Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் பின்னால் நிற்கும்: சத்யராஜ்

Featured Replies

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் பின்னால் நிற்கும்: சத்யராஜ்

[வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 09:56 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் சீமான்- அமீர் பின்னால் நிற்கும் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 'லாடம்' படத்தின் பாடல்கள் அடங்கிய குறுவட்டு வெளியீட்டு நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. எனது வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால், என்னால் இராமேஸ்வரம் போக இயலவில்லை.

ஈழத் தமிழர்களுக்காக, சென்னையில் நாளை (இன்று) மனித சங்கிலி நடைபெற இருக்கிறது. அதில் கலந்துகொள்ளாதவர்கள் குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை நான் வரவேற்கிறேன்.

அவர் சொன்னதுபோல், இந்த போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள். இதை கட்சி சார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசவில்லை. தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி-மொழி-இன பாகுபாடின்றி, அனைவரும் ஒட்டுமொத்த குரல் கொடுக்க வேண்டும்.

இயக்குநர்களான சீமான்-அமீர் ஆகிய இருவரையும் அரசியல் கட்சிகள் ஓரம் கட்டுகின்றன. அவர்கள் பேசியது சரியா, தவறா? என்று நான் கூறவில்லை. இந்த வி;டயத்தில் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவேண்டும்.

எனக்கு தனிப்பட்ட முறையில் இதுபோன்ற ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது, திரையுலகம் என் பின்னால் நிற்கவில்லை. திராவிடர் கழகமும், விடுதலைச் சிறுத்தைகளும்தான் எனக்கு உதவி செய்தார்கள்.

ஈழத் தமிழர்கள் நலனுக்காகத்தான் சீமானும், அமீரும் அப்படி பேசியிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பின்னால் அனைவரும் நிற்கவேண்டும் என்றார் அவர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள மனிதச் சங்கிலியில் பங்கேற்காத யாரும் தமிழ்நாட்டில் இருக்கவே தகுதியற்றவர்கள் என நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார். பிரபு சாலமன் இயக்கிய லாடம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று நடந்தது. விழாவில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பாடலை வெளியிட்டார். விழாவில் அவர் கூறியதாவது: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை எனது வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால் என்னால் போக இயலவில்லை.இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் நாளை முதல்வர் தலைமையில் மனித சங்கிலி நடக்க உள்ளது.

இதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தைதான் நான் வரவேற்கிறேன்.அவர் சொன்னது போல் இப்போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே லாயக்கற்றவர்கள். இதை கட்சி சார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசிவல்லை. தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி, மொழி இனபாகுபாடின்றி அனைவரும் ஒட்டு மொத்த குரல் கொடுக்க வேண்டும்.இயக்குனர் அமீர், சீமானுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது தேவையற்றது. அவர்கள் பேசியது சரியா, தவறா என்பதை விடுங்கள்.

அதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய தருணம் இதுவல்ல. இந்த விடயத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு தனிப்பட்ட முறையில் இது போன்ற ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது திரையுலகம் என் பின்னால் நிற்கவில்லை. திராவிடர் கழகமும், விடுதலை சிறுத்தைகளும்தான் எனக்கு உதவி செய்தன. ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் அமீரும் சீமானும் அப்படி பேசி உள்ளனர். அவர்கள் தொடர்ந்து பேசட்டும். நாம் அவர்களுக்கு ஆதரவாக பின்னால் நிற்க வேண்டும், என்றார் சத்யராஜ்

www.sankathi.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியராஜ் எப்பவும் தமிழருக்காக கதைக்கிறவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.