Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்: ஒரு இராசதந்திரப் போராளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்: ஒரு இராசதந்திரப் போராளி

நவம்பர் 2, 2007. ஈழத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத நாட்களுள் அதுவும் ஒன்று.

அன்றுதான் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிறிலங்கா விமானப்படையின் கோழைத்தனமான தாக்குதலுக்குப் பலியான நாள்.

சமாதானம் என தான் பேசுவது உதட்டளவில் மாத்திரமே என்பதை சிங்கள தேசம் மீண்டுமொருமுறை நிரூபித்த நாள்.

அப்படி நடந்திருக்காது. இது பொய்யான செய்தியாகவே இருக்கும் என நினைத்து தமிழ்ச்செல்வன் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் உறவுகள் நம்ப மறுத்த நாள்.

அன்றைய நாள் உலகெங்கும் வழக்கம் போலவே விடிந்தது. ஆனால், ஈழத் தமிழர்களுக்கு மாத்திரமே துயரத்தோடு விடிந்தது.

தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த செய்தியைக் கேட்ட தமிழர்கள் தாங்களே மரணித்து விட்டதாக உணர்ந்தார்கள். அந்த அளவிற்கு அவரின் வீரச்சாவுச் செய்தி அவர்களை உலுப்பியிருந்தது.

சிறிலங்கா விமானப் படையைப் பொறுத்தவரை தமிழ்ச்செல்வன் ஒரு இராணுவ இலக்கு மாத்திரமே. ஆனால், ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு வாஞ்சையுள்ள சகோதரன். ஈழத் தமிழ் மக்களின் சமாதானம் மீதான விருப்பின் ஒரு அடையாளம் குறியீடு.

எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை எம்மவரின் வீரமும், தீரமும், புத்திசாதுரியமும் சாதித்தவற்றுக்குச் சற்றும் குறையாத வகையில் சிங்கள தேசத்தின் முட்டாள் தனமும், புத்திபூர்வமற்ற செயற்பாடுகளும் போராட்டத்துக்குப் பல வழிகளிலும் வலுச் சேர்த்திருக்கின்றன.

அத்தகைய பல விடயங்களுள் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலையும் ஒன்று.

தமிழ்ச்செல்வனின் துயரச் செய்தியால் தமிழ் மக்கள் ஓரளவு துவண்டு போயிருப்பினும் அவர்கள் சோர்ந்துபோய் மூலையில் முடங்கி விடவில்லை.

இதுபோன்ற அவலச் சாவுகள் எதிர்காலத்தில் நிகழ்வதைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்றும் சிந்தித்தார்கள்.

விமானத் தாக்குதலைத் தடுப்பதானால் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனச் சிந்தித்தார்கள், செயற்பட்டார்கள்.

இது தவிர போராட்டத்திற்கு வெளியே பங்காளராக இன்றி பார்வையாளர்களாக நின்றிருந்த கணிசமானோரையும் தமிழ்ச்செல்வனின் மரணம் போராட்டத்துக்கு அழைத்து வந்தது.

அத்தகையோரின் மனதிலே தமிழ்ச்செல்வனின் மரணம் மூட்டிய தீ, சுதந்திர நெருப்பாகக் கொழுந்து விட்டெரிந்தது.

'செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்ற சொல்வடைக்கு ஏற்ப தமிழ்ச்செல்வனின் மரணம் எதிரிகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக போராட்டத்துக்கு வலுச் சேர்ப்பதாகவே அமைந்திருந்தது.

தமிழ்ச்செல்வனின் மரணம் தனியே ஈழத் தமிழ் நெஞ்சங்களில் மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை. மாறாக தாய்த் தமிழகத் தமிழர்கள் மனத்திலும் சர்வதேச இராசதந்திரிகளின் இதயத்திலும் கூடப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

தாய்த் தமிழகத்தில் ஏற்பட்ட உணர்வலைகள் ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பில் கருத்துச் சொல்வதைத் தவிர்த்து வந்த கலைஞர் கருணாநிதியைக் கூட வாய் திறக்கச் செய்தது.

அவர் எழுதிய இரங்கற் கவிதை தமிழக அரசியலில் மட்டுமன்றி இந்திய மத்திய அரசு வரை சலசலப்பை ஏற்படுத்திவிட்டு ஓய்ந்தது. இதனால் உருவான உணர்வலைகள் தாய்த் தமிழக மக்கள் தமிழின உணர்வாளர்களையும் தமிழின விரோதிகளையும் அடையாளம் காண உதவியது.

இன்று தமிழக மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அதிதீவிர ஈழத் தமிழின ஆதரவு நிலைப்பாட்டுக்கு தமிழ்ச்செல்வனின் மரணமும் கூட ஒரு காரணம் எனக் கூறினால் அது மிகையாது.

மறுபுறம் தமிழ்ச்செல்வனின் படுகொலை, ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இராசதந்திரிகள் மத்தியிலும் கூட அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருந்தது.

இன்று சிங்கள தேசம் மீதான சர்வதேசத்தின் அணுகுமுறை மாறியிருப்பதற்கு தமிழ்ச்செல்வனின் படுகொலையும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்ற வரையறைக்குள் வைத்துக்கொண்டு அப்படியே அவர்களைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என ஏற்றுக் கொள்ளவதில் கணிசமான அளவு தயக்கம் இருப்பதை உணர முடிகின்றது.

ஆனால், தமிழ்ச்செல்வன் போன்றோரின் அணுகுமுறை விடுதலைப் புலிகள் கரடு முரடான தீவிரவாதிகள் அல்ல அவர்கள் மத்தியிலும் கைதேர்ந்த நாகரீகமான இராசதந்திரிகள் இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தி இருக்கின்றது.

ஆளுமை என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபட்டது. தனி மனித ஆளுமை குடும்பத்திலும், சமூகத்திலும் செல்வாக்குச் செலுத்த வல்லது. ஒரு விடுதலைப் போராட்டத்தில் போராட்ட சக்தியின் இலக்கே அதிஉச்ச ஆளுமை மிக்கதாக விளங்குகின்ற போதிலும் கூட அதில் தனி மனித ஆளுமையில் செல்வாக்கைப் புறந்தள்ளிவிட முடியாது. அதிலும் சராசரி போராளியோடு ஒப்பிடுகையில் தலைமைத்துவப் பதவிகளை வகிக்கும் போராளிகளின் ஆளுமை மிகுந்த செல்வாக்கு மிக்கது.

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான நாள் முதல் ஆளுமை மிக்க போராளிகள் பலரை நாம் பல வழிகளிலும் இழந்திருக்கின்றோம். ஆனாலும் கூட, போராட்டம் வீச்சுடன் முன்னோக்கி வீறுநடை போட்டுக் கொண்டே இருக்கின்றது.

தமிழ்ச்செல்வன் போன்ற போராளிகளின் இழப்பு எமது போராட்டத்துக்குப் பாதிப்பு அல்ல என மன ஆறுதலுக்காகக் கூறலாமே ஒழிய மனப்பூர்வமாகக் கூறிவிட முடியாது.

காலம் எதற்காகவும், யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை என்பதே யதார்த்தமாயினும் மனித மனம் கவலைப்படாமல் இருக்கப்போவதில்லை.

இன்று பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை நாம் இழந்து ஒரு வருடம் நிறைவடைகின்றது. அந்த நிறைவு நாளிலே நாம் அவரை எவ்வாறு நினைவு கூரப் போகின்றோம்.

தமிழ்ச்செல்வன் அவர்கள் தமிழ் மக்களை அடிமைப்படுத்த நினைக்கும் சிங்களப் படைகளை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடியவர் மட்டுமல்ல. அவர் தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இராசதந்திரக் களத்திலும் தீவிரமாகப் போராடிய போராளி.

எனவே, அவருக்கு உண்மையான அஞ்சலியை நாம் செலுத்த வேண்டுமாக இருந்தால் அவருடைய இலட்சியம் நிறைவேற நாம் பாடுபட வேண்டும்.

சிங்கள ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் போராளிகளுக்குத் தோள் கொடுக்கும் அதேவேளை, எமது போராட்டம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கான போராட்டத்துக்கும் நாம் தோள் கொடுக்க வேண்டும்.

இன்று அதற்கான நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.

வன்னியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அவலம், அதனையொட்டி தமிழகத்திலே உருவாகியுள்ள பேரெழுச்சி ஆகியவை பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.

மீண்டுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக இருந்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பேச்சுக்கள் நடாத்தப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தக்கூடிய வலுவும், வாய்ப்பும் புலம்பெயர் தமிழர்களுக்கே அதிகமாக உண்டு. தாமதிக்காமல் அதனைச் செய்வோமானால் தமிழ்ச்செல்வனின் பிரிவுக்கு உண்மையான அஞ்சலியைச் செலுத்தியவர்கள் ஆவோம்.

நன்றி: நிலவரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.