Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சட்டமும் நீதியும் தப்பிக்கொள்ளுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமும் நீதியும் தப்பிக்கொள்ளுமா?

02.10.2008

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து... பின்னர் மனிதனைக் கடித்ததாம் என்று பேச்சு வழக்கில் ஒரு வாசகம். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் அதன் ஆழம் புலப்படுவதில்லை. ஆனால் நடைமுறையில் நோக்கினால் அது மெத்தவும் அர்த்தம் உள்ளது.

முதலில் ஒரு தீய பழக்கத்தைச் செய்பவன், அதற் கான தண்டனையைப் பெறாவிட்டால், அல்லது தட்டிக்கேட்க எவருமில்லை என்றால் அதனைக் கட்டுப்பாடு இன்றி, தங்கு தடையின்றிச் செய்யத் தூண்டப்படுவான்; செய்வான்.

தட்டிக்கேட்க எவருமில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்பதும் அதனையே வெளிப்படுத்தி நிற்கிறது. நாடுகளின் ஆட்சிக் கட்டிலில் இருப்போரும் அவர்களின் ஆதரவாளர்கள், அடியாள்களும் இந்த வகையைச் சார்ந்தவர்களே என்பதனை எடுத்துக் கூறுவதற்காக இந்த வாசகம் பல நாடுகளின் அரசியலுக்கு, ஆட்சிக்குப் பொருத்தமாகி வருகிறது. இலங்கையும் அந்த வகையில்இப்போது சேர்ந்துகொள்கின்றது என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.

மக்களின் சிவில் சமூகத்தின் உரிமைகள் மற் றும் அதற்கு ஏற்படும் ஒவ்வாத பாதிப்புகள் குறித்துக் குரல் கொடுப்போரை, எதிர்ப்போரை, மக்களுக்கு நியாயம் கேட்போரை அதிகாரத்தில் உள்ளவர்கள் எதிரிகளாகப் பார்க்கின்றார்கள். அத்தோடு நிற்காது, அவர்களுக்கு எதிராகப் பலாத்காரத்தை, அடாவடித் தனத்தை கட்டவிழ்த்து விடுவது இப்போதைய அரசியல் கலாசாரமாகிவிட்டது.

இந்த வரிசையில் ஆகப் பிந்தி, அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான வழக்குகளில் வாதாடும் பிரபல வழக்கறிஞர் ஜே.சி.வெலியமுனவின் வீடு தாக்கப்பட்டிருக்கிறது; குண்டுவீசித் தாக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் உரிமைகள் மீறப்படுவது குறித்துப் பேசுவோர்; அவற்றை வெளிப்படுத்துவோர், அவற்றில் அக்கறையுடன் செயற்படும் பொது அமைப்புகள் ஆகியவற்றின் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கைவைத்த ""இனந்தெரியாதோர்'' இப்போது நீதிமன் றத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வாதாடும் பிர பல வழக்கறிஞர் மீதும் தமது கரங்களைப் பதித்துள்ளனர். நீதிசார்துறைமீதும் கையை ஆழப்பதித்திருக் கின்றனர்.

சட்டத்தரணி வெலியமுனவின் வீட்டின் மீது கடந்த மாதம் இருபத்தேழாம் திகதி இரவு இனந்தெரியாதவர்கள் குண்டுவீசித் தாக்கியதைப் பத்தில் ஒரு சம்பவமாகக் கொள்ளமுடியாது.

அரசின் மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் மற் றும் பொலிஸாருக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வருவதாலேயே தமது வீட்டின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகச் சட்டத்தரணி வெலிய முன கருத்து வெளியிட்டிருக்கிறார்.

அதற்கு மேல் இந்தத் தாக்குதலின் நோக்கம் என்ன என்று காரணம் கண்டுபிடிக்கவேண்டிய தேவை அதிகம் இல்லை.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால், மக்களுக் குப் பாதிப்புத் தரும் விடயங்கள் சம்பந்தமான முக் கிய வழக்குகளில் சட்டத்தரணிகள் வாதாட முன்வர மாட்டார்கள். அதன் விளைவு?

இந்த நாட்டில் சட்டம் செத்துப் போகும். நீதி பொசுங்கிவிடும். மனித உரிமைகள் மழுங்கி மாளும். காட்டுத் தர்பார் ஆட்சிக்கு வழிகோலப்படும். ஜனநாயகம் என்ன விலை என்று கேட்க நேரிடும்.

இந்த நாட்டிலும் சரி, சர்வதேசங்களிலும் சரி இப்போதைய அரசைச் சேர்ந்த உயர் தலைவர்கள் மட்டு மன்றி ஏனையோரும் இங்கு ஜனநாயகம் பொன்னாகப் பேணப்பட்டு, மக்கள் தமக்குரிய உரிமைகளை ஊறில்லாமல் அனுபவிக்கிறார்கள் என்று பறை சாற்றுகிறார்கள்......

ஆனால் நடைமுறையோ தலைகீழாக மாறி வரு கிறது. மனித வாழ்வின் மகத்துவம் மூழ்கடிக்கப்படும் அளவுக்கு கருத்துச் சுதந்திரம், நீதி நெறிமுறை என்பன தவிடுபொடியாக்கப்படுகின்றன; தகர்க்கப்படுகின்றன!

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் அரசுக்குச் சமமான பொறுப்பையும் சுமையையும் தாங்கி அதனை உறுதியாகத் தாங்கிநிற்கும் இரண்டு தூண்களான நீதித்துறையும், ஊடகத்துறையும் மிகப் பலமா னவை. அவை இரண்டையும் இடித்து நொருக்கிவிட் டால் ஜனநாயகம் அழியும்; சர்வாதிகாரம் கையோங்கும் காட்டுத் தர்பார் ஆட்சி தலையெடுக்கும்...!

இத்தகைய ஒரு நிலைக்கு இலங்கைத் தேசமும் தள்ளப்படும் சூழ்நிலை மிக வேகமாக வளர்ந்து வருகிறதா? வெலியமுனவின் வீட்டின் மீதான குண்டுத் தாக்குதல் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலைக்குமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

இது விடயத்தில் அரசு ஒளித்துப் பிடிக்கும் விளையாட்டில், வழமையான உத்தியைக் கையாண்டு, தான் சுத்தமானது என்று காட்டிக்கொள்ள முயலும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால், அதனையே கைக்கொண்டால் நிச்சய மாக சர்வாதிகாரத்தை நோக்கிய ஒன்றாகவே அமையும்.

சட்டம், நீதி சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் அரசு எந்தத் திசை நோக்கி நகரப் போகிறது? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்!

http://www.sudaroli.com/editorial.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.