Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகரிக்கும் இந்திய எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் இந்திய எதிர்ப்பு

[26 - October - 2008]

தாயகன்

இலங்கை மீதான இந்தியாவின் தலையீடு கள், நெருக்கடிகள் தொடர்பில் கருத்துக்கள், கண்டனங்கள் தெரிவிப்பதில் அடக்கி வாசிக்கும் அரசாங்கம் மறுபுறத்தே தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி விட்டுள்ளதுடன் இதற்காக சில தமிழ்த் தரப்புக்களையும் பயன்படுத்துகின்றது. இந்தியாவுடனான உறவில் தமிழகம் வேண்டாம் மத்திய அரசே வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே செயற்பட்டுவரும் இலங்கையரசாங்கம் மத்திய அரசுக்கெதிராக இலங்கையில் எதிர்ப்புணர்வுகள் வெளிக் கிளம்பிவிடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தும் அதே வேளை தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கொடும்பாவியை எரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த வார பாராளுமன்ற அமர்வின் போது இந்தியாவுக்கு எதிரான கொதிநிலையில் ஜே.வி.பி, விமல்வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, ஹெல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் விதண்டாவாதம் பேசியதுடன் இந்திய அரசுக்கெதிராக கடும் தொனியிலான கண்டனங்களையும் முன்வைத்தன.

ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை நிராகரித்த வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, இந்தியாவுடனான தமது உறவுகள் குறித்தும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடனான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நட்புக்குறித்தும் வாயாரப் புகழ்ந்ததுடன் உலக நாடுகளில் இந்தியாவே இலங்கையின் நெருங்கிய நண்பன் என்றும் முத்தாய்ப்பு வைத்தார்.

அதேவேளை இலங்கையில் இந்தியா வின் தலையீடுகள் தொடர்பில் பாராளுமன்றத் தில் முழுநாள் விவாதமொன்று நடத்தப் படவேண்டுமென ஜே.வி.பி.யும், விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன் னணியும் விடுத்த வேண்டுகோளை அரசு உடனடியாக நிராகரித்ததன் மூலம் இந்திய அரசுக்கெதிரான கருத்துக்கள், கண்டனங்கள் வெளிக்கிளம்புவதை தடுத்தது. இலங்கையில் இந்தியாவின் தலையீடு தொடர்பாக விவாதம் நடத்துவது தொடர்பாக இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக விளக்கமளித்த சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா, விவாதத்தில் இந்தியா தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், கண்டனங்கள், குற்றச்சாட்டுகளினால் அரசுக்கு ஏற்படும் நெருக்கடிகளை எடுத்துக் கூறியே இரு பேரினவாதக் கட்சிக ளையும் சாந்தப்படுத்தினார்.

அத்துடன் இந்தியா தொடர்பில் விவாதத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஊடகங்கள் திரிவுபடுத்தி வெளியிடலாமென்ற அச்சத்தையும் வெளியிட்ட அவர் இதனால் இந்தியாவுக்கு தவறான தகவல்கள் சென்ற டைந்துவிடுமென்று கூறியுமே விவாதத்தை நடத்தாமல் இருப்பதற்கு இரு கட்சிகளையும் இணங்க வைத்தார்.

இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பதற்கு சிங்களக் கட்சியினரை கட்டுப்படுத்தி வரும் அரசு மாறாக இந்தியா வுக்கும் தமிழக அரசுக்கும் எதிராக சில தமிழ்த்தரப்புக்களை பயன்படுத்தி வருகின்றது.

இவர்கள் தான் தற்போது அரசுக்கான தமது விசுவாசத்தை காட்டுவதற்காக போட்டி போட்டு அறிக்கைகளை விடுத்தும், கடி தங்களை அனுப்பியும் ஹர்த்தால்கள், ஆர்ப் பாட்டங்களை நடத்தியும் வருகின்றனர். இதேவேளை கொழும்பின் பல பகுதிகளிலும் இந்தியாவுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இலங்கை மீதான இந்தியாவின் தலையீட்டை எதிர்ப்போம், என்ற வாசகத்துடன் மும்மொழிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்கமைய சில அடிப்படைவாத குழுக் களும் தமிழக அரசுக்கெதிராக போராட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளன. அண்மையில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்திய சில பிக்குகள் இந்திய தூதரகத்துக்குச் சென்று இலங்கை விடயத்தில் இந்திய அரசு தலையிடக் கூடாதென வலியுறுத்தி மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

இதேபோன்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி புலிகளுக்கு ஆதரவு வழங்கு வதாகத் தெரிவித்து மதவாச்சியிலும் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் தமிழக முதலமைச்சருக்கோ மத்திய அரசுக்கோ இலங்கை விடயத்தில் தலையிட அனுமதியில்லையெனவும் வலி யுறுத்தப்பட்டது. இந்திய, தமிழகத் தலைவர்கள் இலங்கை யின் உள்விவகாரத்தில் தலையிடக்கூடாதென வலியுறுத்தி இரத்தினபுரி நிவித்திகலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச் சரின் கொடும்பாவி எரிக்கப்பட்டதுடன் தமிழக எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இராணுவ, பொலிஸ் பாதுகாப்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதியின் கொடும்பாவியுடன் தமிழகத்தின் ஏனைய சில தலைவர்களின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. இதேவேளை, மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வடக்கில் போரை நிறுத்துமாறு இந்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுப்பதற்கு எதிராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர். ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கெதிராக யாழ்.குடாநாட்டில் ஈ.பி.டி.பி.யினர் பூரண ஹர்த்தால் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதற்கிடையில், இலங்கையில் யுத்தநிறுத் தத்தை வலியுறுத்திய இந்திய அரசின் செயற் பாட்டை வரவேற்ற மலையக மக்கள் முன் னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் பதவியை பறிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவர் இந்திய அரசுக்கு ஆதரவாக கருத்தை தெரி வித்துள்ளதாக சில ஊடகங்கள் பெருமெடுப்பில் சந்திரசேகரனுக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன. ஆனால், தனது நிலைப்பாட்டை அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்றத்தில் மீண்டும் உறுதியுடன் கூறியதையடுத்து தற்போது அவர் ஜனாதிபதியினால் எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, இலங்கையின் உண்மை நிலைவரம் தொடர்பாக இந்தியாவுக்கு சென்ற ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை இணைக்க எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லையென்றும் கூறப்படுகிறது. இந்திய அரசு தொடர்பான விமர்சனங்களை அரசுதரப்பினர் முன்வைக்க தயங்கும் அதேவேளை அரச ஊடகங்கள் தமிழக அரசின் செயற்பாடுகளை கடுமையாக கண்டனம் தெரிவித்து வருவதுடன் தமிழக அரசுக்கு எதிரானோரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.

அத்துடன் தமிழகத்தில் இலங்கைத் தமிழ ருக்கு ஆதரவாக இடம்பெற்றுவரும் போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பிய தால் ?சன்? தொலைக்காட்சியின் செய்தி இலங்கையில் உத்தியோகப்பற்றற்ற முறையில் தடைசெய்யப்பட்டுள்ளது. ?சன்? தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றபோதும் செய்தி தடைசெய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள காலக்கெடு எதிர்வரும் 28ஆம் திகதி முடிவடைவதால் தமிழகத்தில் மத்திய அரசுக்கெதிரான கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசுக்கெதிராக இலங்கையில் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்க அரசு முனைந்துள்ளது. இலங்கையில் தமிழருக்கு எதிராக தமி ழரையே பயன்படுத்தும் செயற்பாடுகளே கடந்த அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ தலை மையிலான அரசு தமிழகத்துக்கு எதிராகவே தமிழரை பயன்படுத்த முயற்சிக்கின்றது. இதற்கும் வழக்கம்போல சில தமிழ்த்தரப்புகள் துணைபோகின்றன.

thinakkural

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.