Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை யுத்தம் உறுமுகிறது இந்தியா

Featured Replies

இலங்கை யுத்தம் உறுமுகிறது இந்தியா

* ஆனால் முடிவு என்ன?

விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையை தடுத்துநிறுத்துவதற்கான இந்தியாவின் அரசியல் அழுத்தம் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தில் அதிகளவு மாற்றத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், ஆசியாவின் நீண்டகாலக் கிளர்ச்சிகளிலொன்றான இந்தப் பிரச்சினையை தன்னால் முடிவுக்கு கொண்டுவர முடியுமென்று இலங்கை அரசு அதிகளவுக்கு நம்புகின்றது.

உள்நாட்டில் தமிழ் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் 1980 களில் மேற்கொண்ட அனர்த்தத்தை ஏற்படுத்திய தலையீட்டை திரும்பவும் மேற்கொள்ள இந்தியா தயங்குவதுடன் இராணுவ நடவடிக்கையை இலங்கை சுதந்திரமாக முன்னெடுக்க விட்டுள்ளது. இந்த இராணுவ நடவடிக்கையானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் தளத்துக்கு வலுவூட்டியுள்ளது.

"இராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான சாத்தியம் இப்போது இல்லை. ஏனென்றால் இதுவே அரசாங்கத்தின் முக்கியமான அரசியல் நிகழ்ச்சி நிரல்' என்று யூரேசியா குரூப்பின் ஆய்வாளர் மரியா கூசிஸ்ரோ கூறியுள்ளார்.

"இந்தளவு தூரத்திற்கு அவர்கள் போயிருக்கும் போது பின்னோக்கி செல்வது எதிர்மறையானதாக அமையும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மோதல் அதிகரித்திருப்பதையிட்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார். ஆனால், அவர் விடுத்திருக்கும் அழைப்பானது இந்தியாவின் நடைமுறையிலுள்ள இராஜதந்திர ரீதியான நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாகவே உள்ளது. 2009 மேயில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளதால் தேர்தலுக்கு முன்னரான நடவடிக்கைகளே இவையென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய அரசின் தமிழ்நாட்டு பங்காளிகளிடமிருந்து மன்மோகன்சிங் அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளார். இலங்கையிலுள்ள தமிழர்களை பெரும்பான்மையினரான சிங்களவர்கள் அழிக்க முயன்று கொண்டிருப்பதாக தமிழக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இலங்கையின் யுத்தம் தொடர்பாக மன்மோகன்சிங் விமர்சித்திருந்தாலும் இலங்கையை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டோமென்ற இலங்கையின் நிலைப்பாட்டுக்கு மன்மோகன்சிங் ஆதரவளித்திருக்கிறார்.

"இந்தியா சகல தரப்புடனும் விளையாட விரும்புகின்றது. எப்போதுமே அதனை அது செய்து வந்தது' என்று அமெரிக்காவின் தனியார் புலனாய்வு நிறுவனமான ஸ்ரற்போர்ன் ஆய்வாளர் ரேவாஃபாலா கூறியுள்ளார்.

அத்துடன், அதிகளவுக்கு அரசியல் ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் புலிகள் இராணுவ ரீதியாக வலுவிழந்து போவதிலிருந்தும் பயன்பெற முடிவதுடன் அதேசமயம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இசைவாக செயற்படவும் அவர்களால் (இந்தியா) முடியும் என்றும் ரேவா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பாக இந்தியாவின் இரட்டைத் தன்மையான அணுகுமுறையை சுட்டிக்காட்டுவதாக கடந்த மாதம் இரு இந்திய ராடார் தொழில்நுட்பவியலாளர் காயமடைந்த சம்பவம் குறித்து டில்லியிடமிருந்தும் கொழும்பிடமிருந்தும் வெளிக்கிளம்பிய விசனத்துடனான மறுதலிப்புகள் கோடிட்டுக்காட்டுகின்றன.

இந்தியாவின் பாரத் எலக்ரோனிக்ஸ் நிறுவனம் இராணுவத்துக்கு விற்பனை செய்த ராடார்களுக்கு பராமரிப்புச் சேவை வழங்கும் ஆட்களே அவர்களென பின்னர் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

அத்துடன், புலிகளின் படகுகளை இலங்கை இடைமறிப்பதற்கும் இந்தியா உதவியது.

வடபகுதியில் இடம்பெறும் மோதலை முடிவுக்கு கொண்டுவராவிடின் 40 எம்.பி.க்களும் பதவி விலகுவரென தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் அச்சுறுத்தியிருக்கும் நிலையில் இந்தியாவின் நேரடித் தலையீடு சாத்தியம் இல்லையென ஸ்ரற்போலின் ரேவா கூறுகிறார்.

தனது எல்லைக்குள் அதிகளவிலான அகதிகள் படையெடுப்பதையே இந்தியா விரும்புவதாக விடயம் அமையுமென முன்னாள் இந்திய இராஜதந்திரியும் இலங்கை இந்திய உறவுகள் தொடர்பான நிபுணருமான ஜி. பார்த்தசாரதி கூறியுள்ளார். ஏனெனில், 1983 இற்குப் பின்னர் பல்லாயிரக்கணக்கான அகதிகள் பாக்கு நீரிணையை கடந்து தமிழகத்துக்கு சென்றுள்ளனர்.

கடந்த மாதம் ஐ.நா. பொதுச் சபை அமர்வின் போது ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்திக்க மன்மோகன் சிங் மறுத்துவிட்டார். தமிழர் பிரச்சினை தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படாததால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடே மன்மோகன் சந்திக்க மறுத்தமையென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், கடந்த வாரம் சர்வகட்சி மாநாட்டை கூட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென உறுதியளித்திருந்தார்.

அதேசமயம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தும் தீர்வுக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ முன்வைக்கவுள்ள தீர்வுக்குமிடையில் அதிகளவு வேறுபாடு இல்லையென இலங்கையின் சிரேஷ்ட அரச அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

http://www.thinakkural.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.