Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உக்கிரமடையும் மோதல்கள்; இரண்டு தரப்பும் புதிய உத்திகள்

Featured Replies

கிளிநொச்சியை மிகவும் அண்மித்துவிட்டதாகப் படைத்தரப்புக் கூறியுள்ள நிலையில், வன்னியில் அக்கராயன்குளம், நாச்சிக்குடா, வன்னேரிக்குளம் ஆகிய பகுதிகளில் உக்கிரமான சண்டைகள் இடம்பெற்று வருவதாக இரண்டு தரப்புக்களும் அறிவிக்கின்றன.

நாச்சிக்குடாவில் மேலும் ஒன்றரைக் கிலோ மீற்றர் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாகவும், மாங்குளம்-பனிச்சங்குளம் பகுதியில் சுமார் 500 மீற்றர் நீளமான புலிகளின் விமான ஓடுதளம் ஒன்றைக் கைப்பற்றியிருப்பதாகவும் படைத்தரப்புப் பிந்திய தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, அக்கராயன்குளம் மற்றும் மணலாறு பகுதிகளில் படையினரின் முன்னேற்றத்தைத் தாம் தடுத்து நிறுத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது, சுமார் 4-5 முனைகளில் ஏக காலத்தில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன என்பதும், ஒவ்வொரு களமுனைகளிலும் அவ்வப்போது ஒவ்வொரு தரப்பின் கை ஓங்குகிறது என்பதும் தெளிவாகிறது.

புதிய உத்திகள்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் வன்னிப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தது முதலே, படைத்தரப்பு பல புதிய உத்திகளைக் கையாண்டு வருவதாகக் கூறியுள்ளது. இதில், ஏக காலத்தில் பல முனைகளைத் திறப்பது பிரதானமான ஒன்று.

இலங்கை இராணுவ வரலாற்றில் முன்னெப்போதும் இவ்வாறு ஏக காலத்தில் பல முனைகளைத் திறந்து சண்டை செய்யும் உத்தி முறையாகக் கையாளப்படவில்லை என்று படைத்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மோதல்கள் ஆரம்பமான காலம் முதற்கொண்டு, 1997ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையான ஜெயசிக்குறு நடவடிக்கை வரையில் இந்த உத்தி கையாளப்பட்டிருக்கவில்லை என்று படைத்துறை ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏக காலத்தில் பல முனைகளைத் திறந்து மோதல்களில் ஈடுபடும் படையினரின் இந்த நடவடிக்கை புலிகளுக்கு முற்றிலும் புதிய ஒன்று என்றும், ஒரு மரபுவழிப் படைக்குரிய வல்லமையைப் புலிகள் வளர்த்துக்கொண்டிருக்கின்ற போதிலும், ஏக காலத்தில் பல முனைச் சண்டைகளுக்கு முகம்கொடுக்கும் அளவுக்கு ஆளணி மற்றும் படைக்கல, பின்புல வளங்கள் அவர்களிடம் மிகக் குறைவாகவே இருக்கின்றது என்றும் அந்த ஆய்வாளர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

இது தவிரவும், பிரதேசங்களைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேநேரம், அதிகளவு எண்ணிக்கையான புலிகளை, குறிப்பாக புலிகளின் தலைவர்களைக் கொல்வது இராணுவத்தின் மற்றுமொரு உத்தி என்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறுகிறார். நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுவதைவிட, அதிகளவில் புலிகள் இயக்க ஆட்களைக் கொல்வதே தமது இலக்கு என்று அவர் தெரிவிக்கிறார்.

இந்த நோக்கோடே ஆழ ஊடுருவித் தாக்கும் படை நடவடிக்கைகளையும், �தெரிவுசெய்யப்பட்ட இலக்குகள்� மீதான விமானத் தாக்குதல்களையும் படைத்தரப்பு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் கணிசமானமளவு ஆளணி இழப்புக்களை அவர்கள் புலிகளுக்கு ஏற்படுத்தியிருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.

மறுத்தான்கள்

படைத்தரப்பின் இந்தப் புதிய உத்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் புலிகளும் சில புதிய உத்திகளைத் தற்போது களத்தில் கையாண்டு வருகின்றமை யுத்தகளச் செய்திகள் மூலம் தெரியவருகிறது. இதில் முக்கியமானது மிகப் பெரியளவிலான மண் அரண்கள் அமைப்பது.

படையினரது முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் சுமார் 10-12 அடி உயரமான மண் அரண்களைப் புலிகள் அமைத்து வருவதாகவும், இதற்கு உடன் எதிராக அதேயளவு ஆழமான பள்ளங்களையும் இந்த அரண்கள் கொண்டிருப்பதாகவும் படைத்துறைத் தகவல்கள் கூறுகின்றன. நாச்சிக்குடா முதல், அக்கராயன்குளம் வரையில், சுமார் 25 கிலோமீற்றர் நீளத்துக்கு இவ்வாறான அரண்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அந்தத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது. கண்ணிவெடிகளுடன் இணைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய உத்தி படையினருக்குச் சவாலாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறான அரண்களை அமைக்கும் புலிகளின் திட்டம் பற்றி அறிந்துகொண்ட களமுனைப் படையினர் அதுபற்றி தமது மேலிடத்துக்கு அறியத்தந்த பின்னர், விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மூலம் புலிகளின் அரண் அமைக்கும் முயற்சிகளைக் குழப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் படைத்தரப்பில் கூறப்படுகிறது.

தெற்கு, கிழக்கைக் குழப்பும் திட்டம்

இதேவேளை, வன்னிக் களமுனையில் படையினரின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துவரும் நிலையில், தெற்கிலும், கிழக்கு மாகாணத்திலும் தாக்குதல்களை நடாத்தப் புலிகள் திட்டமிட்டு வருவதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் படையினரின் கவனத்தைத் திருப்புவது புலிகளின் நோக்கம் என்று படைத்தரப்புக் கூறுகிறது.

கொழும்பில் கொலண்ணாவை எண்ணெய்க் குதம், இரத்மலான படை விமானப் போக்குவரத்து மையம், கட்டுநாயகா விமானப்படைத் தளம் உள்ளிட்ட பகுதிகளைத் தாக்குவதற்குப் புலிகள் திட்டமிட்டிருப்பதாகவும் அந்தப் புலனாய்வுத் தகவல்களில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், கிழக்கில் �உறங்கு நிலை�யில் இருந்த புலிகள் இப்போது தாம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாகவும் படைத்தரப்பில் கூறப்படுகிறது.

எனினும், புலிகளின் இந்த நடவடிக்கைகளால் தமது வன்னிப் படை நடவடிக்கைக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படாது என்று குறிப்பிட்டிருக்கும் இராணுவ அதிகாரி ஒருவர், இத்தகைய சூழ்நிலைக்கு முகம்கொடுக்கும் வகையில் போதியளவு இராணுவ ஆளணி தம்மிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமது படைத் தந்திரோபாயங்கள் குறித்து அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் இதுபற்றிக் கூறிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வன்னிப் படைநடவடிக்கை நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்றும், இதற்காக பெருமளவு எண்ணிக்கையிலான படையினர் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.