Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்டுத் தோலைப் போர்த்திய ஓநாயின் திட்டம் - இலங்கை இந்திய கூட்டு நடவடிக்கை – வைக்கோ

Featured Replies

தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குவதும், சுட்டுக் கொல்வதும் இந்திய கடற்படையின் கண் முன்னாலேயே நடைபெற்று வருகையில்,

தமிழக மக்களையும், மீனவர்களையும், ஏன் இந்திய மக்களையும் திசை திருப்பவும், ஏமாற்றவும் சிங்கள அரசு நயவஞ்சகமாக கடந்த 2 ஆண்டுகளாகவே முயற்சித்து வரும் சதித்திட்டத்தில் இந்திய அரசு தற்போது கைகோர்த்து உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சுமத்தியுள்ளார்.

இலங்கை இந்திய கூட்டு முயற்சித் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கும் சிங்கள அரசின் ராணுவ நடவடிக்கைகளுக்கு, இந்திய கடற்படையினர் ஏற்கனவே தகவல் பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் மூலம் பல வழிகளிலும் உதவி வருகிற நிலையில், இருநாட்டு கடற்படைகளின் கூட்டு ரோந்து என்ற வஞ்சக வலையை இலங்கை அரசு வீசியது. நேற்றைய தினம் இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லகம, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின்பு, மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, இருநாடுகளின் கூட்டு நடவடிக்கை என்ற திட்டத்தை அறிவித்துள்ளனர்.

காவலாளியும், கள்வனும் கைகோர்த்து கொள்வது போல, திருடனுக்கே காவற்துறை உடந்தை ஆவது போல இந்த திட்டத்தை இந்தியா அறிவித்து உள்ளது. ஏற்கனவே இலங்கையில் தமிழ் இனக்கொலை நடத்தும் சிங்கள அரசுக்கு ராணுவ உதவியும், ஆயுதங்களும் செய்து வருகிற இந்தியா, இன்னும் ஒரு படிமேலே சென்று, தமிழ் இனப்படுகொலையை தீவிரப்படுத்த இலங்கை அரசுக்கு வெளிப்படையாகவே உதவத் துணிந்து விட்டது. எந்த காரணத்தை முன்னிட்டும் கூட்டு நடவடிக்கை கூடாது. ஆட்டுத் தோலைப் போர்த்திய ஓநாயின் திட்டம்தான், இலங்கை முன் வைத்து உள்ள திட்டம் ஆகும். இந்திய அரசின் நடவடிக்கையை, ம.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிப்பதுடன், இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுப்பதாகவும் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மறியல் அறப்போருக்கு ஜெயலலிதா ஆதரவு:

இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு ரேடார்களும், ஆயுதங்களும் வழங்குவதோடு இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவினரையும் அனுப்பி வைத்து தமிழ் இனத்திற்கு துரோகம் செய்யும் இந்திய மத்திய அரசைக் கண்டித்து 10-ந் திகதி சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மறியல் அறப்போரை அறிவித்தது.

பொது செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இந்த அறப்போராட்டத்தை அவைத்தலைவர் மு.கண்ணப்பன் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு, வைகோ கடந்த 2-ம் திகதி அழைப்புக்கடிதம் அனுப்பி இருந்தார். இது தொடர்பாக, ஜெயலலிதா அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் 10ம் திகதி ம.தி.மு.க. நடத்தும் மறியல் போராட்டத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க. சார்பில் அதன் அமைப்பு செயலாளர் சு.முத்துசாமி வாழ்த்துரை வழங்குவார் என தெரிவித்துள்ளார்.

இந்திய-இலங்கைக் கடற்படை கூட்டு நடவடிக்கைத் திட்டம் கைவிடப்பட வேண்டும்:

இந்திய-இலங்கை நாடுகளின் கடற்படை கூட்டு நடவடிக்கைத் திட்டத்தை கைவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களை சிங்கள இராணுவம் தொடர்ந்து சுட்டுக் கொல்வது, அவர்களது வலைகளை அறுத்து சேதப்படுத்துவது, மீன்களை கொள்ளையடித்து செல்வது என தமிழக கடல் எல்லைக்குள்ளேயே புகுந்து அட்டூழியம் செய்து வருவதை இந்திய கடற்படை இத்தனை காலமும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.இந்திய அரசும் சிங்கள கடற்படையின் எல்லைத் தாண்டிய அத்துமீறலை இதுவரை கண்டித்தது இல்லை. ஆனால், இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாம, இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின்னர், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, இந்திய-இலங்கை கடற்படையின் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளனர்.

குற்றம் இழைத்தவனை தண்டிக்க வேண்டிய இந்திய அரசு, தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள கடற்படையை எதிர்த்து கடும் இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய கடற்படை, சிங்கள கடற்படையுடன் கைகோர்த்து பணியாற்றுவோம் என அறிவித்திருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் செயலாகும்.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் சிங்கள கடற்படையின் தாக்குதல்களில் இருந்து தமிழ் மீனவர்களை காப்பாற்ற வேண்டிய இந்திய அரசும்-உலகின் 3-வது பெரிய ராணுவம் என மார்தட்டிக் கொள்ளும் இந்திய ராணுவமும் சிங்கள கடற்படையை அடக்கி வைக்க திராணியற்று, இந்த கூட்டு நடவடிக்கைக்கான அறிவிப்பை செய்திருப்பது இந்திய இறையாண்மைக்கு மிகப்பெரிய தலைகுனிவு.

தமிழ் மீனவர்களை சுட்டுக் கொல்வது சிங்கள கடற்படைதான் என்பது உலகம் அறிந்த ஒன்று. இந்த நிலையில் இந்த கூட்டு நடவடிக்கை ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் அழித்தொழிப்பதற்கே பயன்படுமேயல்லாமல், பாதுகாப்பாக அமையாது. உடனடியாக, இந்திய அரசு இந்த கூட்டு நடவடிக்கை அறிவிப்பை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துவதாக திருமாவளவன் குறிப்பி;ட்டுள்ளார்.

மாறாக கூட்டு நடவடிக்கையை இந்திய அரசு முன்னெடுக்குமேயானால், தமிழ்நாட்டு மீனவர்களை ஒன்று திரட்டி நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் நடத்தும் எனவும் திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.