Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமான், அமீர் கைது செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

Featured Replies

உணர்ச்சிவசப்பட்டு பேசுவது தவிர்க்க முடியாதது என்றும் இயக்குனர்கள் சீமான், அமீர் கைது செய்யப்பட்டதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி அணிவகுப்பு மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. சென்னையில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு தாம்பரத்தையும், செங்கல்பட்டு நகரையும் தாண்டி நீண்டு நின்றதில் இருந்து இலங்கையில் அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தை காக்க வேண்டும் என்ற உணர்வு தாயகத்து தமிழர்களிடம் பட்டுப் போய்விடவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது.

இந்த அணிவகுப்பில் கண்ட இன உணர்வு ஒருபுறம் மெய்சிலிர்க்க வைத்தாலும், இன்னொருபுறத்தில் இதே உணர்வுடன் அணிவகுப்பில் பங்கேற்ற இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி தமிழின உணர்வாளர்களை மெய்வருத்த செய்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நான் ஏற்கனவே சுட்டி காட்டியுள்ளபடி, இலங்கை தமிழர்களின் இன்னல்களை களைவதற்காக இங்கே நாம் மேற்கொள்ளும் முயற்சிகளும், நடவடிக்கைகளும் நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் நமது தமிழினம் அங்கே அழிந்து கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கத்தில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது என்பது தவிர்க்க முடியாது என்பதையும் எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள்.

பேச்சு என்பது வேறு; நடவடிக்கைகள் என்பது வேறு. எனவே ராமேசுவரத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்கள் என்பதற்காக இயக்குனர்கள் சீமானையும், அமீரையும் கைது செய்துள்ள நடவடிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கைதாகியுள்ள இருவருக்கும் எத்தகைய அரசியல் ஈடுபாடும் இல்லை.

எனவே அவர்களது பேச்சில் அரசியல் நோக்கம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அத்துடன் இந்திய இறையாண்மையிலும், ஒருமைப்பாட்டிலும் தங்களுக்குள்ள நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தியிருப்பதுடன் அவற்றிற்கு ஊறுவிளைவிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.