Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு வன்னியை நோக்கிய பார்வை அதிகரித்துள்ளது.( வாராந்த ஆய்வு)

Featured Replies

தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு வன்னியை நோக்கிய பார்வை அதிகரித்துள்ளது.( வாராந்த ஆய்வு)

லங்கையில் வசிக்கும் தமிழர்களும் சர்வதேச தமிழர்களும் ஏன் சர்வதேசமும் இன்று வன்னிப் பெருநிலப் பரப்பின் மீதே தமது பார்வையைச் செலுத்துகின்றன. இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் நடைபெற்று வருகின்றபோதிலும் இந்த யுத்தமானது தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும்.

இதனைவிடச் சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்கான யுத்தமாகும். எனவே இந்த யுத்தத்தைத் தமிழர்களும் சர்வதேசமும் விழிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன.

வன்னியில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ள போதும் அதனையும் பொருட்படுத்தாது அங்கு இலங்கை அரசாங்கதினால் வலிந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மன்னாரில் இருந்து முன்னேறிய படையினர் இப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பிரதான தளமான கிளிநொச்சியை நோக்கி முன்னேறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இலங்கையைப் பொறுத்த வரையில் தென்னிலங்கையின் பெரும்பாலான சிங்களவர்களும் அரசாங்கத்திற்கும் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அல்லது தமது பெருமையை சொல்லிக் கொள்வதற்கான காரணங்களாக அமைந்துள்ளன.

மறுபுறத்தில் தமிழர்கள் இந்த யுத்தத்தின் தாக்கங்களை நாள்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். நாள்தோறும் ஏராளமான தமிழர்கள் தென்பகுதியிலும் மலையகத்திலும் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் கைது செய்யப்படுகின்றனர்.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாளர்கள் அல்லது முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தின் வடமராட்சி மற்றும் தென்மராட்சி மற்றும் திருகோணமலையின் சில பகுதிகளில் இவ்வாறான நிகழ்வுகளை நாள்தோறும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இவற்றைத் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொள்கிறோம் என்ற தோரணையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகக் கருத வேண்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை அழித்து விட்டால் அதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடுருவல் தாக்குதல்களைத் தடுத்து விடலாம் என்பதே படைத்தரப்பின் கருதுகோளாக இருக்கிறது. ஆனால் இது விடுதலை வேட்கையை ஒருபோதும் அழித்து விடாது மேலும் மேலும் அந்த வேட்கையை உந்திவிடும் செயல்கள் என்பதை அன்றும் இன்றும் இலங்கை அரசாங்கமும் படைகளும் மறந்தே செயற்பட்டு வருகின்றன என்பதற்கான அம்சமாகவே எடுத்துக் கொள்ளலாம்.

வன்னியில் இடம்பெறுகின்ற தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தளவு பெரிதுபடுத்திச் சொன்னாலும் அதனைத் தமிழர்களின் 99 வீதமானோர் நம்பத் தயாரில்லை. ஏனெனில் சிங்களவர்களைக் காட்டிலும் ஈழப்போரின் ரணங்களை யதார்த்தங்களை உணர்வுகளைப் புரிந்தவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரங்களை நம்பத் தயாராக இல்லை.

இந்தநிலையில் அவர்களின் நம்பிக்கைக்குத் தெம்பைக் கொடுத்த நிகழ்வு கடந்த வாரம் வன்னியில் இடம்பெற்றது. வன்னேரிக்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதல் இலங்கையில் உள்ள தமிழர்கள் உட்பட சர்வதேச தமிழர்கள் மத்தியிலும் புதிய புத்துணர்வை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அதிலும் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தமது ஆதரவு நிலைப்பாட்டை இந்த எதிர்த் தாக்குதலின் பின்னர் உறுதிப்படுத்திக் கொண்டனர் எனப் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் கூறுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கிறோம் எனக் கூறிக்கொண்டு இலங்கை அரசாங்கங்கள் கடந்த 25 வருடங்களுக்கு மேலாகத் தமிழர்களைக் கொலை செய்யும் நடவடிக்கைகளையும் கைது செய்யும் நடவடிக்கைகளையும் காணாமல் போதல் செய்தல் நடவடிக்கைகளையுமே மேற்கொண்டு வந்தது. இதற்கும் மேலதிகமாக வடக்கு கிழக்கில் தமிழர்களின் பரம்பலை குறைக்கும் வகையில் சிங்களவர்களுக்கான குடியேற்றத் திட்டங்களையும் இலங்கை அரசாங்கங்கள் தீவிரமாக முன்னெடுத்து வந்துள்ளன.

எனவே தமிழர்கள் இலங்கையின் அரசாங்கங்களை நம்பாமல் தமிழீழ விடுதலைப் புலிகளை நம்புகின்றனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கொள்கையை கொண்டுள்ளவர்களும் அடங்குவர் என்பது யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே மாற்றுக் கொள்கைகளை கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் தமிழர்களை ஏமாற்றி வருகின்ற இலங்கை அரசாங்கங்களுக்குப் பதிலடியை கொடுக்கக் கூடிய அமைப்பு என்ற வகையில் மாற்றுக் கொள்கையை கொண்டவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளையே நம்புகின்றனர். இந்தநிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளே இன்று தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்கள் எனலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக இந்தக் கருத்து வலியுறுத்தப்படுவதாக யாரும் எண்ணிவிடக் கூடாது. அதனை விட யதார்த்தம் என்ற அடிப்படையில் பார்த்தால் இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த இந்தியப் பிரதமரிடம் வடக்கையும் இலங்கை அரசாங்கம் தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தால் தமிழர்கள் பாரியளவில் நசுக்கப்படுவார்கள் என்ற கருத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் தெரிவிக்கப்பட்டமையும் இந்த அடிப்படையில் தான் என்பது யதார்த்தம்.

எனவே வன்னிப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு அசைவுகளும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்ற தமிழர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு முக்கியமானதாகவே அமையப் போகின்றன. அத்துடன் அந்த அசைவுகள் வெற்றியா? பின்னடைவா? என்பதன் அடிப்படையில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கான சர்வதேச நகர்வுப் போக்கிலும் மாற்றங்களுக்கு வழிவகுக்கப் போகின்றன என்பதே யதார்த்தம்

http://www.tamilwin.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.