Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணாநிதியின் நிலைப்பாட்டுக்கு மருத்துவர் இராமதாஸ் ஆதரவு

Featured Replies

கருணாநிதியின் நிலைப்பாட்டுக்கு மருத்துவர் இராமதாஸ் ஆதரவு

[புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 09:13 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் செத்து மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுகின்ற ஒரு விடயத்திலாவது இங்குள்ள தமிழர்கள் ஒன்றுப்பட்டிருப்போம். நமக்குள்ளே சச்சரவுகள் தேவையில்லை. எல்லோரும் ஒன்றுபட்ட நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையை அணுகுவோம் என்று முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள வேண்டுகோளை முழுமனதோடு வரவேற்கிறேன். முதலமைச்சரின் இந்த வேண்டுகோள் பேச்சளவில் நின்று விடக்கூடாது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பிரச்சினையில் இங்கே நமக்குள் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை வெளிப்படுத்துகின்ற வகையில் தாமதமின்றி செயற்பட வேண்டும். இலங்கை தமிழர்களை காக்கும் பிரச்சினையில் இப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை வலுப்படுத்துகின்ற வகையில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் இயக்கங்களையும் ஓரணியில் திரட்டி, இலங்கை மண்ணில் தமிழினத்தை ஒழித்துக்கட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மூர்க்கத்தனமாக போரிட்டு வரும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் புகட்டுவதற்கான நடவடிக்கைகளை வகுத்து செயற்பட தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்.

தமிழர்கள் எங்கே செத்தாலும் அவர்களும் தமிழர்கள் தான். அந்த தமிழர்களை காப்பாற்றுகின்ற பொறுப்பு தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கும், அவர் தலைமையிலான அரசுக்கும் இருக்கிறது என்று நான் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறேன். முதலமைச்சர் கருணாநிதி இந்த பொறுப்பை உணர்ந்து, கடமையாற்ற முன்வந்திருக்கிறார் என்பதை அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது. அதற்காக அவரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

புதுடில்லியில் உள்ள இலங்கை தூதுவரை அழைத்து இந்தியாவின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைத் தூதுவரை அழைத்து பேசியிருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது. இப்படி அதிகாரிகள் மட்டத்தில் பேசி பயனில்லை. பிரதமரே நேரடியாக சிறிலங்கா அரச தலைவருடன் தொடர்பு கொண்டு இந்தியாவின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

இலங்கையில் இராணுவ நடவடிக்கைகளையும், இனப்படுகொலைகளையும் நிறுத்த வேண்டும். அமைதி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இனி எத்தகைய துன்பங்களுக்கும் ஆளாகக்கூடாது என்று சிறிலங்கா அரச தலைவரிடம் பிரதமர் எச்சரித்துக்கூற வேண்டும். இனி இலங்கைத் தீவில் துப்பாக்கி வெடிசத்தங்கள் கேட்கக்கூடாது. இனிமேல் ஒரு குண்டு கூட அங்கே வெடிக்கக்கூடாது.

ஒரு தமிழன் கூட இனி சிங்கள போர்ப்படையினரால் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகக் கூடாது என்றும் சிறிலங்கா அரச தலைவரிடம் நமது பிரதமர் நேரடியாக எச்சரித்துக்கூற வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் ஆறரை கோடி தமிழர்களின் சார்பில் முதலமைச்சர் வற்புறுத்திக்கூற வேண்டும்.

இலங்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது செய்தி ஊடகங்கள் வாயிலாக மட்டுமே நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இப்படி அரைகுறையாக கிடைக்கும் தகவல்களையே நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக தமிழர் தேசியக கூட்டணிச் சேர்ந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக அழைத்து முதலமைச்சர் பேச வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் படும் அல்லல்களை அவர்கள் வாயிலாக அறிந்துகொள்ள வேண்டும். அத்துடன் அவர்களை டில்லிக்கு அனுப்பி வைத்து பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வழிகாட்டி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கச்செய்து நிலைமையை விளக்குவதற்கான வாய்ப்பினை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

அத்துடன் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சிங்களப் படையினரின் அட்டூழியங்களையும், அத்துமீறல்களையும் நேரில் அறிந்து வர இங்கிருந்து நாடாளுமன்ற குழுவை அனுப்பப்பட வேண்டும். தேசியக்கட்சிகளின் நாடாளுமன்ற பிரநிதிகளும் இடம்பெற்று செல்ல வேண்டும்.

இலங்கை தமிழர்கள் அவர்களின் சொந்த மண்ணிலேயே அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள முகாம்களுக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து நிலைமைகளை அறிந்துவர செய்ய வேண்டும். அவர்கள் கொடுக்கின்ற அறிக்கையின் அடிப்படையில் இந்திய அரசு உடனடியாக மனிதாபிமான உதவிகளை செய்ய வற்புறுத்த வேண்டும்.

இலங்கையில் நடந்து வரும் தமிழின அழிப்பு போர் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட இங்குள்ள தமிழர்கள் எல்லாம் ஒன்றுபடுவோம். ஓரணியில் திரள்வோம். தமிழ் இனத்தை காக்கும் பணியில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் அவர் தலைமை ஏற்க முன் வர வேண்டும். இதில் அவருக்கு தமிழகமே துணை நிற்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.