Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படையினரின் முன்னேற்றத்திற்கு சவாலாகும் பருவ மழை--சுபத்ரா

Featured Replies

கடந்த வாரம் அக்கராயன், வன்னேரிக் களமுனைகளில் படையினர் மழை வெள்ளத்துடன் போராடும் படங்கள் பாதுகாப்புத் தரப்பால் வெளியிடப்பட்டிருந்தன. சேற்றில் புதையுண்ட விநியோக ட்ரக்டர்கள், பிக்கப் வாகனங்கள், தண்ணீர்த் தாங்கிகள் போன்றவற்றை இந்தப் படங்கள் காட்டியிருந்தன.

கிளிநொச்சி, பூநகரி ஆகிய இரு கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. அதற்கு புலிகள் தவிர்ந்த தடையாக எழுந்திருப்பது வெளிநாட்டு நெருக்கடி ஒன்று. மற்றது பருவமழை.

வடக்கில் குறிப்பாக வன்னியில் ஏற்கெனவே மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. இது அடுத்து வரும் வாரங்களில் தீவிரமடையும். காட்டாற்று வெள்ளம் வன்னியின் வீதிகள், வயல் வரம்புகள் என்று பாராமல் கரைபுரண்டு ஓடும். தற்போது குறுக்கும் நெடுக்குமாக அங்குமிங்கும் அமைக்கப்பட்டிருக்கின்ற மண்ணணைகளும், தொடர் அகழிகளும் இந்த காட்டாற்று வெள்ளத்தின் வீரியத்தை அதிகரிக்கச் செய்யும்.

அத்தகைய சூழலில் படை நகர்வுகள் ஸ்தம்பித்துப் போய்விடும். பருவமழையின் பாதிப்புக்குள் சிக்கிவிடாமல் அதற்கு முன்னரே கிளிநொச்சி மற்றும் பூநகரி ஆகியவற்றைப் பிடித்து விட வேண்டும் என்பது முதல் நோக்கம்.

அடுத்தது, வெளிநாடுகளில் குறிப்பாக இந்தியாவில் இருந்து போரை நிறுத்துமாறு கோரி நடத்தப்படும் போராட்டங்களின் விளைவு குறித்து அரசாங்கம் அதிகமாக கவலைப்படுகிறது.

இந்தியா நிர்ப்பந்தம் கொடுத்தால் தட்டிக்கழிக்க முடியாது. அதற்கு முன்னரே கிளிநொச்சியைப் பிடித்து மேலாதிக்கத்தை நிலைநாட்டி விட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இந்த இரு காரணங்களின் அடிப்படையில் வடக்கில் சண்டைகள் தீவிரமடைந்திருந்தன.

இந்தச் சண்டைகள் மூன்று களமுனைகளை மையப்படுத்தியிருந்தன.

முதலாவது கிளிநொச்சி. இரண்டாவது நாச்சிக்குடா. மூன்றாவது வடபோர்முனை கிளாலி முகமாலை.

கிளிநொச்சி போர் அரங்கில் படையினரின் இப்போதைய முழுக் கவனமும் இருப்பது அக்கராயன் என்ற நகர் மீதுதான்.

அக்கராயன்குளத்துக்கு வடக்கேயும் கிளிநொச்சிக்கு தென்மேற்கே சுமார் 15 கி.மீ தொலைவிலும் இந்த நகரம் இருக்கிறது.

கிளிநொச்சியின் பாதுகாப்பு அரணாக அக்கராயனைப் புலிகள் மாற்றியிருந்தனர்.

அக்கராயனில் இருந்து வன்னேரிக்குளம் வழியாக நாச்சிக்குடா வரை 28 கி.மீ நீளமான மண்ணரண் தொடரை அவர்கள் அமைத்திருந்தனர்.

நாச்சிக்குடா அக்கராயன் வீதிக்குத் தெற்காக சுமார் 1கி.மீ தொலைவில் இந்த மண்ணரண் நீண்டு செல்கிறது. இதை ஊடறுத்துக் கைப்பற்றுவதற்காக படையினர் கடந்த இரண்டு மாதங்களாகப் பெரும் போராட்டம் நடத்துகின்றனர்.

அக்கராயனுக்கு கிழக்கே நிலைகொண்டிருந்த 4ஆவது சிங்க றெஜிமென்ட் படையினருக்கு கடந்த 15ஆம் திகதி புலிகள் ஒலிபெருக்கி மூலம் சிங்களத்தில் எச்சரிக்கைகளை விடுத்தனர்.

படையினர் முன்னேறி வந்தால் கொடுமையான மரணத்தை தழுவ நேரிடும் என்று அவர்கள் எச்சரித்தனர். இது அவர்கள் நடத்திய உளவியல் போர். இந்த பற்றாலியன் கிளிநொச்சி நகர எல்லையில் இருந்து 1600 மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பதாக படைத்தரப்பு கூறுகின்றது.

இந்தநிலையில் பண்டிவெட்டிக்குளம் தொடக்கம் அக்கராயன் வரையான தடுப்பரணை உடைப்பதற்கு 57ஆவது டிவிசனும், 58 ஆவது டிவிசனும் கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தாக்குதலை ஆரம்பித்தன.

வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் கட்டளையின் படி இந்த நடவடிக்கைகளை மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸும், பி?கேடியர் சவீந்திர டி சில்வாவும் வழிநடத்தினர்.

பண்டிவெட்டிக்குளத்தில் இருந்து அக்கராயன் வரையான 15 கி.மீ நீளமான மண்ணரண் பகுதி தான் சண்டைக்கான களமாகத தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதில் பண்டிவெட்டிக்குளம் தொடக்கம் வன்னேரி கிழக்கு வரையான 10 கி.மீ பிரதேசம் 58ஆவது டிவிசனுக்கும் வன்னேரி கிழக்கில் இருந்து அக்கராயன் வரையான 5 கி.மீ பிரதேசம் 57ஆவது டிவிசனுக்கும் ஒதுக்கப்பட்டது.

புலிகளின் மண்ணரணை நோக்கி இரு டிவிசன் துருப்புகளும் ஆறு இடங்களில் சண்டையைத் தொடங்கின. 571 பிரிகேட்டில் அடங்கியுள்ள லெப்.கேணல் சுபஷான வெலிக்கல தலைமையிலான 4ஆவது சிங்க றெஜிமென்ட், லெப்.கேணல் சந்தன சோமவீர தலைமையிலான 9ஆவது கஜபா றெஜிமென்ட, லெப்.கேணல் பண்டார தலைமையிலான 12ஆவது சிங்க றெஜிமென்ட் ஆகியன அக்கராயன் மேற்கு தொடக்கம் வன்னேரி கிழக்கு வரை முன்னேற முற்பட்டன.

அதேவேளை, கொக்காவிலில் இருந்து அக்கராயன் வரை புலிகள் அமைத்திருக்கின்ற மற்றொரு தடையரணை நோக்கி 572 பிரிகேட்டைச் சேர்ந்த லெப்.கேணல் எப்சித திசநாயக்க தலைமையிலான 8ஆவது இலகு காலாட்படை மற்றும் லெப்.கேணல் சஞ்சய பெர்ணான்டோ தலைமையிலான 3 ஆவது கஜபா றெஜிமென்ட் ஆகியன தாக்குதலைத் தொடுத்தன.

வன்னேரி கிழக்கு தொடக்கம் அக்கராயன் மேற்கு வரையான பகுதியில் புலிகளின் உக்கிர எதிர்ப்பைப் படையினர் சந்திக்க நேரிட்டது. தமது மண்ணரனுக்கு முன்பான பிரதேசத்தை வெளியாக்கி கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருந்த புலிகள் படையினரை கொலைக்களத்துக்குள் இழுத்தனர்.

சனி காலை தொடங்கி அன்று மாலை முடிவடைந்த நடவடிக்கையில் கடும் சண்டைக்குப் பின்னர் படையினர் 1.7 கி.மீ மண்ணரணை மட்டுமே அக்கராயன் மேற்கில் படையினரால் பிடிக்க முடிந்ததாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை கிழக்குப் பகுதியில் புலிகளின் கடும் எதிர்ப்பு இருந்தது. புலிகள் சி.எஸ். வாயுவைப் பிரயோகித்து தாக்குதல் நடத்தினர். மோட்டார் குண்டுகளையும் மழைபோல பொழிந்தனர். 572ஆவது பிரிகேட்டின் 8ஆவது இலகு காலாட்படை காலை 10.30 மணியளவில் திடீரென புலிகளின் வாயுத் தாக்குதலுக்கு உள்ளானது.

இதையடுத்து அதிகாரி ஒருவர் உட்பட 30 படையினர் உடல் எரிவு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு பின்னால் நகர்த்தப்பட்டதாகப் படைவட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை தெற்கில் பல படையினர் வாயுத் தாக்குதலில் பலியானதாகத் தகவல் பரவியிருக்கிறது.

ஆனால், இற்றைவரை எந்தவொரு படையினரும் வாயுத் தாக்குதலில் பலியாகவில்லை என்றும் பாதிக்கப்பட்ட படையினர் அனைவரும் சிகிச்சைக்குப் பின்னர் களம் திரும்பி விட்டதாகவும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

அக்கராயன் களமுனையில் புலிகளின் எதிர்ப்பு தற்போது கடுமையாக அதிகரித்திருக்கிறது. படையினரின் நகர்வைத் தடுக்க புலிகள் மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

சி.எஸ். வாயுவை புலிகள் வழக்கமான லோஞ்சர் மூலம் மட்டுமன்றி 120மி.மீ மோட்டார் ஷெல்களின் மூலமும் படையினர் மீது பிரயோகிப்பதால், முன்னரங்க நிலைகளுக்கு பின்னால் செயற்படும் படையினரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

அதேவேளை 58ஆவது டிவிசனுக்கு ஒதுக்கப்பட்ட 10 கி.மீ நீளமான பிரதேசத்தில் வன்னேரி கிழக்கில் 1 கி.மீ பகுதியே இன்னமும் கைப்பற்றப்பட வேண்டியிருப்பதாக பாதுகாப்புத் தரப்பு கூறுகிறது. எஞ்சிய 9 கி.மீ நீளமான பகுதி கைப்பற்றப்பட்டிருப்பதாகவும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.