Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெற்றியீட்டும் இராணுவத்திலிருந்து யாரும் தப்பியோட முனைவார்களா?

Featured Replies

இராணுவத்திலிருந்த தப்பியோடுவோரின் எணணிக்கை அதிகரித்து வருவதால் இலங்கை இராணுவம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது என் ஐ.எஸ்.எம். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் பின்வருமாறு :

'களமுனை அதிhந்தது, எல்லாப்புறமும் குண்டுச்சிதறல்கள், சடலங்கள் எங்கும் பரவிக்கிடக்கின்றன. அது ஒரு பயங்கரமான நிகழ்வு' என்று ஐந்து மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் வன்னிப் பகுதியில் நிகழந்த மொதல்கள் குறித்து தனது நினைவை எம்முடன் பகிர்ந்து கொண்டார் இலங்கை இராணுவத்தின் 12 வது கஜபா றெஜிமென்ட் படையணியைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்.

அவரின் தலையின் பின்புறம் தாக்கிய ஒரு துப்பாக்கிச் சன்னம் மேல் தோளில் தங்கிவிட்டது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் 'தற்போது வன்னியில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. கள முனைக்குத் திரும்புக' என்று அவருக்கு தகவல் வந்துள்ளது.

கிளிநொச்சிப் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் என அரசு கூறிவரும் இவ்வேளை மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. போரில் காயமடைந்த படையினரை அரசு மீண்டும் அழைத்துள்ளது. அத்துடன் இராணுவம் புதிதாக ஆட்களை சேர்ப்பதில் தீவிர காட்டி வருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் நான்காவது தடவையாக இராணுவத்திற்கு ஆட்சோப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எதிர்வரும் டிசம்;பர் மாதம் வரையிலும் 24,000 பேரை சேர்ப்பதற்கு இராணுவம் திட்டமிட்டுள்ளது. இது வரை 10,136 பேர் சேர்ந்துள்ளனர் என இராணுவப் பேச்சாளன் தெரிவித்துள்ளார். தற்போது இராணுவம் 140,000 பேரைக் கொண்டுள்ளது. இது பிரித்தானியாவின் இராணுவத்தை விட ஆட்தொகையில் அதிகம்.

அண்மைக் காலமாக பாதுகாப்பு அமைச்சும் படையில் இளைஞர்களை சேர்க்கும் பொருட்டு செய்திகளை செல்லிடத் தொலைபேசிகள் மூலமாகவும் அனுப்பி வருகின்றது.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என தனது கிராமத்தின் பெயரை குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொண்ட படைத்தரப்பைச் சோந்த சிப்பாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த கிராமத்தில 400 குடும்பங்களே வாழ்கின்றன. மிகவும் பின்தங்கிய அந்த கிராமத்தில் ஒழுங்கான வீதிகள் கிடையாது., குடிதண்ணீர் பற்றாக்குறை மற்றும் மின்சார வசதிகளும் நிறைவாக இல்லை. 48 கி.மீ.தொலைவிலேயே மருத்துவமனை உள்ளது.

தமது வறுமையைப் போக்குவதற்காக அந்தக் கிராமதில் உள்ள பெருமளவான இளைஞர்கள் படையில் இணைந்துள்ளனர். அதாவது, அந்த கிராமத்தில் உள்ள ஆண்களில் அரைப்பங்கினர் முப்படையிலும் பணியாற்றுகின்றனர்.

அண்மைய வருடங்களாக இராணுவத்திலிருந்து தப்பி ஓடுவோரால் பெரும் நெருக்கடி அதிகமாகி வருகிறது என அவதானிகள் தெரிவித்துள்ளனர். எனினும் போரில் வெறறியீட்டுவதற்கு மனித வலு முக்கியமானது. அரசு தொடர்ந்து பொது மன்னிப்புகைள அறிவித்து வருகின்றது

கடந்த ஆறு மாதங்களில்; 4,004 பேர் பணிக்குத் திரும்பியுள்ளனர் என அரசு அறிவித்துள்ளது. எனினும் நாடு தழுவிய ரீதியில் தப்பியோடிய படையினரை கைது செய்வதற்கு அரசு முயற்சித்து வருகின்றது.

இதுவரையில் 2,984 படையினரையும் 21 அதிகாரிகளையும் கைது செய்துள்ள அரசு, அவர்களை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது. அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று வருடங்கள் சிறைக்குச் செல்ல நேரிடலாம்.

எனினும், இராணுவம் கூறுவது போல் இராணுவம் உண்மையில் வெற்றியீட்டி வந்தால், ஏன் அதிகளவில் படையினர் தப்பி ஓடுகின்றனர்? வெற்றியீட்டும் இராணுவத்தில் இருந்து யாரும் தப்பியோட நினைப்பதில்லை என தனது பெயரை குறிப்பிட விரும்பாத ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனக் குறிப்பிட்டுள்ளது.

நன்றி : சுடர்ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.