Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழா ஒரு பிடி உணவு வழங்கு..

Featured Replies

புலத்தில் வாழும் தமிழா ஒரு பிடி உணவு வழங்கு

களத்தில் உள்ள நம் உறவுகளுக்கு…

தாயகத்தில் எமது உறவுகள் உணவின்றி மாற்ற உடையின்றி மரங்களின் கீழும்

காடுகளிலும், மழை, வெயில் மத்தியில் அகதி வாழ்வு வாழ்கின்றனர். எமது மக்களுக்கான

உதவிகளை நாம் தான் செய்ய வேண்டும். புகைப்படங்களில் கூட அவர்களின் நிலையை

பார்க்க முடியவில்லை நேரில் அனுபவித்தல். என்பது எவ்வளவு கொடுமை? நினைத்துக்

கூடப் பார்க்க முடியவில்லை. போராட்ட சுமைகளை தொடர்ந்து என்நேரமும் தாங்குபவர்களும்

அவர்கள்தான்.

10 இலட்சத்திற்கு அதிகமான உறவுகள் புலத்தில் வாழும் போது அவர்கள் ஏன் நிர்க்கதியான

நிலையில் தவிக்க வேண்டும். சிங்கள் அரசின் தயவை எதிர்பார்த்து சேவை செய்யும் அரச

அரச சார்பற்ற நிறுவனங்களிடம் அவர்கள் கை ஏந்த வேண்டிய தேவை இல்லை.எமக்கென்று

உள்ள“த.பு.கழகம்” “செடோட்” போன்ற அமைப்புக்கள் ஊடாக எங்கள் உறவுகளுக்கு

நாங்கள் உதவ முடியுமே!. நாம் எதற்கு சிங்களவனிடம் உதவி கேட்க வேண்டும். ஒரு சிங்கள அமைச்சர்(?)

சொல்கிறான் வன்னியில் தமிழர்கள் நின்மதியாக வாழ்கிறார்களாம்.இவனிடம் எதற்கு நாம் உதவி

கேட்க வேண்டும்? கேட்டால் கொடுப்பவனா இவன்?

ஆனால் நாங்கள் இங்கு புலத்தில் புலிகள் ஏன் அடிக்கவில்லை. அவர்கள் அடிக்காமல் விட்டது பிழை

என்பது போன்ற விவாதங்கள் செய்து கொண்டு இருப்பது வேறு நாட்டார் எமது பிரச்சினைகளை

நோக்குவது போல் உள்ளது.அதாவது எமது மக்கள் எமது இரத்த உறவுகள் என்ற நினைவு இன்று

பலருக்கு இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விடையம். நம் அனைவருக்கும் ஒரு இடப்பெயர்வு

அனுபவம் இருக்கும் நாம் அந்த கணப்பொழுதினை ஒரு கணம் நினைப்போமானால் நிச்சயமாக உதவி

செய்ய முடியும்.

எம் தேசத்தில் ஒரு குழந்தை தானும் பசியல் இறக்கக் கூடாது அவ்வாறு நிகழுமாக இருப்பின் அதனுடைய

பெறுப்பு சிங்களனோ அல்லது சிங்கள அரசோ கிடையாது அதனுடைய பொறுப்பு புலத்தில் வாழும்

ஒவ்வொரு தமிழனும்தான். மக்கள் மீதான விமானத் தாக்குதல் செல் தாக்குதல் போன்ற காடைத்தனமான

செயல்களுக்கு சிறீலங்கா அரசு(?) பொறுப்பு.இடப்பெயர்வுக்கும் அவர்கள்மீது குற்றம் சுமத்தலாம்

ஆனால் அங்கு ஒரு உயிர்தனிலும் பசியால் போகுமாக இருந்தால் அதற்க்கு நாம் தான் பொறுப்பு

என்பதை மறந்துவிடலாகாது. சிங்களவன் நம் எதிரி.அவனுடைய நோக்கம் தமழர்களை அழிப்பதுதான்.

நாம் அவனை எதிர்த்துப் போராடுகிறோம். எனவே அவனுடைய ஒவ்வெரு நகர்வுகளையும் நாம்

முறியடிக்க வேண்டும்.

நாம் இங்கு சில முக்கியமற்ற நிகழ்வுகளுக்கு முக்கியம் கொடுத்து பல செலவுகளை செய்கிறோம்.

இவ்விடத்தில் ஒன்றை நாம் கவனமாக விளங்கிக் கொள்ள வேண்டும் அதாவது உதாரணமாக நாம்

இங்கு சாப்பிடாமல் அங்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறவில்லை சாப்பிட்ட பின்பு சாப்பிடும்

“பீடாவை-கோலாவை” தவிர்க்க முடியும் என்றுதான் சொல்கிறேன்.கேயில்களுக்கு திருவிழா

எடுக்கிறோம் தெருவில் தேங்காய் உடைக்கிறோம் எம் இரத்தங்கள் உணவிற்காக வாடுகையில்

இங்கே கடவுளின் பெயராலும் கொண்டாட்டங்கள் என்ற பெயராலும் பல கிலோ,பல வகை

உணவு வகைளை கொட்டிச் சிந்தி வீணடிக்கிறோம். நம்மை பெற்ற தாயும் நாம் பிறந்த பொன்னாடும்

அழிவின்- துயரின் விழும்பில் இருக்கும் போது நாங்கள் ஆடை அணிகள் ஆடம்பரங்கள் என்று

பகட்டுக்காட்டி ஆண்டவனை பூசிப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை நம்மால் முடிந்த

உதவியை எம் உறவுகளுக்கு செய்யவேண்டும்.மற்றவர்களிடம் நாம் கையேந்த வேண்டிய எமக்கு

தேவை இல்லை.நாம் கஸ்ரப்பட்டு உழைக்கும் உழைப்பில் ஒரு தெகையில் எம் உறவுகள் ஒரு நேரம்

பசி தீருமானல் அப் பணத்திற்கான பெறுமதி நிச்சயமாக கணக்கிட முடியாது.

இங்கு பல உறவுகள் சொல்வார்கள் எங்களுக்கு உதவி செய்ய விருப்பம் என்று ஆனால் யாரிடம்

கொடுப்பது எங்கு கொடுப்பது என்று தெரியாதென்று.தற்போது சில நாடுகளில் நிலமைகள் சற்று

இறுக்கம் ஆனால் நம் உறவுகளுக்கு உதவுவதற்கு எங்கும் பிரச்சினை இல்லை. நாம் உதவி

செய்வதற்க்கு பல வழிகள் உண்டு இங்கு உள்ள “த.பு.கழகம்” உள்ளது அதுமுடியாவிட்டால்

உங்களுக்கு அறிமுகமான அமைப்புக்கள் ஊடாக அல்லது .தாயகத்தில் உள்ள வேறு உறவுகள்

ஊடாக என பல வழிகளில் செய்ய முடியும்.

எனவே தயவுசெய்து அனைத்து உறவுகளும் எமது தாயக உறவுகளுக்கு தொடர்ந்தும் எம்மாலான

உதவிகளை செய்வோம்.

யாழவன்.

“செடோட்” தொடர்புகளுக்கு….

E-mail- sedot.uthavi@gmail.com

Tele phone-0041 762944857

Edited by jaalavan

வணக்கம் யாழவன்

இணைப்புக்கு நன்றி செடோட் மின்னஞ்சல் முகவரிக்கு மடலனுப்பியுள்ளேன்.

  • தொடங்கியவர்

வணக்கம் யாழவன்

இணைப்புக்கு நன்றி செடோட் மின்னஞ்சல் முகவரிக்கு மடலனுப்பியுள்ளேன்.

வணக்கம் 'ATOZ'.

என்ன மடல் அனுப்பியுள்ளீர்கள்??

நன்றி வணக்கம்.

Edited by jaalavan

வணக்கம் 'ATOZ'.

என்ன மடல் அனுப்பியுள்ளீர்கள்?

வணக்கம் யாழவன்

எனது பங்களிப்பை செய்ய விபரம் கேட்டுள்ளேன்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.