Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மீண்டும் தாக்குதல்!

Featured Replies

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை தனுஷ்கோடி வரை துரத்தி வந்து இலங்கை கடற்படை தாக்கியது. அதனால் ராமேஸ்வரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அங்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது சர்வதேச கடல் பகுதியில் இந்திய, இலங்கை கூட்டுப்படை ரோந்துப் பணி மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. ஆனால், கூட்டுப்படை ரோந்து பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் அது தேவையில்லை என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி நேற்று கடிதம் எழுதியுள்ளார். இந்திய கடற்படை, கடலோர காவல்படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, தமிழக மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறும் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 504 படகுகள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றன. நேற்று மாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையின் 30 பிளாஸ்டிக் ரோந்து படகுகள் அதிவேகத்தில் அங்கு வந்தன. அதைப் பார்த்ததும் ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளை திருப்பினர்.

சில படகுகளை பிடித்த இலங்கை கடற்படையினர், அதில் இருந்த மீன்கள், வலைகளை பறித்துக் கொண்டனர். பின்னர் மீனவர்களின் படகுகளை தனுஷ்கோடி வரை துரத்தி வந்து தாக்கினர். தப்பிவந்த மீனவர் ஆல்வின் கூறுகையில், கடலில் கூட்டு ரோந்து நடவடிக்கை எடுக்கப்படும் வெளியுறவுத்துறை அமைச்சர் இப்போதுதான் அறிவித்தார்.

ஆனால், இலங்கை கடற்படையினர் தனுஷ்கோடி கரை வரை எங்களை துரத்தி வந்தனர். இந்திய கடல் பகுதிக்குள் நுழைய அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இதே நிலை தொடர்ந்தால் மீனவர்கள் தொழிலை விட்டுவிட்டு எங்காவது பஞ்சம் பிழைக்க செல்வதை தவிர வேறு வழியில்லை என்றார்.

http://www.tamilseythi.com/tamilnaadu/tami...2008-10-05.html

  • கருத்துக்கள உறவுகள்

ஓ பிரச்சனை அப்பிடியா ?? மன் மோகனிற்கு ஒரு தந்தி அடிக்கவும். :icon_mrgreen:

இலங்கைத்தமிழர்கள் பாதிக்கப்படும்போது பிறமக்களிடம் ஆதரவு எதிர்ப்பார்ப்பதுபோன்று

மற்றவர்களுக்கு பாதிப்பு வரும்போது நாமும் அவர்களுக்காக குரல்கொடுக்கபழகினால் என்ன?

இது ஒரு வித்தியாசமாக எங்கள் அணுகுமுறையாக எங்களுக்கு மேலும் பலன் கொடுக்கும்...

இனி புலம் பெயர்தமிழ்மக்கள் எங்களது போரட்டத்தில் பொது எதிரியான இலங்கைப்படையினர்

எதிராக பாதிக்கப்படும் தமிழ்னாட்டுமீனவர்களுக்கு ஆதரவை கொடுப்போம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.