Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உண்ணாவிரத போராட்டம்: நடிகைகளுக்கு கிடுக்கிப் பிடி

Featured Replies

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து திரையுலகினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இயக்குனர்கள் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கடந்த 19-ந்தேதி ராமேஸ்வரத்தில் பேரணி பொதுக்கூட்டம் நடத்தி எதிர்ப்பை வெளியிட்டனர்.

அதில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதையடுத்து நடிகர் சங்கத்தில் நாளை மறுநாள் (1-ந்தேதி) நடத்த உள்ள உண்ணாவிரதம் பரபரப்படைந்துள்ளது. ராமேஸ்வரத்துக்கு நடிகர் - நடிகைகள் செல்லசிரமங்கள் இருப்பதாக ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் வகையில் சென்னையில் போராட்டம் நடத்தலாம் என்று நடிகர் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதை ஏற்காமல் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தி காட்டி உள்ளனர்.

இதையடுத்து நடிகர் சங்கம் தியாகராய நகரில் உள்ள சங்க அலுவலக வளாகத்திலேயே உண்ணாவிரதம் நடத்த ஏற்பாடு செய்தது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. மழை வந்தாலும் தடங்கல் ஏற்படாமல் இருக்க பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேடையும் போடப்பட்டு உள்ளது. நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 3 ஆயிரம் பேருக்கு கடிதங்களும் அனுப்பப்பட்டு உள்ளது. இலங்கை தமிழர்களுக்காக நடைபெறும் உண்ணாவிரதத்தில் தவறாது பங்கேற்குமாறு கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. ரஜினி, கமல், விக்ரம், அஜீத், சூர்யா, விஷால், ஜெயம்ரவி, தனுஷ், பரத் என முன்னணி நடிகர்களுக்கு இக்கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதுபோல் ஸ்ரேயா, அசின், நயன்தாரா, பாவனா, பிரியாமணி, திரிஷா, நமீதா என நடிகைகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. உண்ணாவிரதத்துக்கு நடிகர், நடிகைகள் யாரெல்லாம் வருவார்கள் என இப்போதே பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக நடிகர் சங்க நிகழ்ச்சிகளுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் செல்வது இல்லை. ஆனால் ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சினையில் கர்நாடக அரசை கண்டித்து உண்ணாவிரதம் நடந்தபோது மெஜாரிட்டி பேர் பங்கேற்றனர்.

வர இயலாதவர்கள் காரணம் சொல்லி கடிதம் அனுப்பினர். அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கம் எச்சரித்ததால் வேறு வழியின்றி பலர் வந்தனர். உண்ணாவிரதத்துக்கு நடிகர் சங்கம் அது போன்ற எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை. தமிழ் இன உணர்வு ரீதியாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. இது நாள் வரை சாக்குபோக்கு சொல்லி நடிகர் சங்க நிகழ்ச்சிகளை புறக்கணித்த நடிகைகளுக்கு இந்த உண்ணாவிரதத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டிய கிடுக்கிப்பிடி ஏற்பட்டுள்ளது.

தமிழ் படங்கள் சமீபகாலமாக வெளிநாடுகளில் சக்கை போடு போடுகின்றன. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புதுப்படங்கள் ரிலீசாகும்போது அங்குள்ள தியேட்டர்களில் திருவிழா கூட்டமாக திரள்கிறார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையை அவர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். குறிப்பாக ராமேஸ்வரம் பேரணியை ஆர்வத்தோடு டெலிவிஷன் மற்றும் பத்திரிகை செய்திகள் மூலம் அறிந்தனர். நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதத்தையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். நடிகர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

நடிகைகள் எவரேனும் வராமல் புறக்கணித்தால் அவர்கள் படங்களை ஓடவிடாமல் தடுக்க திட்டமிட்டு உள்ளனர். உண்ணாவிரதம் உணர்வுபூர்வமான போராட்டமாக மாறி இருப்பதால் எல்லோரும் கண்டிப்பாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி : தமிழ்வின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.