Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைவர் பிரபாகரன் உருவப் பொம்மையை எரித்த காங்கிரஸார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் உருவப் பொம்மையை எரித்த காங்கிரஸார்

கடலூர்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர். இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கோஷமிட்டனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இலங்கை பிரச்சனை தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கடலூர் நடந்தது. மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசினர். மேலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவோரையும் கண்டித்தனர்.

செயற்குழு கூட்டம் முடிந்ததை அடுத்து புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உருவ பொம்மையை காங்கிரஸார் எரிக்க முயன்றனர். போலீஸார் அதை தடுத்து நிறுத்தி எரிக்க கூடாது என்று அனுமதி மறுத்தனர்.

அதற்கு, கட்சி அலுவலகத்துக்குள்தான் கொளுத்துவதாக கூறிய காங்கிரஸார், போலீஸாரை அங்கிருந்து வெளியேறும்படி கூறினர். பின்னர் பிரபாகரனின் கொடும்பாவியை எரித்தனர். அதை அலுவலகத்துக்கு வெளியில் கொண்டு வந்து போட்டனர்.

இதையறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை தலைவர் அறிவுடைநம்பி தலைமையில் அங்கு கூடிய அக்கட்சியினர், பிரபாகரன் கொடும்பாவியை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அறிவுடைநம்பி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவு, சிறுவர் எழுச்சி துணை செயலர், தொண்டரணி துணைச் செயலர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

- தட்ஸ்தமிழ்

குமரி அருகே பிரபாகரன் பேனர் அகற்றம்

கன்னியாகுமரி: பாவூர்சத்திரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் டிஜிட்டல் போர்டை போலீசார் அகற்றினர்.

குமரி மாவட்டம் கீழப்பாவூர் மைதானத்தில் பாவூர்சத்திரம் இளைஞரணி என்ற பெயரில் டிஜிட்டல் போர்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அதில் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்துடன் தமிழர் இன உணர்வு கொள், மத்திய அரசே, மத்திய அரசே, இலங்கை தமிழர்களை காப்பாற்று... தமிழீழ தலைவர்களை கொன்று குவிக்கும் ராஜபாக்சே அரசை கண்டிக்கிறோம். தமிழ் சமுதாயமே தமிழ் இனம் காக்க போராடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து கீழப்பாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் போலீசில் புகார் செய்தார். அனுமதியின்ற வைக்கப்பட்டிருந்த போர்டை போலீசார் விரைந்து வந்து அகற்றினர்.

- தட்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

வரும் தேர்தலில் காங்கிரஸ் எந்தக் கூட்ட்ணியில் போட்டியிட்டாலும் தோற்கடிக்கப்படவேண்டும். செய்வார்களா தமிழக வாக்காளர்கள்??!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத் தேர்தல் இந்த வருட இறுதியிலேயே வந்தாலும் வரும் என்று ஒரு கதை உலாவுகிறது. தமிழக உறவுகளே..! விரைந்து வருகிறது உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. தவறவிடாதீர்கள். தமிழின அழிப்புக்கு துணைபோகிற சக்திகளையெல்லாம் தூக்கிக் குப்பையில் விட்டெறியுங்கள். ஏதாவது ஒரு கூட்டணிக்குப் போடாமல் தமிழினக் காவலர்களின் கட்சிகளுக்கு உங்கள் வாக்குகளைச் செலுத்துங்கள். எதிர்கால அரசியலுக்கு தக்கதொரு வழிகாட்டியாக அமையட்டும்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.