Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தில் பேரெழுச்சி, ஈழப் போராட்ட வரலாற்றில் பெரும் மாறுதல்களைத் தோற்றுவித்துள்ளது.

Featured Replies

25 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழகத்தில் உருவாகியுள்ள பேரெழுச்சி, ஈழப் போராட்ட வரலாற்றில் பெரும் மாறுதல்களைத் தோற்றுவித்துள்ளது. தடுத்து நிறுத்தும் தற்காப்புச் சமரினை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள்,

அழித்தே தீருவோமென வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் தென்னிலங்கை மற்றும் இடம்பெயரும் மக்களென இறுக்க நிலையடைந்துள்ள களநிலைமைகள் மோசமடையும் போது தமிழக இன உணர்வலைகள் எழுந்து நிற்கின்றன.

தமிழின அழிப்பிற்கு, படைக்கல உதவி புரிந்த இந்திய அரசின் மறைமுகத் தலையீடு, வவுனியா படைத்தளம் மீதான தாக்குதலின் போது அம்பலமானதால் தமிழக எழுச்சிக்கான அடித்தளம் தோற்றமுற்றது.

இந்திய பொதுவுடமைக் கட்சியின் உண்ணா விரதப் போராட்டத்தினூடாக பல செய்திகள், தமிழ் நாட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கெதிராக கம்யூனிஸக் கட்சிகள் முன்னெடுத்த நாடாளுமன்றப் போராட்டங்கள் வழங்கிய தாக்கங்கள், அக்கட்சியினர் குறித்த அரசியல் விழிப்புணர்வினை தமிழக மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களின் அவலநிலை பற்றிய செய்திகளும், தமிழக மக்களை துன்பத்திலாழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அ.தி.மு.க. தலைவி செல்வி ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் குறிப்பிட்ட இருவகைப்பட்ட முரண்நிலைக் கருத்துக்கள், பாரிய தாக்கத்தை தமிழக கட்சிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் அதேவேளை விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை அவர் நிராகரித்துள்ளார். இதனையடுத்து சர்வகட்சி கூட்டத்திற்கான அழைப்பொன்று தமிழக முதல்வரினால் விடுக்கப்பட்டது. அதனைப் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. நிராகரித்து, வலுவற்ற விளக்கங்களை முன்வைத்தது.

இருப்பினும் 14 ஆம் திகதி கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் மத்திய அரசை நோக்கி ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) ஸ்ரீலங்காவில் போர் நிறுத்தம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

2) இந்திய அரசு ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

3) போர் நிறுத்தம் நடைபெறாவிட்டால் இரண்டு வாரத்துள் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்.

4) போர் நிறுத்தம் நடைமுறைக்குள்ளாகி, பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்தோர்க்கான அடிப்படை மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு செய்ய முன்வர வேண்டும்.

5) உதவிகள், பாதிப்புற்றோரை நேரடியாகச் சென்றடைவதனை உறுதி செய்ய, சர்வதேசெஞ்சிலுவைச் சங்கத்தின் துணையினை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும்.

6) ஸ்ரீலங்கா கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்தி, நிலையான தீர்வொன்றை எட்டி, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த அழுத்தமான ஆறு தீர்மானங்களையும் எவ்வாறு மத்திய அரசு உள்வாங்கி, தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்பதே மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ள கேள்வியாகும்.

வருகிற 28 ஆம் திகதிக்கு முன்பாக போர் நிறுத்தம் ஏற்படக் கூடிய சூழலை இந்திய மத்திய அரசால் உருவாக்க முடியுமாவென்பது சந்தேகமே.

ஏற்கனவே விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பினைப் பலவீனப்படுத்த வேண்டுமென்கிற நிலைப்பாடு, இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் மத்தியில் ஆழமாக வேரூன்றி உள்ளது.

ஆனாலும் ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதுகெலும்பாகவும், ஆதர்ஷ சக்தியாகவும் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் விளங்குகிறார்கள்.

சர்வதேச சமாதான ஒப்பந்தங்களிலும் அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் தலைமையாக, விடுதலைப்புலிகள் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம், மிகத் தெளிவான உண்மையானது.

கிழக்குப் பின்னகர்வும் வன்னியில் மேற்கொள்ளும் தற்காப்புத் தாக்குதல் பரிமாணமும், ஆயுதப் போராட்டத் தலைமையின் பலவீனமான பகுதியாக எடை போடும் இந்திய அரசு, தமிழக அழுத்தங்களோடு ஆசியப் பிராந்தியத்தில் உருவாகும் அரசியல் மாற்றங்களையும் தவறாக எடைபோட முயற்சிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் ஸ்ரீலங்காவில் சீனா, பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரிக்கக் கூடாதென்கிற நிலைப்பாடு அவசியமான விடயமாகத் தென்படுகிறது.

தமிழக உறவினைச் சீர்குலைத்தால், ஆட்சியதிகாரம் பறிபோகும் நிலை தோன்றலாம்.

அதிகாரத்தைத் தக்கவைக்க இலங்கை மீது அரசியல் அழுத்தங்களைச் சுமத்தினால், போர்வெறி கொண்டு சன்னதமாடும் சிங்களம், தனக்கு எதிரான நிலைப்பாட்டை பகிரங்கமாக எடுத்து விடுமென்கிற அச்சமும் இந்திய மத்திய அரசிற்கு உண்டு.

கடந்த ஒரு சில நாட்களாக சிங்கள ஆட்சியாளர்கள் விடுக்கும் அச்சுறுத்தல்கள், அணி மாற்றத்திற்கான செய்திகளை முதன்மைப்படுத் துகின்றன.

தமிழ் நாட்டின் அழுத்தங்களுக்கு இசைவாக நடைபெறும் யுத்தத்தை நிறுத்த முடியாதென ஊடகத்துறை அமைச்சர் லஷ்மன் யாப்பா, அபேயவர்த்தன தெரிவித்த கருத்து குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்படாதவாறு, மிகுந்த புரிந்துணர்வோடு செயற்படும் அதேவேளை பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியாவின் ஆதரவை வேண்டி நிற்பதாகக் கூறி, மத்திய அரசை மேலும் இக்கட்டான நிலைக்குள் தள்ள இலங்கை முயற்சிக்கிறது.

அதேவேளை, தமிழகம் விரும்பும் போர் நிறுத்தத்திற்கான புறச்சூழலை, எவ்வாறு உருவாக்கலாமென்று இந்தியாவிற்கு அறிவுரை வழங்குகிறார் அமைச்சர் யாப்பா.

அதாவது விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து, பேச்சுவார்த்தை மேசைக்கு வரு மாறு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென்கிற மாற்றுச் சிந்தனையை சிங்களம் முன்வைத்துள்ளது.

ஆனாலும் விடுதலைப் புலிகள் குறித்த எந்தவொரு விடயமும், கலைஞரின் சர்வகட்சிக் கூட்ட தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்படவில்லையென

தமிழக எழுச்சி எனபது நெகிழ்ச்சியானது.

ஆனால் தமிழக எழுச்சியை இலங்கையை இந்தியாவுக்கு மேலும் அடிபணிய வைக்க தான் இந்திய அரசு பயன் படுத்துகிறார்கள் போலகிடக்கு...

சீனா, பாக்கிஸ்தான், ஐரோப்பாவோடை இலங்கையின் நெருக்கம் குறைய இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.. இராசீவ் காலத்தில் நடந்தது மீண்டும் அரங்கேற்றுகிறார்களோ எனும் சந்தேகம் தான் வலுக்கிறது...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.