Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அதிபர் ராஜபக்சே தன்னுடைய ஒரு சகோதரரை இந்தியாவுக்கு அனுப்பி மற்றொரு சகோதரரை பாக்கிஸ்தானுக்கு அனுப்புகிறார். ஆகவே, அங்கு போர் தொடரும் - விஜயகாந்த்!

Featured Replies

இலங்கையில் போர் நிறுத்தத்தை அறிவிக்காமல் நாடகம் நடத்தும் அந்நாட்டு அதிபர் ராஜபச்சேவை மத்திய மாநில அரசுகள் தட்டிக்கேட்காதது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று ஈழத்தமிழர்களுக்காக நடிகர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நடிகர்கள் ராதாரவி, சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன் போன்றவர்களுடன் இணைந்து நான் 1983ம் ஆண்டு முதல் என்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறேன்.

ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம், கவர்னர் மாளிகை முன்பு போராட்டம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமையில் சிங்கள தூதரகத்திற்கு சென்றது போன்று பல்வேறு வகைகளில் இலங்கை தமிழர்களுக்காக போராடி இருக்கிறேன்.

பெரியார் திடலில் நடிகர் மணிவண்ணனுடன் சேர்ந்து நிதி திரட்டுவதற்காக நாடகம் நடத்தி இருக்கிறேன். இவ்வாறு 1983ம் ஆண்டு முதல் தற்போது 2008ம் ஆண்டு வரை நான் இந்த பிரச்சனையில் என்னை ஈடுபடுத்தி வந்திருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், மத்திய மாநில அரசுகளையோ, இலங்கை அரசையோ உண்ணாவிரதத்தில் கண்டித்து பேசக்கூடாது என்று நடிகர் சங்கம் கூறியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

நம்முடைய உணர்வுகளை தெரிவிப்பதற்கு நமக்கு உரிமை உண்டு. இலங்கை அரசை தட்டிக்கேட்கக்கூடாது என்று சொல்லக்கூடாது. மனிதர்கள் கொல்லப்படும்போது அதனை தட்டிக்கேட்பதுதான் மனித நேயம். எனவே மனித நேயத்திற்கு புறம்பாக நடக்கும் இலங்கையை கண்டிப்பது தவறு கிடையாது.

ஆனாலும் அது பற்றி எல்லாம் நான் இங்கு பேசினால் அரசியல் ஆகிவிடும். நம்முடைய உணர்வுகளை கட்டுப்பாட்டுடன் பேசவேண்டும் என்று வேண்டுமானால் கூறலாம்.

இதுவரையில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. அந்நாட்டு அதிபர் ராஜபக்சே என்ன செய்தார். தன்னுடைய ஒரு சகோதரரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மற்றொரு சகோதரரை பாகிஸ்தானுக்கு அனுப்பினார். இலங்கை அதிபரின் இந்த நாடகத்தை மத்திய மாநில அரசுகள் தானே தட்டிக்கேட்க வேண்டும்.

இங்கு நான் அரசியல் பேச வரவில்லை. ஆனாலும் என்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே சபையினர் என்னை மன்னிக்க வேண்டும்.

1983ம் ஆண்டு முதல் போராடி பார்த்து விட்டோம். எங்கள் மாநாட்டில் கூட ராணுவத் தீர்வு கூடாது, அரசியல் தீர்வுதான் வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதுதான் உண்மையான ஜனநாயகம்.

இலங்கை அரசு இந்தியாவை குறை சொல்ல முடியாது. இங்கே வேற்றுமையில் ஒற்றுமை உண்டு. ஆனால் இலங்கையில் சிங்களர்களையும், தமிழர்களையும் வேறுபடுத்தி நடத்துகிறார்கள்.

தமிழர்கள் மீது இலங்கை அரசு விமானத்தாக்குதலை நடத்துகிறது. காஷ்மீரைப்பிடிக்க நாமும் போராடு கிறோம். ஆனால் இந்திய அரசு இதுவரை அங்கு விமானத் தாக்குதலை நடத்தியது இல்லை. அதுதான் மனிதநேயம்.

ஆனால் இந்த மனிதநேயத்தை ராஜபக்சே அரசு கடைபிடிக்க வில்லை. என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் என் ஒருமாத சம்பளத்தை ஈழத்தமிழர் நிவாரண நிதிக்கு முதலமைச்சரிடம் வழங்கிவிட்டு மாவட்டம் தோறும் வழங்க வேண்டும் என்றும் என்னுடைய கட்சியினரை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

இப்போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக உணவு, உடை, மருந்து பொருட்களை அனுப்புகிறோம். இதேபோல காயம் பட்ட ஈழத்தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். இதற்கு மத்திய மாநிலஅரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து நல்ல முடிவு காண வேண்டும் என்றார் விஜயகாந்த்.

ஆரம்பத்தில் இந்த உண்ணாவிரதத்தில் உணர்சிகர உரைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தபோதும் தற்போது அந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி கலந்துகொண்டுள்ள தமிழ் உணர்வுமிக்க நடிகர்கள் உரையாற்றி வருகின்றனர். தற்போது சத்தியராஜ், ரஜினி, கமல் போன்றவர்கள் உரையாற்றியுள்ளனர்.

தமிழர்களுக்கான குரல்கொடுக்க தமிழ்களுக்கு உரிமையிருக்கின்றது என்பதை சத்தியாராஜ் அவர்கள் வலியுறுத்தியிருந்த அதேவேளை, 35 வருடங்களாக அடக்க முடியாத இயக்கத்தை இனி எவ்வாறு அடக்கப் போகின்றீர்கள் எனக் கேள்வியெழுப்பியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அத்துடன், பலரும் எதிர்பார்த்தற்கும் மாறாக ரஜினியின் உரையும் உணர்ச்சிகரமாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், இந்தப்போராட்டத்திற்கு ஆதரவாக பல கட்சிகளும் அறிக்கைகளை அனுப்பியுள்ளன.

குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இறுதியாக பேசிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் மிகவும் நீண்ட உரையை ஆற்றியுள்ளார். இதேவேளை ஈழத்தமிழர்களின் நிவாரண நிதிக்காக ரஜினி பத்து இலட்சம் ரூபாக்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.