Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களவர்களைக் கொன்றவர்களை அமைச்சர்கள் கட்டியணைத்து வரவேற்பதாக பாலித ரங்க பண்டார விசனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களைக் கொன்றவர்களை அமைச்சர்கள் கட்டியணைத்து வரவேற்பதாக பாலித ரங்க பண்டார விசனம்

ஜானக பெரேராவுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து எதுவும் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவும் உறுதிப்படுத்திய நிலையில், இன்று ஜானக பெரேராவின் படுகொலை தொடர்பில் ஐ.தே.க.புலிகளை குற்றம் சாட்டவில்லையென அரசு கூறுவதையிட்டு கவலையடைவதாக ஐ.தே.க. எம்.பி.பாலித ரங்கபண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

கிழக்கு மாகாணத்தில் அரசின் உத்தரவுக்கமைய புலிகளிடம் சரணடைந்த 601 பொலிஸாரைக் கொன்றவர்கள்; கிழக்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களை படுகொலை செய்தவர்கள், மதகுருமார்களை சுட்டுக் கொன்றவர்கள், கடத்தல், கப்பங்களுடன் தொடர்புபட்டவர்கள் இன்று பாராளுமன்றம் வந்துள்ளனர்.

இவர்களை இங்குள்ள அமைச்சர்கள் கட்டியணைத்து வரவேற்கின்றனர். இவர்கள் பயங்கரவாதிகளுக்கு வெள்ளைச்சுண்ணாம்பு அடிக்க முற்படுகின்றனர்.

தற்போது பிள்ளையானையும் கருணாவையும் ஜனாதிபதி அணைத்து வைத்துள்ளார். புலிகள் மீது பயணிக்காதீர்கள் என்பதே நாம் அவருக்கு கூறக்கூடிய புத்திமதி. எமது ஜனாதிபதி பிரேமதாசா பாபு என்பவரை நன்கு நெருக்கமாக வைத்திருந்தார் ஆனால் அந்த பாபுவாலேயே பிரேமதாசா கொல்லப்பட்டார்.

அதே போன்று ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக்காவும் வசந்த ராஜா என்பவரை தனக்கு நெறுக்கமாக வைத்துக்கொண்டு அவரை ரூபவாஹினிக்கும் தலைவராக்கினார். இறுதியில் என்ன நடந்தது?

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த புலிகள்தான் அதிகளவில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை அரசு மறந்து விடக்கூடாது.

ஜானக பெரேராவுக்கு விடுதலைப்புலிகளால் எந்த வித அச்சுறுத்தலும் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் அன்று தெரிவித்திருந்னர். ஆனால் இன்று ஜானக பெரேரா தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டபின் விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் என்று கூறுவதுடன் எம்மையும் கூறச்சொல்கின்றனர்.

ஜானக பெரேராவின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அரசு அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேயின் படுகொலை விசாரணையை மூடி மறைத்தது போல் இதனையும் மூடிமறைக்கப் பார்க்கின்றது.

அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே பிரதமராவதற்கு ஆசைப்பட்டார். அதனால் அவர் பௌத்தனாக மாறக்கூடத் தயாராகவிருந்தார். இந் நிலையிலேயே அவர் கொல்லப்பட்டார். அவரின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது.

மகேஸ்வரன் எம்.பி.படுகொலை தொடர்பான விசாரணைக்கு என்ன நடந்தது? அரசு எல்லாவற்றையும் மூடி மறைக்கப்பார்க்கிறது.

இந் நிலையில் அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பியதால் ஐ.தே.க.விற்கும் அரச தரப்பினருக்குமிடையே கடுமையான வாக்கு வாதம் எற்பட்டது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.