Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொய் சொல்ல போறோம் - வி ம ர் ச ன ம்

Featured Replies

நடுத்தர குடும்பத் தலைவரான நெடுமுடி வேணுக்கு, தன் ரிட்டயர்மென்ட் மூலம் கிடைத்த பணத்தில் வீடு கட்ட ஆசை. 30 லட்ச ரூபாய் கொடுத்து சென்னை புறநகர் பகுதியில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்குகிறார். அதை ஆக்கிரமித்துக் கொள்ளும் ரியல் எஸ்டேட் தாதா நாசர், ரூ. 15 லட்சம் கொடுத்தால்தான் காலி செய்வேன் என்கிறார். சட்டமும், போலீசும் நாசருடன் பேசி முடிக்க கமிஷன் பேசுகிறதே தவிர, நியாயம் பேச மறுக்கிறது. மேலும் போலீஸ், ஜெயில் என்று வேணுவை அவமானப்படுத்து கிறது. வெறுத்துப்போகும் வேணு, அந்த நிலமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்.

ஆனால் மகன் கார்த்திக், தனது வெளிநாட்டு சாப்ட்வேர் வேலை கனவை துறந்துவிட்டு, தன் காதலி பியா பணியாற்றும் நாடக கம்பெனியுடன் இணைகிறார். நாசர், பிறரை ஏமாற்றி நிலம் பறிக்கும் அதே பாணியில், ஒரு மெகா ரியல் நாடகம் நடத்தி, நாசரை ஏமாற்றி இழந்த பணத்தை மீட்கிறார். முதல் பாதியில் ரியல் எஸ்டேட் ‘பகீர்’களையும், பின் பகுதியில் நாடகம் அம்பலமாகிவிடுமோ என்ற திகிலிலேயே ‘குபீர்’ சிரிப்புகளையும் கலந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு காமெடி படம் தந்திருக்கிறார்கள்.

நில மோகம் அதிகரித்திருக்கும் இந்த காலத்தில் ரியல் எஸ்டேட் தாதாக்களும், புரோக்கர்களும் நடுத்தர மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை அப்படியே சொல்லும்போதும், எந்த தவறும் செய்யாமல் போலீஸ் நிலையத்தில் வேணு குடும்பத்தினர் அவமானப்படுத்தப்படும்போதும், வக்கீல், போலீஸ், அமைச்சர் என அனைவருமே தாதாக்களோடு சமாதானமாக போகச் சொல்லும்போதும், சமூகத்தின் மீது கோபமும், வேணு குடும்பத்தின் மீது அனுதாபமும் வர வைத்திருப்பதில் படத்திற்கு கிடைக்கிறது முதல் வெற்றி. பரஸ்பர புரிந்துணர்தல், சின்ன சின்ன கோபம், ஏக்கம், ஒரு கைகுலுக்கலிலேயே உணர்வு பரிமாற்றம் என்று இந்த காமெடி குளத்தில் அழகாக பூக்கிறது ஒரு காதல்.

கார்த்திக்கும், பியாவும் இன்றைய யதார்த்த காதலை பாந்தமாக பிரதிபலித்திருக்கிறார்கள். நடுத்தர குடும்ப தலைவனின் கேரக்டரை அற்புதமாக செய்திருக்கிறார் நெடுமுடி வேணு, போலீஸ் கைது செய்து செல்லும்போது அவமானத்தால் கூனி குறுகுவதும், வெளிநாட்டு மோகத்தில் இருக்கும் மகனிடம் பாசம் கலந்த வெறுப்பு காட்டுவதுமாக படம் பார்ப்பவர்களின் தந்தையை மனதுக்குள் கொண்டு வருகிறார். ராஜேஷின் டப்பிங் குரல்தான் உறுத்தல். சிரித்து பேசியபடி, ஊடுருவி பார்க்கும் கொடூரத்திலேயே மிரட்டியிருக்கிறார் நாசர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மவுலியின் டிராமா காமெடி ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. நில புரோக்கர் வி.எம்.சி.ஹனீபாவும், விசா புரோக்கர் பாஸ்கியும், நாடக நடிகர் பாலாஜியும் நிறைவாக செய்திருக்கிறார்கள். நாசருக்கு எதிராக நாடகம் போடுகிறவர்கள் எந்த நேரமும் அவரிடம் மாட்டிக்கொள்ளப்போகிறார்கள் என்கிற பதபதைப்போடு திரைக்கதை அமைத்திருப்பது படத்திற்கு பிளஸ்.

மகன்களை நண்பர்கள் போல பாவிக்க, அவர்களை வேணு மது அருந்த அழைப்பதும், நாசரை விரட்ட தாதாக்களை அழைத்து வந்து வீட்டில் விருந்து வைப்பதும் டூ மச். அளவுக்கு அதிகமான குளோஸ்-அப் காட்சிகளும், டிராமாக்களை நினைவுபடுத்தும் காட்சிகளும் மைனஸ். ‘கோஸ்லா கா கோஹ்ஸ்லா’ என்ற இந்தி படத் தழுவல் என்றாலும் அதை சிந்தாமல் சிதறாமல் மாற்றங்களுடன் தந்திருப்பதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.

http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=324

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.