Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான மோதல் - முரண்பட்ட அரசியலாக உருவெடுப்பு

Featured Replies

நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான மோதல்கள் கடும் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாகவும் இந்த நிலைமையில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில் இருந்து வருவதாகவும் சிங்கள வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காலி வீதியின் தடைகளை அகற்றுமாறு கடந்த வாரம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்குமாறு திகதி குறிப்பிட்டு, வழங்கப்பட்ட தீர்ப்பு, முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு உள்ளிட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் அதற்கு அரசாங்கத்தின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளின் விதம், இந்தமோதல் உக்கிரமடைய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத்தவிர தற்போது உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் சில வழக்கு விசாரணைகளிலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அரச சேவை மற்றும் நீதிச்சேவை ஆகியவற்றில் ஒய்வுபெறும் வயதை நீடிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் மற்றும் அரசாங்கத்திற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் இடையிலான கொள்கைளில் முரண்பாடுகள் எழுந்தன. அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு வருவதால், அரசியல் பிரச்சினை ஒன்று உருவாகி வருகிறது.

எதிர்வரும் காலங்களில் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை நிறைவேற்று அதிகாரம் கவனத்தில் கொள்ளாது செயற்படும் நிலை தோன்றும் என அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அரசாங்கம் பிரதம நீதியரசருக்கு எதிராக , அரச மற்றும் தனியார் ஊடகங்களைப் பயன்படுத்தி, பாரிய எதிர்நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்க அமைச்சர்கள் சிலர், பிரதம நீதியரசருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வருவது குறித்த யோசனையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவில் நீதிமன்றம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது ஆனால் அங்கு தீர்ப்பு வழங்குபவர்களாக அரசில் உள்ள பைத்தியங்களே செயற்படுகின்றன இது உலகநாடுகளுக்கும் ஓரளவு தெரியும் ஆனால் இதை பத்தி கதைத்தல் சில முத்தின பைத்தியங்கள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமையில்லை என்று சொல்லி அவர்களின் வாயை அடைத்துவிடும் ஆகவே உலகநாடுகளும் இந்த காட்டுமிராண்டிகளோடு கதைப்பதில்லை :icon_mrgreen:

கிழக்கு தனித்துவமான பண்பாடுகளை கொண்டது எனத்தெரிந்தவருக்கு இலங்கையில் வாழும் தமிழர்களும் தனித்துவமான பண்பாடுகளைக் கொண்ட தனித்துவ இனம் என்பது தெரியாமல் போனது??

தனித்துவமான பண்புகளைக் கொண்டது கிழக்கு மாகாணம்.அதனாலேயே வடக்கு, கிழக்கு இணைப்பிலிருந்து பிரிந்து செயற்பட வேண்டுமென்ற தீர்ப்பினை வழங்கினேன் என்று பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கிழக்கு வலயத்துக்கான மேன் முறையிட்டு நீதிமன்ற நீதிபதி எஸ்.பரமராஜா தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் மேலாகச் சென்று நீதிமன்றம் நிருவாக பரவலாக்கம் செய்கின்றது.அந்தந்த பகுதியிலுள்ளவர்களை அந்தந்த பதவிக்கு நியமிப்பதன் ஊடாக அதிகாரப்பகிர்வு செய்ய முடியும்.அதிகாரத்தை பகிர்வதன் மூலம் சமாதானத்திற்கு வழிவகுக்க முடியும்.நீதிமன்றங்கள் அதிகாரத்தினை பகிர்வது போல் சகல அதிகாரங்களையும் பகிர்ந்தால் இலங்கையில் சமாதானத்தினை கொண்டுவர முடியும்.1994 இல் நான் கல்முனைக்கு வந்தபோது எம்.எம்.முஸ்தபா தற்போதைய சமாதானம் யுத்தத்திற்கானதுதான் என்றார்.நான் கூறினேன்,யுத்தம் வராது என்று"ஆனால் யுத்தம் மீண்டும்ஆரம்பித்தது'தொடர்ந்து கொண்டே செல்கின்றது.

இலங்கையில் மிகப்பிரசித்தி பெற்ற மாகாணம் கிழக்கு மாகாணமாகும்.எதிர்காலத்தில் கிழக்கு மாகாணம் இந்த நாட்டின் முன்மாதிரியான மாகாணமாக திகழும்.கிழக்கு மாகாணம் தனி மாகாணமாகவே இருக்கட்டும் "கிழக்கிற்கு வேறு பண்பாடு. யாழ்ப்பாணத்திற்கு வேறு' பண்பாடு.கிழக்கு மாகாணம் பண்பாட்டு ரீதியாக வித்தியாசமான பண்புகளைக் கொண்டது. அதனால்தான் நான் அந்தத் தீர்ப்பினை வழங்கினேன் என்றார்.

http://www.nitharsanam.com/?art=26031

சிங்களவன் எப்படியெல்லாம் சிந்திக்கின்றான் என்று தமிழர்களை பிரிப்பதற்கு?இவர் இப்போது நீதியின் பக்கம் என்று நடிப்பது மகிந்தவுடன் உள்ள பிரச்சனையாலேயே மற்றும் படி இவரும் ஒரு இனவாதி என்பதை இவருடைய பேச்சே சொல்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.