Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய தலையீடு விவகாரம் குளம்பிப்போயுள்ள இலங்கை--சத்திரியன்

Featured Replies

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடுமா? என்ற கேள்வி இப்போது எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

அரசியல் மேடையாகட்டும், ஊடக வட்டாரங்களாகட்டும், பொது நிகழ்வுகள், சமூக விழாக்கள் எங்கு பார்த்தாலும் இதே பேச்சுத் தான்.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் இந்தக் கேள்வி வலுப்பெற்றிருக்கிறது.

1987இல் இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அடுத்து, தனது படைகளை அனுப்பியது இந்தியா.

1990ஆம் ஆண்டு படைகளை விலக்கிக் கொண்ட இந்தியா, 1991இல் ராஜீவ்காந்தி படுகொலையை அடுத்து இலங்கை விவகாரத்தில் தலையிடுவதில்லை என்ற கொள்கை ரீதியான முடிவை எடுத்திருந்தது.

காலப்போக்கில் இந்த தலையிடாக் கொள்கை, இலங்கை அரசுக்கு இராணுவ ரீதியாக உதவி செய்வது என்ற நிலைக்கு மாற்றமடைந்தது.

இப்போது இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடுமா என்ற கேள்வி எழுந்திருப்பதற்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற ஈழத்தமிழர் ஆதரவு அலையே காரணம்.

முன்னெப்போதும் இல்லாதளவுக்கு தமிழகத்தில் வீசத் தொடங்கியிருக்கின்ற ஈழத்தமிழர் ஆதரவை அலை என்று சொல்வதை விட புயல் என்று சொல்வதே பொருத்தம்.

இப்போது தமிழகத்தில் தோன்றியிருக்கின்ற இந்தப் புயலில் அரசியல் காரணங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுக்குள் முடங்கிக் கிடப்போரும் உண்டு.

ஆனால் அதைவிட அரசியல் சார்பில்லாமல் ஒன்றிணையத் தொடங்கியிருக்கும் சக்திகளைக் கண்டு இந்திய மத்திய அரசே கலங்கத் தொடங்கியிருக்கிறது. இப்படியொரு நிலை உருவாகும் என்று மத்திய அரசோ காங்கிரஸ் கட்சியோ சற்றேனும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அங்குள்ள நிலவரத்தால் மத்திய அரசு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிற நிலையில் இலங்கையில் அதன் தாக்கங்களை தீர்க்கமாக உணர முடிகிறது.

பொதுவாகத் தமிழ்நாட்டில் இடி இடித்தால் மழை பெய்தால் இலங்கையிலும் அதன் தாக்கம் இருக்கும். கோடை வெயில் என்றாலும் அப்படித்தான்.

இதேபோலத் தான் இப்போது தமிழகத்தில் தோன்றிருக்கின்ற எழுச்சியும் தென்னிலங்கையில் உள்ள கட்சிகளிடத்தில் ஒருவித குழப்பமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா தலையிடுமா? அப்படித் தலையிட்டால் அதன் விளைவுகள் என்ன? உள்நாட்டு விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்கு உரிமை உள்ளதா? இலங்கையின் இறைமையை இந்தியா மதிக்குமா? இப்படிப் பல கேள்விகளைத் தமக்குள்ளே கேட்டு குழம்பிப்போகும் தென்னிலங்கைக் கட்சிகள் அதை அறிக்கைகளாக்கி மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்த தவறவில்லை.

இந்தியத் தலையீடு நிகழுமா நிகழாதா என்றெல்லாம் முடிவாகாத நிலையில் தென்னிலங்கைக் கட்சிகள் இப்போது தமிழக கட்சிகளின் மீது வசைபாடத் தொடங்கிவிட்டன.

முதன் முதலில் இந்தப் பிரச்சினையைக் கிளப்பியவர்களில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் ஒருவர்.

இந்தியத் தலையீட்டை வலியுறுத்தி தமிழக கட்சிகளின் போராட்டம் ஆரம்பமானபோது, ""இந்தியாவால் என்ன செய்து விடமுடியும்? அவர்களால் வானத்திலிருந்து பருப்பைத்தான் போட முடியும்'' என்று பேசினார் விமல் வீரவன்ச.

ஆனால் தமிழகக் கட்சிகளின் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்தபோது அதன் விளைவுகள் குறித்த அச்சம் அவருக்கு ஏற்பட்டு விட்டது போலும். அதனால் இந்தியத் தலையீட்டைக் கண்டித்ததோடு, ""உள்நாட்டு விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அது நாட்டின் இறைமையை மீறும் செயல்.

புலிகளைக் காப்பாற்ற தமிழகக் கட்சிகள் முற்படுகின்றன'' என்று பொரிந்து தள்ள ஆரம்பித்தார்.

அத்தோடு அவருக்குத் துணையாக ஜாதிக ஹெல உறுமயவும் சேர்ந்து கொண்டது.

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கு மெல்லவும் முடியாத, விழுங்கவும் முடியாத நெருக்கடி.

காரணம், இந்தியத் தலையீட்டை காலம் காலமாக வலியுறுத்தி வந்தவர்கள் அவர்கள்.

திடீரென அதை எதிர்ப்பது எப்படியென்ற குழப்பம் அவர்களுக்கு.

இந்த நிலையில் தமிழகக் கட்சிகளுக்கு உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்ல தமிழ் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டது.

ஆனால் அப்படிப்பட்ட தூதுக்குழுவை பிரதான கட்சிகள் புறக்கணித்து விட்டால் அது அரசுக்கு அவமானமாகிவிடும் என்று கிடைத்த அறிக்கையை அடுத்தே இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

அதேவேளை தமிழகக் கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு எதிராக மலையகக் கட்சிகளை குரல்கொடுக்க வைக்கும் முயற்சிகளில் அரச தரப்பினால் வெற்றி பெற?டியவில்லை.

சந்திரசேகரன் தமிழக நிலைப்பாடுகளை வரவேற்றார். இப்போது அவர் ஒரு இராஜதுரோகி என்றும் அரசியலமைப்புக்கு முரணாகப் பேசியிருப்பதால் பதவிநீக்க வேண்டும் என்றும் பே?னவாதச் சிந்தனை கொண்ட கட்சிகள் சில கூக்குரல் எழுப்புகின்றன.

இ.தொ.கா.வும் தமிழகக் கட்சிகளின் போராட்டத்தை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான உந்துதலை ஏற்படுத்தும் என்ற தொனியிலேயே கருத்து வெளியிட்டிருக்கிறது.

ஆனால், வேறு சில மலையைக அரசியல்வாதிகள், தொழிற்சங்கத் தலைவர்களைப் பிடித்து தமிழகக் கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் கருத்துக்களை அரசார்பு பத்தி?கைகளுடாக வெளியிடும் முயற்சிகள் நடப்பதையும் காணமுடிகிறது.

ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் இந்தியத் தலையீட்டுக்கு எதிராக ருக்மன் சேனநாயக்க, லக்ஸ்மன் செனிவிரத்ன போன்றவர்கள் கடுமையான நிலைப்பாடுகளை வெளியிட்ட போதும் ரணில் சற்று அமைதியாகவே இருந்து வந்தார்.

இந்தியாவின் தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்தி வந்த ரணில் போன்ற தரப்பினர் இப்போது இந்தியா தலையிட்டு விட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை விமல் வீரவன்ச புலிகளுக்கு எதிரான தமிழ்கட்சிகள், மற்றும் சிங்கள தேசியவாதப் போக்குடைய கட்சிகளை அணிதிரட்டி போராட்டத்தை நடத்தப் போவதாக சூளுரை செய்திருக்கிறார்.

அதுபோதாதென்று நாடாளுமன்றத்தில் இந்தியத் தலையீடு குறித்த விசேட விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் விமல் வீரவன்ச.

அத்தோடு ஜே.வி.பி.யும் இதே கோரிக்கையை விடுத்திருந்தது. ஐ.தே.க.வும் ஆதரவு தெரிவித்தது. ஆனால் அரசாங்கத் தரப்பில் இந்த விசேட விவாதத்துக்கு அவசியம் இல்லை என்று தெ?விக்கப்பட்டதால் அந்த விவாதம் நடத்தும் முயற்சி முடிவுக்கு வந்தது.

இந்தியத் தலையீடு தொடர்பான அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டு விட்ட நிலையில் இந்த விவாதம் தேவையற்றது என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இந்தியாவுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தும் என்பதே அரசாங்கம் இந்த விவாதத்தை நடத்த முன்வராமைக்குப் பிரதான காரணமாகும்.

விவாதத்தின் போது ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு விதமாகப் பேசப் போய் அதுவே இந்தியாவுக்கு தவறாக சமிக்ஞையைக் கொடுத்து விடும் என்று அரசாங்கம எண்ணியிருக்கலாம்.

அதாவது இந்தியா என்ன செய்யப் போகிறதோ ஏது செய்யப் போகிறதோ என்ற பயம் அரசாங்கத்துக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. இதனால்தான் வன்னி இராணுவ நடவடிக்கையில் சில தளர்வுகள் தென்படத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாகச் சொல்லப் போனால் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த தொடர் விமானத் தாக்குதல்களின் வேகம் இப்போது சற்றுக் குறைந்து போயிருக்கிறது. அத்துடன் வன்னிக்கான உணவு வாகனத் தொடரணியும் சற்று சீராக அனுப்பப்படுகிறது.

இது இந்தியாவின் நெருக்கடிகளால் ஏற்பட்ட விளைவாகவே கருதப்படுகிறது.

என்றாலும் அரசாங்கத் தரப்பைக் கேட்டால் இந்தியா உள்ளிட்ட எந்த நாடுமே போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கவில்லை என்றுதான் சொல்கிறது. வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகமவும் சரி, ஜனாதிபதி மஹிந்தவும் சரி, இதனையே திரும்பத் திரும்பக் கூறியிருக்கின்றனர்.

இங்கே ஒரு விடயத்தைக் கவனிக்கவேண்டும். சர்வதேநிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அரசாங்கம் போரை ஒருபோதும் நிறுத்தாது என்று இதுவரையில் கூறி வந்தவர்கள் யார்?

பிரதமரும் அமைச்சர்களுமே இதைத் திரும்பத் திரும்பக் கூறி வந்தனர். வெளிநாட்டு நிர்ப்பந்தங்கள் இருந்ததால்தானே அவர்கள் அப்படிக் கூறியிருக்க வேண்டும். இப்போது தம்மை எந்த நாடும் போரை நிறுத்துமாறு கோரவில்லை என்று அரசாங்கம் சொல்கிறதென்றால் அது நம்பும்படியாக இல்லை.

எது எவ்வாறாயினும் அரசாங்கம், இந்தியா எத்தகைய நிலைப்பாட்டை எடுக்குமோ என்ற கலக்கத்தில் இருப்பது உண்மை. அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும் சரி, மறுத்துரைத்தாலும் சரி அதுவே உண்மை.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.