Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டெல்லியில் பிரணாப்-ராஜபக்சே தம்பி சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் பிரணாப்-ராஜபக்சே தம்பி சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2008

டெல்லி: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தம்பி பாஸில் ராஜபக்சே இன்று டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.

இருவரும் மூத்த அதிகாரிகள் புடைசூழ டெல்லி செளத் பிளாக்கில் உள்ள ளியுறவுத்துறை கட்டடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக பாஸில் தலைமையிலான குழு நேற்றிரவு டெல்லி வந்தது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் போரில் ஈடுபட்டுள்ள சிங்கள ராணுவம் அப்பாவி தமிழர்களை குண்டு வீசி கொன்று வருகிறது.

இதனால் சுமார் 2.5 லட்சம் தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேறி காடுகளிலும் சாலைகளிலும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு, மருந்துகளையும் வழங்க அரசு மறுத்து வருகிறது.

ஆனால், தமிழக கட்சிகளின் நெருக்கடிக்கு ஆளான மத்திய அரசு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்ததையடுத்து உள்நாட்டிலேயே அகதிகளாகிவிட்ட தமிழர்களுக்கு ஒரு வழியாக உணவுப் பொருளை அனுப்பியது.

இந் நிலையில் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட மாட்டாது என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதிபர் ராஜபக்சே தொலைபேசியில் தெரிவித்தார்.

ஆனாலும் இலங்கையின் செயல்பாடுகளில் இந்தியாவுக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதால் உயர்மட்ட குழுவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ராஜபக்சேயின் சிறப்பு ஆலோசகரும், அவரது சகோதரருமான பாசில் ராஜபக்சே தலைமையிலான இந்த குழு நேற்றிரவு டெல்லி வந்தது.

பிரணாப் முகர்ஜியுடனான இன்றைய சந்திப்பின்போது இலங்கை நிலவரம், புலிகளுக்கு எதிரான போர், தமிழர்களின் நிலை குறித்து இந்தக் குழு விளக்கவுள்ளது.

மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோரையும் இந்தகு குழு சந்திக்கிறது.

சோனியா-முகர்ஜியுடன் பாலு அவசர சந்திப்பு:

இந் நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.

வரும் 28ம் தேதிக்குள் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் பாஸில் ராஜபக்சே தலைமையிலான குழு டெல்லி வந்துள்ள நிலையில் முதல்வர் கருணாநிதியின் நிலையை விளக்கவே சோனியாவை பாலு சந்தித்ததாகத் தெரிகிறது.

இலங்கை குழுவிடம் முகர்ஜி பேச வேண்டிய விஷயங்கள் என்று கூறி முதல்வர் கருணாநிதி தெரிவித்த யோசனைகளையும் பாலு முன் வைத்ததாகத் தெரிகிறது.

மேலும் இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தன்னிச்சையாக கருத்து தெரிவித்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் சோனியாவிடம் பாலு கோரியதாகத் தெரிகிறது.

பின்னர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்த பாலு, இலங்கை விஷயத்தில் மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

thatstamil.

இந்தியாவின் மருத்துவ உதவிகளை இலங்கை ஏற்கும்: இலங்கை தூதர்

புதுடில்லி : இலங்கை பிரச்னை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனனுடன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தூதர் டில்லியில் இன்று முதல் கட்ட ஆலோசனை மேற்‌கொண்டார். இந்த சந்திப்பின் போது ராஜபக்சேவின் தூதர் இலங்கை தரப்பு நிலையையும், சிவசங்கர் மேனன் இந்திய தரப்பில் இலங்கை தமிழர்கள் தாக்கப்படுவது, விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை துவக்குவது உள்ளிட்ட பல கருத்துக்களை எடுத்துரைத்தனர். அப்போது இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா வழங்கும் மருத்துவ உதவிகளை ஏற்றுக்கொள்வதாக இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தூதர் பாசில் ராஜபக்சே தெரிவித்தார். அதன் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் அவர் சந்தித்து பேசி வருகிறார்.

இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண பிரணாப் முகர்ஜி தமிழகம் வருகை

சென்னை : இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை தமிழகம் வருகிறார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவும் முதல்வரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்களும், சென்னையில் மனித சங்கிலியும் நடத்தப்பட்டது. இது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தூதர் பாசில் ராஜபக்சே இன்று காலை டில்லி வந்தார். இவர் இந்திய பாதுகாப்புத்துறை செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து பேசினார்.அப்பொழுது இலங்கையில் நிலவி வரும் தற்போதைய நிலை குறித்து அவர் எடுத்துரைத்தார். இந்திய தரப்பில் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பரிசீலனை மேற்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாசில் ராஜபக்சே, இலங்கை தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு அளிக்கும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட ராணுவ உதவிகளை இலங்கை அரசு ஏற்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார். தமிழக முதல்வர் கருணாநிதியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வர இருப்பதாகவும் தெரிவித்தார். இதன்படி இன்று மாலை 5 மணியளவில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ‌சென்னை வருகிறார். தமிழக முதல்வருடனான இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இலங்கை தமிழர் பிரச்னைக்கு விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் தினமலர்

Edited by ஔவையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.