Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜி.எஸ்.பி பிளசும் புலம்பெயர் மக்களின் பங்கும்

Featured Replies

இன்று தமிழீழ மக்களை சிங்களம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து பெரிய இராணுவ பலம் கொண்டு அழித்து வருகின்றது. இதை தமிழினமும் தன் தலமையின் கீழ் அணி கொண்டு தன்னைத்தானே காப்பாற்றி வருகிறது.

எம்மக்களை அழிக்கும் சிங்களத்தின் பொருளாதார வலு குறைக்கப்படின், அதன் படை பலம் குறைக்கப்படின் எம்மவர்களின் உயிர்கள் காப்பற்றப்படும்.

கடந்த மூன்று வருடங்களாக சிங்களம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை வகைக்களுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருட டிசம்பர் மாதம் இதை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பதா இல்லையா என முடிவெடுக்கவுள்ளது. சிங்களம் விண்ணப்பத்தை இம்மாதம் சமர்பித்துள்ளது. ஆயினும், சிங்கள அரச பயங்கரவாதத்தின் தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப்பு உலகின் பார்வைக்கு வந்ததை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் சிங்களத்தின் மறுப்பையும் மீறி விசாரணை ஒன்றை இம்மாதம் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தமிழ் இன அழிப்புக்காக இவ்வரிச்சலுகயையும் சிங்கள பௌத்த பேரினவாதம் இழக்கத் துணிந்து விட்டது. இவ்விசாரணைக்கு பொது அமைப்புகளோ, தனிப்பட்டோரோ தம் கருத்துக்களை முன் வைக்கலாம். இவ்வரிச்சலுகையை இழந்தால் அதுவே சிங்கள அரச பயங்கரவாதத்துக்கு எதிரான பொருண்மிய தடைக்கும் தொடக்கமாக அமையும்.

இந்த சலுகை மூலம் சிங்களம் அண்ணளவாக 1.9 பில்லியன் அமெரிக்கடாலர்களை சேமிக்கின்றது. சிங்களமே ஒரே ஒரு ஆசிய நாடு இந்த வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பெறுகின்றது. இந்த சலுகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருபத்தி ஏழு விதிக்கோட்பாடுகளுக்கும் அமைய செயற்பட்டிருக்க வேண்டும். இந்த விதிகளானவை மனித உரிமைகள் தொழிலாளர் உரிமைகள் மற்றும் சுற்றாடல் பேணுதல் சம்பந்தமானவையே. அடிப்படை மனித உரிமைகளியே மதிக்காத, ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ரீ லங்கா அரச பயங்கரவாதி இந்த வரிச்சலுகையை பெற கோடிக்கணக்கான நிதியை பரப்புரைக்கு செலவிடுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சிங்களத்தின் கறைபடிந்த மனித உரிமைகள் மற்றும் மனித நேயங்களை மறுக்கும் கபடத்தனங்களை வெளிக்கொண்டு வருவதன் மூலம் இந்த வரிச்சலுகையை நாம் இரத்துச்செய்யதல் வேண்டும். இது சிங்களத்தின் பொருளாதாரத்தை அதன் வளர்ச்சியில் இரண்டு வீதம் விழுக்காடு ஏற்படுத்தும். இதன் மூலம் சிங்களத்தின் தமிழருக்கெதிரான யுத்த பயங்கரவாதத்தை குறைக்க முடியும். எமது உறவுகளின் உயிர்களை காக்க முடியும்.

எனவே அன்பு உறவுகளே நீங்களும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு கடிதம் எழுதி இந்த வரிச்சலுகையை இரத்து செய்ய கோருங்கள். உங்கள் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

European Commission

Directorate General for Trade

Rue de la Loi 170. Office: 9/23

B-1049 Brussels

Belgium.

இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு:

http://ec.europa.eu/trade/issues/global/gsp/pr110708_en.htm

http://eur-lex.europa.eu/LexUriServ/LexUri...034:0035:EN:PDF

http://eur-lex.europa.eu/LexUriServ/LexUri...001:0001:EN:PDF

http://trade.ec.europa.eu/doclib/docs/2008...adoc_141139.pdf

கீழ்வரும் முகவரியில் மின்னஞசல் மூலம் தொடர்பு கொண்டு மாதிரி கடிதங்களையும் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரியையும் பெற்றுக்கொள்ளலாம்.

stopgspplus@gmail.com

stop-gsp@googlegroups.com

canadian-voice-for-eelam-tamils@googlegroups.com

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.