Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தத்தை நியாயப்படுத்த அமைச்சர் ரோஹித்த இந்தியாவிற்கு அவசர விஜயம்:

Featured Replies

யுத்தத்தை நியாயப்படுத்த அமைச்சர் ரோஹித்த இந்தியாவிற்கு அவசர விஜயம்:

தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தத்தை நியாயப்படுத்தும் நோக்கில், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம இந்தியாவிற்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் இடம்பெற்றும் வரும் பாரிய மனிதப் பேரவலம் குறித்து தலைநகர் டெல்லியிலிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து அமைச்சர் இந்தியா செல்லவுள்ளார்.

இந்திய வெளிவிவாகர அமைச்சர் பிரணாப் முகர்ஜீ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயண் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

வடக்கில் இடம்பெற்றுவரும் இராணுவ முன்நகர்வுகள் மற்றும் மனிதாபிமான பணிகள் தொடர்பில் இந்திய மத்திய அரசிற்கு இதன் போது விளக்கமளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ அனுப்பி வைக்கப்பட இருந்ததாகவும், பின்னர் வெளிவிவகார அமைச்சரை அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இராணுவ நடவடிக்கைகளினால் வடக்கில் தமிழ் மக்கள் பாரிய இடர்களை எதிர்நோக்கியிப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இந்தியாவிற்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இந்த செயல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிருப்தியடைந்திருப்பதாக அலரி மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிராசத்திடம் ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகள் இந்திய மத்திய அரசுக்கு விடுத்த அழுத்தம் காரணமாகவே எம்.கே.நாராயண் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

நாளுக்கு நாள் சிறுபான்மை மக்களது பாதுகாப்பு குறித்து இலங்கையில் சந்தேகம் நிலவுவதாகவும், என்ன வகையிலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசு இலங்கைக்கு அறிவித்துள்ளது.

சிவிலியன்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால் இலங்கை அரசாங்கத்துடனான தற்போதைய உறவுகள் குறித்து மீள ஆராய நேரிடும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாதென அண்மையில் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கததின் யுத்த முன்னெடுப்புக்கள், வன்னி சிவிலியன்கள் தொடர்பிலான மனிதாபிமான பணிகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இந்திய மத்திய அரசிற்கு விளக்கமளித்து யுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் ரோஹித்த பொகொல்லாகமவின் விஜயம் அமைந்திருக்கும் என பிரபல ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பிரச்சனையில இந்தியாவுக்கு அவ்வப்போது கரிசனை ஏற்படும். தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் நெருக்கினால் பாதுகாப்பு ஆலோசகர் உடனே இலங்கையிடம் கேள்வி கேட்பார். யாரும் நெருக்கவில்லையென்றால் தமிழின அழிப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்தச் சொல்லி இலங்கைக்குப் பச்சைக் கொடி காட்டுவார்.

இதற்கெல்லாம் உரிய பரிசுகளை இலங்கையரசு சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கும். இதுவே தொடர்கிறது. அவ்வப்போது சில நிறுத்தல்கள் பிறகு இனச்சுத்திகரிப்புத் திட்ட அமுலாக்கம தொடரும்;.

நாம் யாரிடம் போவோம்.

தமிழகம் மட்டும் இல்லையென்றால் இந்தியாவும் இலங்கையும் கூட்டாக எம்மை முடிவு கட்டியிருக்கும். தமிழகத்தின் நெருக்குவாரமில்லாமல் இந்திய மத்திய அரசும் பாதுகாப்பு ஆலோசகர்களும் எமக்காக ஒரு போதும் குரல் கொடுத்ததில்லை, கொடுக்கப் போவதுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.