Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோயபல்ஸின் தத்துவமும் அரசின் பிரச்சாரங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோயபல்ஸின் தத்துவமும் அரசின் பிரச்சாரங்களும்

தாயகன்

இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துவரும் நிலையில் இருதரப்பு இழப்புகள் தொடர்பிலும் ஒவ்வொரு விதமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இராணுவத்தினரின் இழப்புகள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதில் புலிகள் மிகவும் நிதானம் காட்டிவரும் அதேவேளை புலிகள் தொடர்பான இழப்புகள் குறித்து எவருமே நம்பமுடியாத தகவல்களை இராணுவத்தினர் வெளியிட்டு வருவதாக பலராலும் சுட்டிக் காட்டப்படுகிறது.

புலிகள் தொடர்பில் இராணுவத்தினர் வெளியிட்டுவரும் தகவல்கள் பல முன்னுக்குப் பின் முரண்பட்டதாக காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. விடுதலைப் புலிகளை அழிக்க காலக்கெடுக்கள் விதித்தது முதல் புலிகளின் எண்ணிக்கை, அவர்களின் உயிரிழப்புகள் என அனைத்திலுமே இராணுவம் நிதானமின்றி நம்ப முடியாத தகவல்களையே ஊடகங்கள் மூலம் வெளியிட்டு வருகின்றது.

வன்னியில் தம்மால் கைப்பற்றப்படும் ஒவ்வொரு சிறு நிலப் பகுதியையும் பாரிய வெற்றியாக பிரசாரப்படுத்தி சிங்கள மக்களை இந்த அரசு ஏமாற்றுகின்றது. போரியல் வரலாற்றில் வெற்றி என்பதன் அர்த்தம் தோல்வியின்மை அல்ல.

வெற்றி என்பது இறுதி இலக்கை அடைந்து கொள்வதாகும். அதாவது, போரை வெல்வது. ஒவ்வொரு சமர்களையுமல்ல.

ஆனால், இராணுவம் ஒவ்வொரு சமரையும் போரை வென்றதைப் போல் பிரசாரப்படுத்துகின்றது. புலிகளுக்கெதிரான யுத்தம் மஹிந்த அரசினால் ஆரம்பிக்கப்பட்ட போது விடுதலைப் புலிகள் தரப்பில் மூவாயிரம் போராளிகள் வரையே இருப்பதாக குறிப்பிட்ட இராணுவத் தளபதி அவர்களை தம்மால் நினைத்த நேரத்தில் அழித்துவிட முடியுமெனக் கூறினார். பின்னர் அவர்களில் கூட பலர் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் பலர் காயமடைந்து விட்டதாகவும் அதனால் 1500 பேர் வரையிலேயே இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இராணுவத் தளபதியின் கருத்துத் தொடர்பில் ஐ.தே.க. கூறுகையில், இராணுவத் தளபதி கூறிய கருத்து உண்மையானால் தற்போது படையினர் புலிகளின் ஆவிகளுடனா போரிட்டு வருகின்றனரேன கேள்வியெழுப்பியிருந்தது. இதே இராணுவத் தளபதி கடந்த வாரம் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் 2006ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 11 ஆயிரம் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 3 ஆயிரம் புலிகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்த இராணுவத் தளபதி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் 11 ஆயிரம் புலிகளை தாம் கொன்றிருப்பதாகக் கூறுவதை எந்தக் கணக்கில் சேர்ப்பது? 3 ஆயிரமாக இருந்த புலிகள் எவ்வாறு 11 ஆயிரமாக மாறினார்கள்.

இராணுவத் தளபதியின் கூற்றுப்படி பார்த்தால் ஒவ்வொரு புலிப்போராளியும் 4 தடவைகள் உயிரிழந்திருக்க வேண்டும். அத்துடன் அரச ஊடகங்களோ 24 மணி நேரத்தில் 28 புலிகள் பலி, 30 புலிகள் பலி, 40 புலிகள் பலி என்றே தினமும் கணக்குக் கூறுகின்றன. சராசரியாக 24 மணி நேரத்தில் 24 புலிகள் கொல்லப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் ஒரு மாதத்தில் 720 புலிகள் என்ற நிலையில் இரு வருடத்திலும் 17280 புலிகள் கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

இது உண்மையானால் தற்போது இராணுவத்துடன் போரிடுபவர்கள் யார்? ஐ.தே.க. கேட்பது போல் புலிகளின் ஆவிகளா? புலிகள் மறைந்திருந்து இராணுவம் மீது தாக்குவார்கள்.

அதில் ஒரு படைவீரர் காயமடைவார். ஆனால், படையினர் பதில் தாக்குதல் நடத்துவார்கள். அதில் 7 புலிகள் கொல்லப்படுவார்கள். இதுதான் அரச ஊடகங்களின் வாய்ப்பாடு. ஒரு செய்தியை வெளியிடும்போது அதில் உள்ள நம்பகத் தன்மையையாவது ஒரு தடவை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால், அரச ஊடகங்களுக்கு அந்தச் சிந்தனையெல்லாம் கிடையாது.

இந்திய புலனாய்வுத்துறையான ?றோவின்? முன்னாள் பிரதிச் செயலாளர் பி.இராமன் உயிரிழப்புகள், தாக்குதல் தொடர்பான விபரங்களை வெளியிடுவதில் இராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையில் உள்ள வேறுபாட்டை பின்வருமாறு கூறுகின்றார். "இராணுவத்தினர் தாம் ஈட்டிய வெற்றிகளை பூதாகாரப்படுத்தி வெளியிட்டு விட்டு தமது தரப்பு இழப்புகளை மூடிமறைத்து வரும் வேளையில் விடுதலைப் புலிகள் ஆதாரங்களுடன் இழப்பு விபரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தாம் போரில் பாரிய இழப்புகளை சந்தித்தாலும் கூட அதனை புலிகள் ஒருபோதும் மூடி மறைக்க முயற்சிப்பதில்லை. இதனால்தான் விடுதலைப் புலிகளின் அறிக்கைகளை போராளிகளும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் நம்பகத் தன்மை உடையவையாக பார்க்கின்றனர்.

எனவே, தாக்குதல் இழப்புகள் தொடர்பில் இராணுவம் வெளியிடும் தகவல்களை விட விடுதலைப் புலிகளின் தகவல்களே அதிக நம்பகத்தன்மையுடையவை." புலிகளின் இழப்பை மிகைப்படுத்தி வெளியிட்டுவரும் இராணுவம் தமது தரப்பு இழப்புகளை மூடிமறைத்தே வருகின்றது. பாராளுமன்றத்தில் ஒவ்வொரு மாதமும் இடம்பெற்றுவரும் அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தின்போது பிரதமரும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவினால் இராணுவத்துக்கு பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் தொடர்பில் விவரம் சமர்ப்பிக்கப்படும். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸ் தரப்பில் 896 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5908 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் 381 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட எம்.பி.யான லக்ஷ்மன் செனவிரட்ன, 2006ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 1851 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9901 படையினர் காயமடைந்துள்ளதாகவும் இந்தக் காயமடைந்த படையினரில் 5000 முதல் 6000 வரையான படையினருக்கு கால்கள் பறிபோயுள்ளதாகவும் கூறியிருந்தார்.

அத்துடன், இந்தத் தகவல் உத்தியோகபூர்வமானதல்ல எனவும் உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் அதிகமாக இருக்கலாமெனவும் குறிப்பிட்டதுடன் இராணுவ இழப்புகள், வெற்றி தோல்விகள் குறித்து பொதுமக்களுக்கு அரசு உண்மைத் தகவல்களை வழங்க வேண்டுமெனவும் ஆனால், அரசு பொய்க் கதைகளை, தரவுகளை கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதேவேளை அரசின் இந்த அறிக்கையில் பொதுமக்களின் இழப்புகள் குறைத்தே காட்டப்பட்டுள்ளன. அரசின் அறிக்கையில் காட்டப்பட்டுள்ள பொதுமக்களின் உயிரிழப்புகளில் அதிகமானவை தென் பகுதியில் நடைபெற்ற சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளவர்களுடையதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.