Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்: புதுடில்லி இராஜதந்திரத்துக்குத் தோல்வி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்:

புதுடில்லி இராஜதந்திரத்துக்குத் தோல்வி!

09.09.2008

தமிழர் விவகாரத்தில் எடுத்ததற்கெல்லாம் பலாத்காரத்தையும் அடக்குமுறையையும் பிரயோகித்து, துப்பாக்கி முனையில் பதில் கூறிப் பழகிக் கொண்டுவிட்ட இலங்கைப் படைகளுக்கு அந்தப் போக்கை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தமிழக மீனவர்களைக் கையாளும் விடயத்திலும் அதே திமிர்த்தனம் தொடர்கின்றது.

இதை சகிக்கமுடியாமல் இப்போதாவது சற்று சீறிப் பாயும் கட்டத்துக்குத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வந்திருக்கின்றமை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடலில் இறங்கும் தமிழக மீனவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் விடயம்தான்.

"சார்க்' மாநாட்டுக்காகக் கொழும்புக்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இலங்கைக் கடற்படையின் கைகளில் தமிழக மீனவர்கள் படும் அவலங்கள் குறித்து அவர்களுக்கு நேரும் விபரீதங்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேரடியாக எடுத்துரைத்துத் தமது அரசின் காட்டமான கண்டனத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இனி எதிர்காலத்தில் எல்லை மீறும் இந்திய மீனவர்கள் விடயத்தில் இலங்கைக் கடற்படை பலாத்கார வழியை நாடித் தாக்குதலிலோ, துப்பாக்கிச் சூடுகளிலோ ஈடுபடாது என்று இந்தியப் பிரதமரிடம் உறுதியளித்தார் எனக் கூறப்படுகின்றது.

அப்படி இலங்கை ஜனாதிபதி உறுதியளித்தாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் அப்படி உறுதிமொழி கொழும்பினால் வழங்கப்பட்டிருக்கின்றது என்ற தகவல் தமிழகத்திலும் புதுடில்லியிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டது.

ஆனால் அந்த உறுதிமொழி கொடுத்து ஒரு மாதத்துக்குள் மீண்டும் தமிழக மீனவர்கள் சுடப்பட்டிருக்கின்றார்கள். இதுவே தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியை இப்போது சீற்றத்துக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.

இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு 2005 கடைசியில் பதவியேற்றதற்குப் பின்பாக 2006 ஜனவரி தொடக்கம் இப்போது வரை தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் 27 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றார்கள். எட்டுப்பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 24 பேர் காயமடைந்திருக்கின்றனர். 240 பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.