Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழப் போர்க்களம் உண்மை நிலவரம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழப் போர்க்களம்

உண்மை நிலவரம் என்ன?

- பழ. நெடுமாறன்

விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள வன்னிப் பகுதி கிளி நொச்சி ஆகியவற்றைக் கைப்பற்றும் நோக்கத்துடன் கடந்த பல மாதங்களாக சிங்களப் படை பல்வேறு முனைகளில் படை நகர்வுகளைச் செய்து வருகிறது. இதையொட்டி சிங்கள இராணுவம் வெற்றிகரமாக முன்னேறி வருவதாகவும் புலிகள் பின்வாங்குவதாகவும் விரைவில் கிளிநொச்சி கைப்பற்றப்படும் என்றும் சிங்கள அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்ட தாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன. இவற்றில் உண்மை என்ன? என்பதை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்.

வன்னிப் பகுதியில் வாழும் மக்களை அகதிகளாக விரட்டியடித்து அவர்களின் மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சிங்களப்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் புலிகள் அந்தப் படையினரை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்து வருகின்றனர் என்பதுதான் உண்மையான செய்தியாகும். மன்னாரில் இருந்து பூநகரியை நோக்கி முன்னேறிய சிங்களப்படையினர் மிகக்கடுமையான இழப்புகளை கடந்த ஒருவாரத்தில் சந்தித்துள்ளனர். நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டும் அதைவிட பன்மடங்கனாவர் படுகாயமடைந்தும் களமுனையில் இருந்து அகற்றப் பட்டுள்ளனர். அதைப்போல வெள்ளாங் குளம் பகுதியிலிருந்து முன்னேற முயன்ற சிங்களப் படையினரை விடுதலைப்புலிகள் விரட்டியடித்துள்ளனர்.

சிங்களப் படை அகலக் கால் வைப்பதும் அதனால் தோல்விகளைச் சந்திப்பதும் வரலாறாக உள்ளது என விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அறிவித்துள்ளார். கடந்த ஒருவார காலத்தில் பல்வேறு தாக்குதல் முயற்சி களில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நூற்றுக்கு மேலான சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக் கணக்கானவர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் வழக்கம்போல் இந்த எண்ணிக்கையை சிங்கள அரசு குறைத்து கூறிவருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கு அதிகமான சிங்கள வீரர்கள் ராணுவத்திலிருந்து தப்பி யோடியுள்ளனர். எந்த நாட்டு இராணுவத்திலிருந்தும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிபவர்களை இராணுவத் தலைமை விரட்டிப்பிடிக்கும். இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை விதிக்கும். ஆனால் சிங்கள அரசு தப்பி ஓடியவர் களை திரும்ப வருமாறும் எவ்விதத் தண்டனையும் விதிக்கப்படாது என்றும் அவர்கள் படையில் இல்லாத காலத்திற்கும் ஊதியம் வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்கிறது. ஆனாலும் எவ்விதப் பயனும் இல்லை.

சிங்களப் படை வெற்றிமேல் வெற்றிபெறுகிறது என்று சொன்னால் ஆயிரக்கணக்கான படைவீரர்கள் தப்பி ஓடுவது ஏன் என்ற கேள்விக்கு சிங்கள அரசினால் பதில் கூறமுடியவில்லை.

சிங்கள இராணுவத்துக்கு புதிதாக ஆள் சேர்க்கவும் மிக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் புதிதாக யாரும் படையில் சேரவும் முன்வரவில்லை. "புலிகள் பலவீனப்படுத்தப்பட்டுவிட்டா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.