Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் மாவட்டத்தில் 3 முக்கிய வைத்தியசாலைகள் இடம்பெயர்ந்துள்ளன!

Featured Replies

மன்னார் மாவட்டத்தில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மூன்று முக்கிய வைத்தியசாலைகள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன் வைத்தியசாலையில் சேர்ந்து இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தின் அடம்பன் வைத்தியசாலை முதலில் இடம்பெயரந்;து பள்ளமடு வைத்தியசாலையுடன் இயங்கி வந்தது. பின்னர் பள்ளமடு வைத்தியசாலையும் அடம்பன் வைத்தியசாலையுடன் இடம்பெயர்ந்து வெள்ளாங்குளம் வைத்தியசாலையில் சேர்ந்து இயங்கி வந்தது. வெள்ளாங்குளம் பகுதிகளிலும் எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றதனால், இந்த மூன்று வைத்தியசாலைகளும் சேர்ந்து இடம்பெயர்ந்து தற்போது கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் வைத்தியசாலையில் இயங்கி வருவதாக அதிகாக்ரிகள் தெரிவித்துள்ளனர். மன்னார் மடு பிரதேசத்தில் இருந்தும் மாந்தை மேற்கு பிரதேசத்திலிருந்தும் மக்கள் தற்போது முழுமையாக வெளியேறி கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு தேடி தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் இயங்கும் வைத்தியசாலைகளுடன் இடம்பெயர்ந்த வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள், பணியாளர்களும் சேர்ந்து இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் - பூனகரி ஏ32 வீதியில் முன்னேறியுள்ள இராணுவத்தினர் பள்ளமடு, விடத்தல்தீவு, இலுப்பைக்கடவை ஆகிய இடங்களில் நிலைகொண்டுள்ள படையினர் வடக்கு நோக்கி எறிகணை தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த எறிகணைகள் மக்கள் அடர்த்தியாகக் குடியிருக்கும் பகுதிகளில் வீழ்ந்து வெடிப்பதனால், அந்தப் பகுதிகளில் மக்கள் பெரும் அச்சத்தி;ற்கு உள்ளாகி பாதுகாப்பு தேடி தொடர்ந்தும் வடக்கு நோக்கியும், வடகிழக்கு நோக்கியும் இடம்பெயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான எறிகணை தாக்குதல்கள் காரணமாக ஞாயிறன்று தேவன்பிட்டி பகுதியில் வீழ்ந்து வெடித்த எறிகணையில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் இருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் ஏ32 வீதியில் உள்ள முழங்காவில் பிரதேசத்திலும் எறிகணை தாக்குதல் அச்சம் காரணமாக மக்கள் இடம்பெயரத் தொடங்கியுள்ளதாகவும், இதனையடுத்து, முழங்காவில் வைத்தியசாலையின் உபகரணங்கள், பொருட்கள், தளபாடங்கள் என்பவற்றைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கைள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

-வீரகேசரி

http://www.tamilseythi.com/srilanka/mannar...2008-07-29.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.