Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரை நிறுத்த உதவ வேண்டும்: இந்தியாவுக்கு விடுதலைப்புலிகள் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் தனி தமிழ்ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தியுள்ள விடுத லைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்து வருகிறது.

விடுதலைப்புலி களின்நிர்வாகத்தலை நகரமான கிளிநொச்சியை குறி வைத்து இலங்கை விமானப்படை தினமும் குண்டு களை வீசுகிறது.

விடுதலைப்புலிகள் மீதுள்ள கோபத்தில் கண் மூடித்தனமாக சிங்கள ராணுவம் சரமாரியாக குண்டு வீசுவதால் அப்பாவி ஈழத் தமிழர்கள் கடும் பாதிப் புக்குள்ளாகி இருக் கிறார்கள். சுமார் 2 லட்சம் பேர் வீடு களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். காடுகளில் தஞ்சம் அடைந்துள்ள சுமார் 1 லட்சம் பேர் உணவு, மருந்து போன்றவை கிடைக்காமல் பரிதாபமாக நிலையில் தவித்துக்கொண் டிருக்கிறார்கள்.

அந்த அப்பாவித் தமிழர் களின் வாழ்வை காப்பாற்றவே, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். ஈழத்தமிழர் கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போரை 2 வாரத்துக்குள் நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழக அரசு `கெடு' விதித்துள்ளது. தமிழ் திரை உலகினர் மற்றும் பல்வேறு தமிழர் அமைப்புகளும் இலங் கையில் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

முதல்-அமைச்சர் கருணா நிதி, ஈழத்தமிழர்களின் உயிரையும், உடமைகளையும் காக்கும் விஷயத்தில் உறுதி யாக இருந்ததால், மத்திய அரசு இலங்கை அரசை அழைத்து அப்பாவித் தமிழர் கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியது. பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோர் சிங்கள தலைவர்களை போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது ஈழத்தில் நடக்கும் போர் பற்றி விளக்கம் அளிக்க ஒரு தூதுக் குழுவை அனுப்பி வைப் பதாக இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே கூறினார்.

அதன்படி இலங்கை ஜனா திபதி மகிந்த ராஜபக் ஷேவின் சிறப்பு ஆலோசகரும், அவரது தம்பியுமான பாசில் ராஜபக்ஷே, தலைமையில் ஒரு குழு டெல்லி வந்துள்ளது. அந்த குழுவினர் இன்று (ஞாயிறு) பிரதமர் மன் மோகன்சிங், வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் எம்.கே.நராயணன் ஆகி யோரை சந்தித்து பேச உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ஷே எழுதிய கடிதம் ஒன்றை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பாசில் ராஜபக்ஷே அளிக்க உள்ளார். இந்த கடிதத்தில் `இலங்கை அரசின் உண்மையான போர் நோக்கம் என்ன?'' என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளதாகத் தெரி கிறது. மேலும் ராணுவ தாக்கு தல்களின் போது தமிழர்கள் பாதிக்கப்படாதபடி இருக்க மேற்கொண்டுள்ள நடவடிக் கைகள் குறித்தும் பாசில் ராஜபக்ஷே விளக்கம் அளிப்பார்.

ஆனால் இலங்கை தூதுக்குழு சொல்லும் தகவல் கள் எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. ஏனெனில் வீடுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர் களுக்கு உணவு பொருட்கள் ஏதுவும் கொடுக்க விடாமல் சிங்கள ராணுவம் தடுத்துக் கொண்டிருப்பதாக சர்வ தேச செஞ்சிலுவை சங்கம் தொடர்ந்து புகார் கூறிய படி உள்ளது. எனவே மகிந்த ராஜபக்ஷே தம்பி பாசில் சொல்லப் போகும் தகவல் களை மத்திய அரசு ஏற்குமாப அல்லது வேறு யோசனை ஏதுவும் தெரிவிக்குமாப என்று தெரியவில்லை.

ராஜபக்ஷே சகோதரர் சொல்வதை ஏற்று மத்திய அரசு சமரசம் ஆகி விட்டால் ஈழத் தமிழர்களுக்கு எதிர் காலத்தில் மேலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இன்று டெல்லியில் நடக்கும் உயர்நிலை கூட்ட முடிவை அறிய தமிழகத்தி லும், ஈழத்திலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் இலங்கை தூதுக்குழுவிடம் போரை நிறுத்த இந்தியா உத்தரவிட வேண்டும். அது ஒன்று தான் ஈழத்தமிழர்களை உண் மையில் காப்பாற்றும் என்று விடுதலைப்புலிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பி.நடேசன் அளித் துள்ள பேட்டி வருமாறு:-

ஈழத்தில் நடக்கும் போரை உடனே நிறுத்த இலங்கை அரசுக்கு இந்தியா நெருக்கடி கொடுக்க வேண்டும். போரை நிறுத்தினால் மட்டுமே புலம் பெயர்ந்துள்ள அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். இந்தியாவிடம் நாங்கள் எதிர்ப்பாக்கும் உதவி இது தான்.

மகிந்த ராஜபக்ஷே அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ரகசிய பேச்சு நடப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. போரை நிறுத்தாமல் நாங்கள் எப்படி பேச்சு வார்த் தைக்கு உட்கார முடியும்ப போர் தீவிரமாக நடக்கும் நிலையில், எமது மக் கள் காடுகளில் தஞ்சம் அடைந்து அவதிப்பட்டுக் கொண் டிருக்கும் நிலையில் நாங்கள் எப்படி பேச்சு வார்த்தைக்கு செல்வோம்?

கிளிநொச்சிக்குள் ராணுவம் வந்து விட்டதாக மகிந்த ராஜபக்ஷேவும் அவரது அகதிகாரிகளும் தவறான தகவலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாதக் கணக்கில் இப்ப டித் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது திடீ ரென கிளிநொச்சியை பிடிக்க சில மாதம் ஆகும் என்கிறார்கள்.

சிங்கள ராணுவம் வேண்டும் என்றே தமிழர்கள் குடியிருப்புகளை தாக்கி அழிக்கிறது. தமிழ் இனம் காக்கப் பட வேண்டுமானால், அது இந்தியாவின் கையில் தான் உள்ளது. போரை நிறுத்து இந்தியா உரிய நடவ டிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்க்கிறோம்.

இவ்வாறு பி.நடேசன் கூறி உள்ளார்.

இலங்கை தூதுக்குழு வந்துள்ள இந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் விடுத்துள்ள வேண்டுகோள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

http://www.maalaimalar.com/

இதற்கு பதிலாக தமிழகத்துக்கு வெளியிட்ட குறுவட்டு போல , தற்பொழுது கிளிநொச்சியில் நடப்பது....நடந்தது....போர், அவலங்கள்..அத்துடன் மக்களின் கஸ்டங்கள் என்பனவற்றுடன்....பிரபாகரனின். வேண்டுகோளையும். அவர்களின் எதிர்பார்புகளையும்...ஒரு நேர்காணல் அறிக்கையுடன் ஒரு குறுவட்டு தயார் செய்து..

மன்மோகன்சிங் அவருக்கும்.. சோனியாகாந்திக்கும்..மற்றும் ஜெயலலிதா அவர்களுக்கும் அத்துடன் காங்கிரஸ் கூட்டணிக்கும் அனுப்பி வைத்தால்...

ஒரு வேளை அவர்கள் ஈழமக்களுக்கு சாதகமாக ஒரு முடிவெடுப்பதற்க்கு..வாய்ப்பு இருக்கும் என நான் நினைக்கிறேன்..

இல்லாதுவிடில்...ஈழத்தின் கதை.. தொடர்கதைதான்..

வேறு யார் அறிக்கை விட்டாலும் அது இவர்களின் காதுக்கு வராது...என நான் நினைக்கிறேன்..

குழந்தை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.