Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியை கைப்பற்றும் கனவு இலகுவாக நிறைவேறுமா?

Featured Replies

"கிளிநொச்சி நகர எல்லையில் இருந்து மிகக் குறுகிய தூரத்திலேயே நிற்கிறோம். அங்குள்ள கட்டடங்களைக் கூட எம்மால் பார்க்க முடிகிறது. கிளிநொச்சி மீதான முதல்தாக்குதல் அடுத்தவாரம் ஆரம்பிக்கும்' என்று இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன.

இதன்பின்னர் கடந்த வாரத்தில் கிளிநொச்சி நகர மையப் பகுதிகளைக் குறிவைத்துவிமானப்படையின் கிபிர், மிக்27 போர் விமானங்களும் பல்குழல் பீரங்கிகள்மற்றும் ஆட்டிலறிகளும் குண்டுகளைக் கொட்டித் தீர்த்தன. இப்பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருந்த போது கூட,

கிளிநொச்சியை அதிர வைக்கும்வகையிலான ஷெல் தாக்குல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், நூற்றுக்கணக்கான ஷெல்கள் வீழ்ந்து வெடிப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.

இவையெல்லாம் கிளிநொச்சி மீதான இறுதித் தாக்குதலுக்கான முன்னோட்டமாகவே தெரிகிறது. எப்படியாவது புலிகளின் நிர்வாகத் தலைநகராகப் பார்க்கப்பட்டு வந்த கிளிநொச்சியை இந்த வருட இறுதிக்குள் பிடித்து விடுவது என்று இலங்கையின் அரசியல், இராணுவத் தலைமைகள் முடிவு கட்டியிருக்கின்றன. இந்தநிலையில், அடுத்து வரும் நாட்களில் கிளிநொச்சிக்கான உக்கிர சமர்வெடிக்கப் போவது மட்டும் உறுதியாகியிருக்கிறது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் இலக்கிற்காக, புலிகளை முறியடிக்கும் நோக்கில் புதிய படையினரையும் படைப்பிரிவுகளையும் முன்னரங்க நிலைகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்ற போதிலும், படைத்தரப்பு பாரிய ஆளணிப் பற்றாக்குறையைச்சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.

வன்னியின் மேற்கு களமுனையில் படையினர் அகலக்கால் விரித்து நிலைகொண்டிருக்கின்ற நிலையில் புலிகளின் எதிர்த்தாக்குதல்களின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. இதனால் படைத்தரப்புக்கு ஆளணிப் பற்றாக்குறை தீவிர மடையத்தொடங்கியிருக்கிறது. கைப்பற்றிய பிரதேசங்களின் பாதுகாப்புக்கு பெருமளவு படையினரை நிறுத்தவேண்டியிருப்பதாலும், புலிகளின் தாக்குதல்களில் கொல்லப்படும் காயமடையும்படையினரின் தொகை கணிசமாக அதிகரித்திருப்பதாலும் 57ஆவது, 58ஆவது டிவிசன்கள்பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 155 படையினர் கொல்லப்பட்டு 983 படையினர் காயமுற்றிருப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அறிவித்திருந்தார். இது அண்மைக்காலத்தில் படையினருக்கு ஏற்படுத்தப்பட்ட உச்சக்கட்ட இழப்பாகும். கிட்டத்தட்ட இராணுவத்தின் இரண்டு பற்றாலியன்கள் இந்த ஒரு மாதத்தில் களத்தில் இருந்து அகற்றப்பட்டிருக்கின்றனர். இதில் குறைந்தது ஒரு பற்றாலியனாவது களத்துக்கு மீளத்திரும்ப வாய்ப்பில்லை. காயமுற்ற படையினர் களம் திரும்ப நீண்டகாலம் எடுக்கலாம். கடந்தமாதம், நிலைமை அதை விட மோசமானதாகவே இருந்தது.

குறிப்பாக மோதல்களில்காயமடையும், கொல்லப்படும் படையினரின் தொகை கணிசமாக அதிகரித்திருப்பதை படைத்தரப்பின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. இது ஆளணிவளப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கின்ற நோக்கிலும், கிளிநொச்சியைக் கைப்பற்றுகின்ற நகர்வுகளைத் துரிதப்படுத்தும் நோக்கிலும் புதியதொரு பிரிகேட்உருவாக்கப்பட்டு 57ஆவது டிவிசனில் இணைக்கப்பட்டிருக்கிறது. மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் (சூல டயஸ்) தலைமையிலான 57ஆவது டிவிசனில் இதுவரை 3பிரிகேட்களே இருந்து வந்தன. கேணல் ரவிப்பிரிய தலைமையிலான 571 பிரிகேட், கேணல் சேனாரத் பண்டாரதலைமையிலான 572 பிரிகேட், லெப்.கேணல் பிரதாப் திலகரட்ண தலைமையிலான 573பிரிகேட் ஆகியனவே இதுவரையில் செயற்பட்டு வந்தன.

ஆனால் கடந்த புதன்கிழமை (01) முதல் புதிதாக உருவாக்கப்பட்ட 574 பிரிகேட் உத்தியோகபூர்வமாக இயங்க ஆரம்பித்திருக்கிறது. இந்த பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக, 11ஆவது இலகு காலாற்படை பற்றாலியனின்தளபதியாக இருந்த லெப்.கேணல் சேனக விஜேசூரிய நியமிக்கப்பட்டிருக்கிறார். லெப்.கேணல் சேனக விஜேசூரிய கடந்த 2006 ஓகஸ்ட் மாதம் புலிகள் மூதூரில் பாரியதாக்குதலைத் தொடங்கிய போது கட்டைபறிச்சானில் இருந்த 7ஆவது இலகு காலாற்படை பற்றாலியனின் துணைத் தளபதியாகப் பணியாற்றியவர். அந்த முகாம் மீதான தாக்குதலை முறியடிப்பதில் தீவிர பங்காற்றியதால், இவர் வன்னிக் களமுனையில் 11ஆவது இலகு காலாற்படையின் பற்றாலியன் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது படைப்பிரிவு பாலம்பிட்டி, கல்விளான், துணுக்காய்,முழங்காவில், கரம்பைக்குளம் போன்ற பகுதிகளில் முன்னகர்வுகளை மேற்கொண்டுவந்தது.

57-4 பிரிகேட்டில் 2500 படையினர் இருப்பதாகவும், இத்தோடு சேர்த்து மேஜர்ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான 57ஆவது டிவிசனின் ஆளணிப் பலம் 10,000 ஆகஅதிகரித்திருப்பதாகவும் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருப்பது சுத்தப் பொய். அதுமட்டுமன்றி இப்போது உருவாக்கப்பட்டிருக்கின்ற 574 பிரிகேட்டில் ஆக மொத்தம்3 பற்றாலியன்களே இணைக்கப்பட்டிருக்கின்றன. லெப்.கேணல் ரஞ்சித் அபேரட்ண தலைமையிலான 7ஆவது இலகு காலாற்படை, லெப்.கேணல் ஜெகத் கொடித்துவக்கு தலைமையிலான 10ஆவது இலகு காலாற்படை, மேஜர் தம்மிக்க திசநாயக்க தலைமையிலான 16ஆவது சிங்கறெஜிமென்ட் ஆகியனவே அவை.

கல்விளான், துணுக்காய், உயிலங்குளம் வரையானநகர்வுகளில் 572 பிரிகேட்டில் இருந்த 7ஆவது இலகு காலாற்படையும், கடந்த மாதஇறுதிவரை அதே பிரிகேட்டில் இருந்த 10ஆவது இலகு காலாற்படையும் இந்தக் களமுனைக்குப் புதியவை அல்ல. 1997இல் உருவாக்கப்பட்ட 16ஆவது சிங்க றெஜிமென்ட் மட்டுமே இந்தப் போர் முனையில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கின்ற பற்றாலியன் ஆகும். இலங்கை இராணுவத்தில் ஒரு பற்றாலியனில் ஆகக் கூடியது 650 படையினருக்கு மேல்இல்லை. அதுவும் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற 574 பிரிகேட்டில் 2000பேர் கூடக்கிடையாது. அவற்றில் இரு பற்றாலியன்கள் அதே டிவிசனைச் சேர்ந்தவையாக இருக்கின்ற போது, 57ஆவது டிவிசனில் 2500 மேலதிக படையினர் சேர்க்கப்பட்டு அதன் பலம் 10,000 ஆகஅதிகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதெல்லாம் வெறும் பிரசாரமே.

இந்த ஆளணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் நோக்கில், இராணுவத்தால் கடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட 3ஆவது கட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கை செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்த போதும் பெரியளவில் அதற்கு வரவேற்புக் கிடைக்கவில்லை. 10,136 பேர் மட்டுமே புதிதாக இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். இதனால் இம்மாதம் 1ஆம் திகதி முதல் டிசம்பர் வரையான காலத்தில் மேலும் 14,000படையினரை படைகளில் சேர்க்கின்ற புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகியிருக்கிறது. இது வன்னிச் சமரில் படைத்தரப்பு எதிர்கொண்டு வரும் பாரிய ஆளணிச் சிக்கலையும், புலிகளின் தரப்பில் இருந்து எதிர்கொள்ளப்படும் நெருக்கடியையும் தெளிவாக உணர்த்துகிறது.

புலிகளின் ஆளணி வளம் சிதைந்து குறைந்து போய்க் கொண்டிருப்பதாக இராணுவத்தரப்பு சொல்லிக் கொண்டே படைத்தரப்பின் ஆளணி வளத்தை அதிகரிப்பதானது விந்தையான செயலாகவே பார்க்கப்படுகிறது. தற்போது அக்கராயன்குளத்துக்கு தெற்கு மேற்குப் பகுதிகளில் 571 பிரிகேட்டும், அக்கராயன் குளத்துக்கு கிழக்கு மற்றும் கொக்காவிலுக்கு வடக்கே 572 பரிகேட்டும், கொக்காவில் மேற்கு மற்றும் அதற்கு தெற்காக 574 பிரிகேட்டும், மாங்குளம்நோக்கி 573ஆவது பிரிகேட்டும் இப்போது முன்னேற்ற நகர்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. கடந்தவாரம் மாங்குளத்துக்கு வடமேற்காக 7கி.மீ தொலைவில் உள்ளபனிக்கன்குளத்தில் புலிகளின் விமான ஓடுபாதையை லெப்.கேணல் ரஞ்சித் அபேரட்ணதலைமையிலான 7ஆவது இலகு காலாற்படை பற்றாலியன் கைப்பற்றியதாக படைத்தரப்புஅறிவித்திருந்தத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.