Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய அரசுக்கு இந்த அவமானம் தேவைதானா?

Featured Replies

இந்திய அரசுக்கு இந்த அவமானம் தேவைதானா?

* இலங்கையில் நடப்பது ஓர் உள்நாட்டுப் போர். எந்த பகை நாடும் இலங்கையுடன் போர் தொடுக்கவில்லை. தமிழ் மக்களுக்கெதிரான வரலாற்று ரீதியான இனஒடுக்குமுறையின் இன்றைய வடிவமே, இந்த உள்நாட்டுப் போர். பயங்கரவாதத்தின் பெயரால் இந்தப் போரை நடத்துதல் ஆட்சியாளருக்கு வசதியாக அமைந்துவிட்டது. யுத்தத்தின் முழுச் சுமையையும் சுமந்திருப்பவர்கள் யார் என்பதை மட்டும் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

சி.மகேந்திரன்

போர் நடத்திதான் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கமுடியும் என்பதை அறிவித்து செயற்படும் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றுதான் ஜனதா விமுக்தி பெரமுன. இன்று இலங்கையில் நடைபெறும் ஆட்சிமுறை ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டது. ஒற்றையாட்சி மொழி, சிறுபான்மையை நசுக்கக்கூடிய பாஸிச இயல்பை சட்டபூர்வமாக பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஒற்றையாட்சிக்கு பதிலாக கூட்டாட்சிதான் பிரச்சினையைத் தீர்க்கும் என்பதை ஏதாவது ஒரு காலகட்டத்தில் இலங்கையிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் உதட்டளவிலாவது பேசியிருக்கின்றன ஜனதா விமுக்தி பெரமுனையின் கொள்கை இதில் வேறுபட்டுவிட்டது. சிங்கள மக்களின் மேலாண்மைக்குப் பொருத்தமுடைய ஒற்றையாட்சி தான் இலங்கைக்கு ஏற்புடையது என்று இந்தக் கட்சி கூறுகிறது.

தலைமன்னார், தலைநகர் கொழும்பு ஆகியவற்றில் விடுதலைப் புலிகளின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது பற்றி ஜனதா விமுக்தி பெரமுனையின் குருநாகல் பாராளுமன்ற உறுப்பினர் விஜித கேரத் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான இடங்களில் பாதுகாப்பிற்கென்று இந்திய இராணுவத்தால் அமைத்து தரப்பட்டிருக்கும் ராடார் கருவி மூலம், சாரியாக கண்காணித்து தகவல் அளிப்பதில் ஏற்பட்ட குறைபாடுதான், புலிகளின் விமானங்கள் தப்பி செல்வதற்கு காரணமாக அமைந்துவிட்டது. என்று கூறியுள்ளார். இதில் எழுப்பியிருக்கும் கேள்வி இந்திய இராணுவத்தின் நம்பகத்தன்மையை பற்றியது. எந்த நாட்டிற்கு காவலாளியாகச் சென்றாலும் அந்த நாட்டிற்கு நம்பிக்கை மிக்க காவலாளியாக இருக்கவேண்டாமா? என்ற காவல் நேர்மையை இந்தக் கேள்வி எழுப்பிப் பார்க்கிறது. இந்தக் கேள்வியில் இலங்கையில் வாழும் சிங்கள மக்களின் நியாயம் இருப்தைப்போல உணர்ந்தாலும், இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் வாழ்ந்து வரும் நமக்கு ஒருவித அவமான உணர்ச்சியைத் தோற்றுவித்துவிட்டது. ஆயுத உதவியும் செய்து இத்தகைய கேவலமான அவப்பெயரையும் நாம் சூட்டிக் கொள்ள வேண்டுமா? என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது.

இந்திய பாராளுமன்றத்திற்குத் தெரியாமலும் இந்திய மக்களுக்குத் தெரியாமலும் இந்தியா, இலங்கை இராணுவத்திற்குச் செய்த உதவி இது. இராணுவம் ஒரு நாட்டின் கௌரவமாகப் பேசப்படுகிறது. அதுவும் இந்திய இராணுவம் குறித்த பல பெருமைகள் பாராளுமன்றத்தில் பலமுறை புகழப்பட்டுள்ளது. அந்த இராணுவத்தை தொழிநுட்ப உதவி என்ற பெயரில் அனுப்பியதில் ஏற்பட்ட அவமானத்திற்கு யார் பொறுப்பேற்பது? கடந்த மூன்று மாதங்களாக இலங்கைக்கு இந்திய அரசாங்கம் இராணுவ உதவி செய்கிறதா? என்ற கேள்வி இந்திய அரசாங்கத்திடம் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஒரு நீண்ட மௌனத்தின் மூலம் இந்த கேள்வியை மரணக்குழியில் புதைத்து விடவே இந்திய அரசு விரும்பியது. எப்படியோ வலுவடைந்த போராட்டங்கள் இந்திய அரசின் வாயைத் திறக்கவைத்து விட்டது. மெல்ல வாய் திறந்த இந்திய அரசாங்கம் கூறியது. இந்தியாவின் இராணுவப் பாதுகாப்பு காரியங்களுக்காகவே இலங்கைக்கு உதவி செய்யும் அவசியம் எழுந்தது என்று நமது நாட்டின் பாதுகாப்பில் அரசாங்கத்தின் அக்கறை பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

இலங்கையில் நடப்பது ஓர் உள்நாட்டுப் போர். எந்த பகை நாடும் இலங்கையுடன் போர் தொடுக்கவில்லை. தமிழ் மக்களுக்கெதிரான வரலாற்று ரீதியான இனஒடுக்குமுறையின் இன்றைய வடிவமே, இந்த உள்நாட்டுப் போர். பயங்கரவாதத்தின் பெயரால் இந்தப் போரை நடத்துதல் ஆட்சியாளருக்கு வசதியாக அமைந்துவிட்டது. யுத்தத்தின் முழுச் சுமையையும் சுமந்திருப்பவர்கள் யார் என்பதை மட்டும் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். இன்று எல்லாவற்றையும் இழந்து, அகதிகளாய் நிற்கும் இலங்கையின் பூர்வகுடிகளான தமிழ் மக்கள்தான் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். போர் விமானம் பொது மக்களின் குடியிருப்புகளை வெறிகொண்டு தாக்கித் தரைமட்டமாக்குகிறது. இராட்சத கழுகுகளைப் போல விமானங்கள் அவர்களைத் துரத்தி அடித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் ஓடி ஓடி களைத்து விட்டார்கள்.

மூன்று மாதங்களில் குறைந்தது பத்து இடங்களில் குடிபெயர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். பட்டினியோடும் பயத்தோடும் வாழும் மக்களுக்கு பதுங்குழிதான் புகலிடம். ஆனால் அங்கும் பாம்புகளும், நாய்களும் பதுங்கியிருந்து இவர்களை வெறிகொண்டு கடிக்கத் தொடங்கி விடுகிறது. பாம்புக்கடியால் மட்டும் 200 க்கும் அதிகமானவர்கள் இறந்து போனதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மலேரியா கொசுக்கடியால் பாதிக்கப்பட்வர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அரசுப் பகுதிக்குள் வர இயலாமல் 4 இலட்சம் மக்கள் இவ்வாறு அவதியுறுகிறார்கள். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அகதி முகாம்களில் மட்டும் 5 இலட்சம் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுகுவதை விடுத்து, இந்தியா தங்கள் பாதுகாப்பு என்று கூறி, இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்வது சரிதானா? என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவின் தெற்கு எல்லையில் இராணுவ ரீதியாக ஒரு முக்கியத்துவமுடைய தீவு இலங்கை என்பது அனைவருக்கும் தெரியும். இலங்கையின் இராணுவப் பாதுகாப்பும் இந்தியாவின் இராணுவப் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று ஆழமான தொடர்பைக்கொண்டுள்ளது என்பதும் உண்மைதான். மக்கள் தொகையில் இலங்கை சிறிய நாடு என்றபோதிலும் இந்திய அரசாங்கத்தை பலமுறை ஏமாற்றியிருக்கிறது. ஏமாற்றுவதன் மூலம் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று இன்றும் அது நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தியசீன போர், இந்தியபாகிஸ்தான் போர் என்ற இரண்டு போர்களை இந்தியா சந்தித்தது. அப்பொழுதெல்லாம், இலங்கையின் கொழும்பு நகரம் தான் போர் விமானங்களுக்கான பெற்றோல் நிரப்பிக்கொள்ளும் வசதியை செய்து கொடுத்தது. கச்சதீவும் பெருந்தன்மையோடு இலங்கை அரசுக்கு இந்தியாவால் வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட இந்திய மீனவர்களின் உரிமைகளை முற்றாக மறுத்ததுடன் கச்சதீவைச் சுற்றிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொலை செய்யப்படுவதற்கும் இலங்கை அரசு காரணமாக அமைந்துவிட்டது. திம்புப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைந்த ஜெயவர்த்தனா ராஜீவ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதி ஒரே மாநிலமாக அமைய வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியை சூழ்ச்சியால் மாற்றிவிட்டது. இன்று நடைபெறும் உள்நாட்டு போரிலும் தூரத்து நாடுகளிடம் ஆயுதங்களை வாங்குவதன் மூலம் இந்தியாவை மிரட்டிப் பார்க்கிறது. இதை இந்திய அரசு சரியாக புரிந்து கொள்ளல் அவசியம்.

கடந்த அக்டோபர் 2 ஆம் திகதிக்குப் பின்னர் அசைவற்று உறைந்து கிடந்த தமிழகம் உறக்கம் கலைந்து இலங்கைத் தமிழ் மக்களுக்கு சகோதர ஆதரவு தெரிவிக்க எழுந்து நின்றது. இலங்கை தமிழ் மக்களுக்காகத் தாய்த் தமிழகத்தின் இந்த எழுச்சி இலங்கை அரசாங்கத்திற்கும் அதற்கு இந்தியாவின் சார்பில் உடனிருந்து உதவிபுரிந்து வந்த அதிகாரவர்க்கத்திற்கும் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. கூட்டணி சகாப்தத்தில் நுழைந்துவிட்ட நமது அரசியலில் இது சில நிர்ப்பந்தங்களை உருவாக்கியிருக்கிறது.

இலங்கையின் சிறப்புத் தூதவர் பசில் ராஜபக்ஷ வருகை இந்த அச்சத்தின் வெளிப்பாடுதான். ஆனால் இது இலங்கை அரசு நடத்தும் போலி நாடகம் என்பதை புரிந்து கொள்ள யாருக்கும் சிரமம் இல்லாமல் போய்விட்டது. பொதுமக்களில் ஒருவரைக்கூட கொல்லாத போர் ஒன்றை இலங்கையின் வடக்குப் பகுதியில் நடத்தப்போவதாக இலங்கை அரசின் சார்பில் வாக்குறுதி அளித்தார்.எந்தப் போரிலும் முதலில் கொல்லப்படுவது சாதாரண குடிமக்கள்தான். அதிலும் தமிழ் மக்களுக்கு எதிரானது என்று கூறப்படும் போரில் எவ்வாறு பொதுமக்களில் தமிழரில் ஒருவரைக்கூட கொல்லாத யுத்தத்தை நடத்தப் போகிறது என்பது நமக்குப் புரியவில்லை. கொல்லாமையை அடிப்படை ஆதாரமாக கொண்ட புத்த மதத்தை பின்பற்றும் இலங்கை இதற்கான தனி ஏற்பாட்டை வைத்திருக்கிறதா? என்பதும் புரியவில்லை. இந்த வாக்குறுதி எவ்வாறு பொய்மை நிறைந்தது என்பதை கிளிநொச்சி மருத்துவமனையின் ஏவுகணைத் தாக்குதல் உறுதி செய்தது. மருத்துவமனையின் இடிந்துபோன கட்டிடங்கள் புகைப்படங்களோடு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் பசில் ராஜபக்ஷவின் டில்லி வருகையை ஒட்டிய காலத்திலேயே நிகழ்ந்தது. இதன் பின்னர் 1300 குழந்தைகள் கல்வி பயிலும் பாடசாலை ஒன்று பரந்தன் என்னும் இடத்தில் குண்டு மழைக்கு இலக்கானது. மருத்துவமனையிலும்,பாடசாலைகள

தினக்குரல் நல்ல விளக்கமாக தற்போதைய நிலைமையை எடுத்து விளக்கையுள்ளது..

முழுமையாக தமிழகமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படல் வேண்டும்...

பொதுமக்களில் ஒருவரைக்கூட கொல்லாத போர் ஒன்றை இலங்கையின் வடக்குப் பகுதியில் நடத்தப்போவதாக இலங்கை அரசின் சார்பில் வாக்குறுதி அளித்தார்.எந்தப் போரிலும் முதலில் கொல்லப்படுவது சாதாரண குடிமக்கள்தான். அதிலும் தமிழ் மக்களுக்கு எதிரானது என்று கூறப்படும் போரில் எவ்வாறு பொதுமக்களில் தமிழரில் ஒருவரைக்கூட கொல்லாத யுத்தத்தை நடத்தப் போகிறது என்பது நமக்குப் புரியவில்லை. கொல்லாமையை அடிப்படை ஆதாரமாக கொண்ட புத்த மதத்தை பின்பற்றும் இலங்கை இதற்கான தனி ஏற்பாட்டை வைத்திருக்கிறதா? என்பதும் புரியவில்லை. இந்த வாக்குறுதி எவ்வாறு பொய்மை நிறைந்தது என்பதை கிளிநொச்சி மருத்துவமனையின் ஏவுகணைத் தாக்குதல் உறுதி செய்தது. மருத்துவமனையின் இடிந்துபோன கட்டிடங்கள் புகைப்படங்களோடு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் பசில் ராஜபக்ஷவின் டில்லி வருகையை ஒட்டிய காலத்திலேயே நிகழ்ந்தது. இதன் பின்னர் 1300 குழந்தைகள் கல்வி பயிலும் பாடசாலை ஒன்று பரந்தன் என்னும் இடத்தில் குண்டு மழைக்கு இலக்கானது. மருத்துவமனையிலும்,பாடசாலைகள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசியலிலும் நெருக்கடிகள் கூடுதலாகிக் கொண்டே செல்கிறது. தேர்தல் முடிந்த பின்னர் ராஜபக்ஷவின் கட்சி பெரும்பான்மை பெறாத கட்சியாக ஆட்சி அமைத்தது. வேறு கட்சிகளிலிருந்து 45 பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் கட்சிக்கு ஆதரவாக எப்படியோ மாற்றிக்கொண்டது. 225 பேர் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் இந்தக் கட்சியின் இன்றைய ஆதரவு உறுப்பினர்கள் 120 பேர். இதில் 112 பேர் அமைச்சர்கள் இனவெறியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தான், ராஜபக்ஷவால் இப்பொழுது ஆட்சிநடத்தப்படுகிறது. யார் கூடுதலாக இனவெறி அரசியல் பேசுகிறார்களோ அவர்கள்தான் மக்களிடம் செல்வாக்கை பெற முடியும் என்ற இனவெறி சூழல் இலங்கையில் உருவாகியிருக்கிறது.

http://www.thinakkural.com/

மிகவும் உண்மையான வரிகள் தற்போது சிங்கள மக்களில் பெரும்பாலானோர் தமிழ் மக்களை அழிக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள் அதை எந்த அரசு செய்தலும் அவர்களுக்கு தமது ஆதரவை வழங்குகிறார்கள்.

எந்த அவமானத்தையும் தாங்குவோம் புலி பிடிப்பதற்காக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.