Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொலைக்காட்சிகள் ராஜபக்ஷ குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் நாடு சர்வாதிகாரத்தை நோக்கி –றணில்:(ஹக்கீமின் உரை இணைக்கப்பட்டுள்ளது)

Featured Replies

தொலைக்காட்சிகள் ராஜபக்ஷ குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் நாடு சர்வாதிகாரத்தை நோக்கி –றணில்:(ஹக்கீமின் உரை இணைக்கப்பட்டுள்ளது)

Click for Audio...

http://www.globaltamilnews.com/tamil_news....=1710&cat=1

தொலைக்காட்சிகளை ராஜபக்ஷ குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நாட்டை சர்வாதிகார நிலைக்கு கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தியுள்ளன.

ஊடகத்துறை அமைச்சர், இலங்கைத் தொலைக்காட்சி சட்டமூலத்திற்கான புதிய கட்டளைகளை அறிவித்து, வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்,ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல் என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கொழும்பு கேம்பிரிஜ் பிளேசில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பணிமனையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வின்றி இருக்கும் அரசாங்கம், அவற்றைத் தீர்க்க சக்தியில்லாது வங்குரோத்து நிலையில் உள்ளதுடன் தனியார் தொலைக்காட்சிகளை குடும்ப நிர்வாகத்திற்கு கொண்டு வந்து, ஜனநாயகத்தின் எல்லையை சுருக்க முயற்சித்து வருவதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை வருடா வருடம் புதுப்பித்தல் மூலம் அவற்றுக்கு நிபந்தனை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல், 6வது கட்டளையாக அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்திச் செல்ல தகுதியற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் பணிப்பாளர் சபையில் அரசியலில் ஈடுபடும் ஒருவர் நியமிக்கப்பட்டால், அனுமதி பத்திரம் திரும்பபெறப்படும் என கூறப்பட்டிருந்தாலும், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மகிந்த சிந்தனையின் அடிப்படையில் அரசியல்கட்சிகளுக்கு தொலைக்காட்சி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளது என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் 13வது கட்டளையின் (இ) ஷரத்தில், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செய்தி ஒளிபரப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறு தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கப்பட்டுள்ளது எனத் தீர்மானிக்கும் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பிய அவர், அந்தப் பொறுப்பு குடும்ப உறுப்பினரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களின் அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தல், இனரீதியான மற்றும் மதரீதியான செய்திகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு தடைவிதிக்கப்படுமாயின் முதலில், சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய ரூபவாஹினி ஆகியவற்றிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த இரண்டு அலைவரிசைகள் மூலம் அரசாங்கம் இனவாதத்தை பரப்பி வருவதாகவும், இது நாட்டின் சட்டத்தை மீறும் செயல் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஒழுக்கத்திற்கு மாறான செய்திகள் ஒளிப்பரப்பட்டன என தீர்மானிப்பது யார், ஜனாதிபதிக்கு சொந்தமான அமைச்சின் மூலமே இது தீர்மானிக்கப்படுகிறது. அதுவும் ராஜபக்ஷ குடும்பத்தினரிடம் வழங்கப்படுகிறது எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து ஒளிப்பரப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பவும் புதிய கட்டளைகள் மூலம் தடையேற்படுத்தப்படுவதால், பி.பி.சி, சீ.என்.என் போன்ற நிகழச்சிகளுக்கு தடையேற்படுத்தப்படும். சர்வாதிகார ஆட்சியைக் கொண்டு நடத்தவே இவ்வாறான சட்டவிரோத, ஜனநாயக விரோத சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. ராஜபக்ஸ குடும்பத்தின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும்,ஜனநாயக அரசியல் ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சுதந்திரம் தொடர்பில் இலங்கை மிகவும் கீழ் மட்டத்திலேயே இருக்கிறது - ஹக்கீம்:

அரசாங்கம் கடுமையான ஊடக ஒடுக்குமுறை கொள்கை ஒன்றை வகுக்க பல காலமாக திட்டமிட்டு வந்துள்ளதாகவும் அது தற்போது தெளிவாகியிருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள தனியார் தொலைக்காட்சிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ரன்மினிதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் ஒரு வானொலி ஒலிபரப்பிய செய்தி தவறானது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் அந்த வானொலியை முழுமையாக மூடி இந்த ஒடுக்குமுறைக்கான பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டது எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். அந்த வானொலி நிலையத்துடன் தொடர்புடைய துமிந்த சில்வா அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட பின்னர், அனுமதிப் பத்திரங்களை மீண்டும் வழங்கியமை தமக்கு நினைவிருப்பதாகவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மற்றுமொரு ஊடக நிறுவனத்தின் தலைவருக்கு எதிராக விசாரணை செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இவ்வாறான சர்வாதிகார போக்குகளை தோல்வியடையச் செய்வதற்காகவே தாம் 17வது அரசியல் சாசன திருத்தை அமுல்படுத்துமாறு கடுமையாக வலியுறுத்தி வருவதாகவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் தொடர்பான உண்மையான தகவல்கள் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படுவது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளதாக இந்த அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்தப்படுகிறது. ஊடக சுதந்திரம் தொடர்பான சர்வதேச அமைப்புகளின் கூற்றுகளுக்கு அமைய ஊடக சுதந்திரம் தொடர்பில் இலங்கை மிகவும் கீழ் மட்டத்திலேயே இருக்கிறது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.