Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக சட்ட சபையில் தமிழீழத்தை ஆதரித்து 18 நாள்களுக்குள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் 1,000 தீப்பந்தங்கள் ஏந்தித் தமிழீழத்திற்கு வெளிச்சம் காட்டுவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக அரசு இன்னும் பதினெட்டு நாள்களுக் குள் தமிழீழத்தை ஆதரித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் தீவுத்திடலில் 1000 தமிழர்கள் தீப்பந்தம் ஏந்தி தமிழீழத்துக்கு வெளிச்சம் காட்டுவோம்.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ்.

இலங்கைத் தமிழர்களை சுட்டுக்கொல்லும் சிங்கள அரசைக் கண்டித்தும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் சென்னை ஆழ்வார் பேட்டை இலங்கைத் தூதரகம் முன்பு நேற்று நடந்தது.

போராட்டத்துக்கு பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். அங்கு அவர் பேசியவை வருமாறு:

ஈழத் தமிழர்களைக் கூண்டோடு ஒழித்து விடவேண்டும் என்று செயற்பட்டுவரும் சிங்கள இராணுவத்தையும், ராஜபக்ஷவையும் கண்டித்து இந்தப் போராட்டம் நடக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கான போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் உரக்கக் குரல் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் உலக அளவில் உள்ள தமிழர்களிடம் உள்ளது.

சட்ட மன்றுக்குள் உண்ணாவிரதம் இருப்போம்

இலங்கை இனப்படுகொலை போல உலகில் வேறு எங்கும் படுகொலை நடந்தது இல்லை என்று மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கூறிவருகின்றனர்.

தமிழக அரசும் முதலமைச்சரும் இதில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு இன்னும் 18 நாள்களுக்குள் தமிழ் ஈழத்தை ஆதரித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் தீவுத்திடலில் 1000 தமிழர்கள் தீப்பந்தம் ஏந்தி தமிழ் ஈழத்துக்கு வெளிச்சம் காட்டுவோம்.

அதன் பிறகும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றால் எங்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றத்துக்குள் நுழைந்து ஒரு பகுதியை ஆக்கிரமித்து தொடர் உண்ணாவிரதம் இருப்பார்கள்.

அடுத்து எங்கள் எம்.பிக்கள் வருவார்கள். இளைஞர் படை வரும், மகளிர் வருவார்கள், மாணவர்கள் வருவார்கள்.

நாங்கள் அமைதியான முறையில் போராட வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே விரைவாக முடிவு எடுத்து ஈழத்தில் உள்ள தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நேற்றைய முழக்கப் போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, எம்.பிக்கள் ஏ.கே.மூர்த்தி, பொன்னுசாமி, திண்டிவனம் தன்ராஜ், வேல்முருகன் எம்.எல்.ஏ., டைரக்டர் சீமான், அம்பத்தூர் நகர மன்றத் தலைவர் ஜெயராமன், சைதை சிவா, புதுவை எம்.எல்.ஏக்கள் அனந்தராமன், பன்னீர்செல்வம், வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

uthayan.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தினமும் உணவுக்கு, நல்ல நீருக்காக ஏங்கித்தவிக்கும் எங்கள் உறவுகளுக்கு விரைவில் ஒரு தீர்வு வந்தால் அதுவே வசந்த காலம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.