Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அரசின் இன ஒழிப்பு நடவடிக்கையை கண்டித்து மும்பையில் தமிழர்கள் போராட்டம்

Featured Replies

இலங்கை அரசு இன ஒழிப்பு நடவடிக்கையை நிறுத்தி விட்டு அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் மும்பையில் ஆசாத் மைதானத்தில் தமிழர்கள் போராட்டம் : கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால் சமீபத்தில் மும்பையில் அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் கைதால் கொஞ்சம் பிரச்சினை ஏற்பட்டது.

இதன் காரணமாக மும்பை அக் 28 : ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு ராணுவத்தை ஏவி ஈவு ஈரக்கமின்றி தாக்கி கொண்று அழிப்பதை நிறுத்த வேண்டி மும்பை ஆசாத் மைதானத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஆர்பாட்டத்தை மும்பை பாரதிய ஜனதா கட்சியும் மற்றும் பல தமிழர் அமைப்புகளும் இணைந்து நடத்தியது. பா.ஜனதா பிரமுகர் கேப்டன் தமிழ் செல்வன் தலைமை வகிக்க தென்னிந்திய பிரிவு பா.ஜனதா பிரமுகர் நடேசன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்பாட்டத்திற்கு பா.ஜனதா இளைஞர் அணித்தலைவர் என்.எஸ் வேலு மற்றும் தமிழ் பிரமுகர்கள் கீதா கந்தசாமி, ராஜா உடையார், விவேக் பாலு, கவிஞர் பால்வண்ணன், நாடோடி தமிழன், சந்தனகருப்பன், இல.முருகன், ம.கதிரவன், இறை.சா.ராஜேந்திரன், ஆ.கனேசன், ஆதிமூலம் மற்றும் காட்கோபர், செம்பூர், தாராவி, பாண்டுப், முலுண்ட், தானே, கல்யாண், மற்றும் மேற்கு புறநகர் பகுதியில் இருந்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கேப்டன் தமிழ் செல்வன் பேசியதாவது :

இலங்கையில் கடந்த கால் நூற்றாண்டாக நமது சகோதர சகோதரிகளை இலங்கை அரசாங்கம், கொன்று அழிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இதை வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். இந்திய தமிழர்கள் இந்தியாவின் இறையாண்மையை காக்கவேண்டிய தருணத்தில் பொறுமையுடன் அமைதிகாக்கின்றனர்.

இந்த பொறுமையை இந்திய தமிழர்களின் அலட்சியம் என்று நினைக்க வேண்டாம். உலகில் எங்கு தமிழன் வாழ்ந்தாலும் எங்கள் சகோதரர்கள்தான். அவர்கள் உதிரம் வடிப்பதை ஒரு போதும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். மத்திய அரசாங்கம் தமிழ் இனத்தை அழிக்க இலங்கை அரசுக்கு துணைபோகிறது.

இலங்கை அரசிற்கு ஆயுத தளவாடங்கள், ராடர் உபகரணம் கொடுத்து தீவிரவாதிகளுக்கு எதிரான போருக்கு உதவி என்ற பெயரில் தமிழினத்தை அழிக்க துணைபுரிகிறது. அங்கே எமது சகோதரிகளின் புதல்விகள் விமானத்தின் குண்டு வீசி தாக்குதலில் கொத்தாக அழிந்து போகிறார்கள். பள்ளிக்கூடங்களின் மீது குண்டு வீசப்படுகிறது.

அனாதை இல்லங்களின் மீது வீசப்படுகிறது. இலங்கை அரசு இன அழிப்பு நடவடிக்கையை நிறுத்தி விட்டு அமைதி நடவடிக்கை தொடங்க வேண்டும் என்பது உலகத்தமிழர்களின் கோரிக்கை. ஆனால் இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழினத்தை அழித்து விட்டுத்தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிகொன்டு ஈழ சகோதரர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மத்திய அரசும் துணைபோவது வெட்ககேடு ஆகும். இவ்வாறு கேப்டன் தமிழ் செல்வன் பேசினார்.

பா.ஜனதா தென் இந்திய பிரிவு பிரமுகர் நடேசன் பேசும் போது :

ஈழத்தமிழர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுத்து வரும் இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவி கொடுத்து உதவி வருகிறது. இதை நிறுத்தவேண்டும். ஒருபுறம் தமிழக அரசிற்கு இலங்கை தமிழர்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளித்து கொண்டு, மறுபுறம் இலங்கை அரசின் ராணுவத்திற்கு ஆயுதம் அளித்து வருகிறது. பாதுகாப்பு துறை இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதை நியாயம் என்று சொல்கிறது. அங்கு செத்து மடிவது எங்களின் சகோதரர்கள். மத்திய அரசு உடனே செயல்பட்டு இலங்கை அரசின் போர் நடவடிக்கையில் தலையிட்டு போரை முடிவிற்கு கொண்டுவரவேண்டும். தமிழர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதை நிறுத்த உலக நாடுகள் இலங்கை அரசை வறுபுறுத்த வேண்டும். இவ்வாறு நடேசன் பேசினார்.

தமிழர் அல்லாத பல பிரமுகர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த இந்திய அரசு தலையிடவேண்டும் என்று கேட்டுகொண்டார்கள்.

ஈமகெஇந்த கூட்டத்தின் போது இலங்கையில் குண்டுவீச்சால் பாதிக்கபட்ட இறந்து போன ஈழத்தமிழர்களின் படங்கள் அடங்கிய பேனர்கள் ஆர்ப்பாட்ட மைதானம் எங்கும் ஒட்டப்படிருந்தது. இந்த படங்களை மும்பையில் வசிக்கும் பல மாநிலத்தவர்களும் பார்வையிட்டு இலங்கையில் தாக்குதலுக்கு ஆளாகிவரும் தமிழர்களுக்காக இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று தங்களின் அபிப்பிராயத்தை கூறினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இலங்கை தூதரகத்தில் தமிழர்களின் மீதான தாக்குதலை நிறுத்த சொல்லி மனு கொடுக்க கேப்டன் தமிழ் செல்வன், நிதின் கட்கரி, கோபால் ஷெட்டி ஆகியோர் சென்றனர்.

மனுவை வாங்காமல் இலங்கை தூதரகம் பா.ஜனதா தலைவர்களையும், கேப்டன் தமிழ் செல்வனையும் திருப்பி அனுப்பி விட்டது. கூட்டத்தின் முடிவில் பேசிய தமிழ்செல்வன் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு எதிராக மும்பை தமிழர்களின் ஆரம்ப போராட்டம்தான் இது. சாதி, மத, கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து மும்பை தமிழர்களும் இணைந்து போராடுவோம் என்று கூறினார்.மராட்டிய மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நித்தின் கட்காரி, பாரதிய ஜனதா பிரமுகர் கோபால் ஷெட்டி, பா.ஜனதா மும்பை செயலாளர் மது சவுகான், மாநில பா.ஜனதா துணைத்தலைவர் அதுல் ஷா, மாவட்ட செயலாளர் மனிஷா காய்தே ஆகியோர் கலந்து கொண்டனர்.

படங்கள்...............

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் அல்லலுறும் தமிழ் மக்களுக்காக அவர்களுக்கு நீதி வேண்டும் அவர்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக எமது உறவுகள் நீங்கள் இந்தியாவிலே போரடுகிறீர்கள் அதற்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.உங்கள் போராட்டம் மேலும் விரிவடையவேண்டும் அது எங்களுக்கு இன்னும் பக்கபலமாக இருக்கும் உறவுகளே. சோர்ந்து விடாதீர்கள் உரத்து கூறுங்கள் தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் தமிழன் சுதந்திரமாக வாழவேண்டும் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.