர்வது என்ற நோக்கத்துடன் உள்ள இலங்கை, இப்படியெல்லாம் கூட்டுச்சேர்வது தனக்கு எவ்வளவு ஆபத்து என்று கொஞ்சமும் சிந்திக்கவில்லையே என்பது இந்தியாவின் காலாவதியான கவலை.

ஆனால், இலங்கை துறைமுகத்தினுள் சீனா ஊடுருவும் இந்த இரகசிய இராஜதந்திரப் போரால் இந்தியா ஏன் சீறுகிறது? அப்படி என்ன சீன - இந்திய கடல் பிரச்சினை என்று பார்த்தால் எல்லாம் இந்த கடற்படை வலுவை முன்வைத்துத்தான்.

உலக வளர்ச்சியில் உயர்ந்த ஸ்தானத்துக்கு போய்விட்ட இந்த இரு நாடுகளினதும் கடற்படைகள், தத்தமது நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் தமது விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகின்றபோதும் சீனா எப்போதுமே அதிரடியாக - சத்தம் சந்தடியின்றி - தனது படைகளை பல பரிமாணங்களில் பட்டை தீட்டிக்கொள்வதில் இந்தியாவை விட பல படிகள் மேல் என்றே கூறலாம். இந்த பல பரிமாண வளர்ச்சி இந்தியாவுக்கு பாரிய சவால் என்பது உண்மை.

இந்த சவாலை உடனடியாக சமாளிக்க முடியாத இந்தியாவின் இயலாமையின் வெளிப்பாடும் -

அப்படிப்பட்ட சீனா அயல்நாடான இலங்கை மற்றும் இதர நாடுகளுக்குள் வந்து நின்றுகொண்டு தம்மிடம் இருக்கும் கொஞ்ச-நெஞ்ச படைவலுக்களையும் மோப்பமிடுகிறது என்ற இந்தியாவின் குடைச்சலும் -

சீனாவுக்கு இடம்கொடுத்த அயல்நாடுகளின் மீதும் சினங்கொள்ள வைத்துள்ளது.

இந்திய படைத்துறையைப் பொறுத்தவரை அதனிடம் நிலத்திலிருந்து ஏவக்கூடிய அணு ஆயுதங்கள் உள்ளன.

'அக்னி', 'ப்ருதிவி' என கடந்த காலங்களில் இந்தியா இவை தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு அவற்றின் உருவாக்கத்தில் வெற்றிகண்டிருக்கிறது.

அதேபோன்று, வான்படையை பார்க்கப்போனால் 'மிராஜ்' எனப்படும் போர் விமானங்கள் இந்தியாவிடம் வளமான வான்கலங்களாக உள்ளன.

ஆனால், இந்தியாவின் கடற்படை வலு என்பது பேச்சுக்கு கடலில் ஓடித்திரியும் பெரிய, பெரிய கப்பல்களாக காணப்படுகிறதே தவிர, அவை சீனாவின் அதிநவீன கடற்படை வலுவுக்கு முன்னால் கால்தூசு என்பதுதான் ஏற்றுக்கொண்டேயாகவேண்டிய உண்மை.

ship2kp6.jpg

அதுவும், சீனா தற்போது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவக்கூடிய தளங்கள் கொண்ட மிகப்பெரிய கடற்படை தளம் ஒன்றை தெற்கு சீனக்கடலில் உள்ள ஹெய்னின் என்ற தீவில் நிர்மணித்து வருவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.