Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதுடில்லியின் வார்த்தையை நம்பி ஈழத்தமிழரைக் கைவிட்ட கலைஞர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடில்லியின் வார்த்தையை நம்பி ஈழத்தமிழரைக் கைவிட்ட கலைஞர்

[01 நவம்பர் 2008, சனிக்கிழமை 7:20 மு.ப இலங்கை]

இந்திராகாந்தி இருந்த காலத்தின் நிலை இன்று மாறிவிட்டது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா அவ்வளவு அக்கறை கொள்ளமுடியாது என்றும் சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஈரான் போன்ற நாடுகளின் உதவியுடனும் படை பலத்துடனம் இலங்கை இயங்குவதைத் தடுக்கும் முறையில் ஆயுதங்கள் வழங்குவதையோ, அரச படைகளுக்குப் பயிற்சி வழங்குவதையோ அல்லது இலங்கையின் பாதுகாப்பு நலனுக்காக குறைந்த வட்டியில் நிதி வழங்குவதையோ எவரும் குறைகூற முடியாதென்று அவர் கூறியமை மட்டுமல்ல, இலங்கையை வெளிநாட்டவர்களுக்கு ஒரு விளையாட்டுத் தளமாக ஆக்குவதற்கு இடமளிக்கவும் ஆகாது என்கிறார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வகுப்பவர் அனைவரும், பிரதமர் உட்பட இக் கருத்தினைத்தான் வெளிப்படையாகச் சொல்லிவருகின்றனர். இருந்தபோதிலும் உயர்ந்த பொதுநலத்தின் அடிப்படையிலாவது ஈழத் தமிழர் சார்பாக இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை அமைய வேண்டும். ஈழத்தமிழருக்கும் பாரத நாட்டுக்கமிடையேயுள்ள தொடர்பு எந்த நிலையிலும் துண்டிக்கப்படக்கூடாது என்று நாம் தொடர்ச்சியாக விடுத்துவந்த வேண்டுகோள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் தமிழகத்துப் பல்வேறு கட்சிகளும் ஈழத் தமிழருக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கின. இவ் அணியில் திரையுலகம் சார்ந்தோர் திரண்டுள்ளனர். கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக் கூடங்களைப் புறக்கணித்து தமது ஆதரவை வெளிக்காட்டினர். கலைஞர் தலைமையில் கூட்டிய அனைத்துக்கட்சி மாநாட்டில் தமிழகத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. தமிழ் கூறும் நல்லுலகம் கலைஞருக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்தியது.

ஆனால் தமிழினத்தின் சாபக்கேடோ என்னவோ இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் கலைஞரைச் சந்தித்து உரையாடியமையை அடுத்து டில்லி அரசின் தீர்வாகத் தமிழர் பிரச்சினைக்கு இலங்கை அரசக்கு நிவாரண நிதியாக 800 தொன் பொருட்களை வழங்குவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

நாளும் பொழுதும் போரினால் சாகும் மக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காத அளவுக்குப் பெருகியுள்ளது. பட்டினிச் சாவு, பாம்புக்கடியினால் சாவு, நோயினால் சாவு. மருத்துவமனைகளே தாக்கப்படுகின்ற செய்திகள் வேறு.

பயங்கரவாதத்தின் பெயரால் புலிகளை அழிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு வெறிகொண்ட சிங்கள அரசு தமிழர் தம் மண்ணிலேயே வேரோடு சாய்க்க முற்படுகின்றது.

"ஏதாவது செய்து என் ஆருயிர் உடன்பிறப்புகளைக் காப்பாற்றவேண்டும்' என்று கூறிய கலைஞர், டில்லி அரசின் பசப்பு வார்த்தைக்கு, பாசாங்கு வார்த்தைக்கு உட்பட்டு நம்பிய எம்மைக் கைவிட்டிருப்பது எமக்குத் தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்துவது வேதனை ஏற்படுத்துவது தமது நோக்கம் அல்ல என்று கூறி, அப்பாலும் அடிசார்ந்தவர்க்கு அடியவராகமாறி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி துறப்பதை தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக கலைஞர் இயம்பிய கருத்து எம் இதயத்தில் இடிவிழுந்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. டில்லி அரசு தமிழர் உயிரைப் பறிக்கின்ற சிங்கள அரசிடம் உணவை வழங்கி ஈழத்தமிழினத்தின் உயிரைக் காக்கமுடியும் என கலைஞர் உண்மையில் நம்புகின்றாரா?

பிறர் எம்மை ஏமாற்றலாம். நாம் நம்மையே ஏமாற்றுவோமாயின் வரலாறு தருகின்ற தீர்ப்புக்கு நாம் என்ன விடை கூற முடியும்?

தமிழகத்துத் தலைவர்களை தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தரும்படி கேட்கவில்லை. தமிழீழம் என்ற குழந்தை பிறக்கின்றபோது ஏற்படுகின்ற நோவைக் குறைப்பதற்காக மருத்துவச்சியாக எம்மைக் காக்கும் கலைஞரும், தமிழகத் தலைவர்களும் துணை நிற்கக் கூடாதா? விடைகாண விழைகின்றோம்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.