Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி நவம்பர் 14 அன்று டில்லியில் ஏஐஎஸ்எப் மாபெரும் மாணவர் பேரணி சென்னையிலிருந்து தனி ரயிலில் புறப்படுகின்றனர்

Featured Replies

இலங்கையில் போர் நிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி இந்திய நாடாளுமன்றம் முன்பு வரும் 14ஆம் தேதி மாபெரும் மாணவர் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து தனி ரயில் மூலம் 2,000 மாணவர்கள் செல்ல உள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசிய பொதுச்செயலாளர் விஜயேந்திர கேசரி நவம்பர் 4ந் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

http://farm4.static.flickr.com/3015/300719...d05e7cd.jpg?v=0

நாட்டைப் பாதிக்கும் முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ஆம் தேதியன்று டில்லியில் மாபெரும் மாணவர் பேரணி நடைபெற உள்ளது. அப்போது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இதில் கலந்து கொண்டு நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல உள்ளனர்.

குறிப்பாக ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணியை மாணவர் பெருமன்றம் நடத்துகிறது. முதலாவதும், முக்கியமானதுமான கோரிக்கை இலங்கையில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதாகும்.

தற்போது இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களான தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தீவிரப் போர் நடத்தி வருகிறது.

இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போரின் விளைவாக தமிழர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு இல்லை; குடியிருக்க இடம் இல்லை. சுகாதாரமான குடிநீர் கூட கிடையாது; தமிழர்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; குறிப்பாக 50 ஆயிரம் தமிழ் மாணவர்கள் கல்வி பெறமுடியமல் தவிக்கின்றனர்.

இவ்வாறு அவதிப்படும் தமிழ் மக்களுக்கு உடனடியாக உணவு, மருந்து, குடிநீர் மற்றும் கல்வியை வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர் பெருமன்றம் வலியுறுத்துகிறது.

மேலும், முப்படைகளைக் கொண்டு அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்துவரும் போரை இலங்கை அரசு உடனடியாக நிறுத்தும்படி இந்தியா வலியுறுத்திட வேண்டும். அத்துடன், இலங்கைப் பிரச்சனைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காணவேண்டும் என்றும் மாணவர் பெருமன்றம் வலியுறுத்துகிறது.

இரண்டாவது முக்கிய கோரிக்கையாக கல்வி தனியார் மயமாவதையும், வணிக மயமாக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தும்படி இந்திய அரசை நிர்பந்தம் செய்யும் வகையில் இந்த மாணவர் பேரணி மாபெரும் அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அடுத்ததாக, மத்திய நிதி நிலை அறிக்கையில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 6 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

மாணவர் பேரவைத் தேர்தல் குறித்த லிங்டோ குழுவின் பரிந்துரையின்படி தேசத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஜனநாயக பூர்வமாக மாணவர் தேர்தல்களை நடத்தியாகவேண்டும்.

கல்விக் கொள்கை மதச் சார்பற்றதாகவும், ஜனநாயகப் பூர்வமாகவும் இருக்கவேண்டும். ஏற்றத்தாழ்வற்ற முறையில் அனைவருக்கும் சமமான கல்வி அளிக்கும் வகையில் சமச்சீர் கல்வி முறையை அமுல்படுத்திடவேண்டும்.

இந்தியாவின் பல இடங்களில் சமூக விரோதிகளால் சிறுபான்மை மக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருகிறது. மஹாராஷ்டிராவில் பிழைப்பு தேடி வந்த வடமாநில ஏழை இளைஞர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதனை மாணவர் பெருமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 14 அன்று இந்திய நாடாளுமன்றம் நோக்கி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாபெரும் மாணவர் பேரணி நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுச்சியோடு கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

ராம் லீலா மைதானத்தில் இருந்து துவங்கும் பேரணி முடிவில் ஜந்தன் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசியச் செயலாளர் டி.ராஜா எம்.பி., அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தேசிய பொதுச்செயலாளர் முருகன், தலைவர் சந்தோஷ்குமார், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசிய பொதுச்செயலாளர் விஜயேந்திர கேசரி, தலைவர் ஜீனு சக்காரியா உம்மன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

இப்போராட்டத்தில், இலங்கைத் தமிழ் மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் உணவர்வுகளோடு, தொப்புள் கொடி உறவுகளுக்காக தமிழ் நாட்டிலிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கிறார்கள். இவர்கள் அனைவரும் வரும் நவம்பர் 12ந் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தனி சிறப்பு ரயிலில் புறப்படுகின்றனர். அச்சிறப்பு ரயில் இலங்கை தமிழ் மக்களின் ‘கண்ணீர் தூதுவன்’ என்றழைக்கப்படும். இலங்கையில் அல்லலுறும் தமிழ் மக்களுக்காக தமிழகத்தின் ஆறு கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக நாடாளுமன்றம் முன்பு ஒலிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவருடன் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில செயலாளர் இரா. திருமலை, தமிழ் மக்கள் மீதான இனவெறித் தாக்குதலை இலங்கை அரசு நிறுத்தும்படி நிர்பந்திக்க கூறி, தமிழகத்தின் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று இந்தியப் பிரதமரிடம் ஒப்படைக்க இருக்கிறோம். இதில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு கையெழுத்து பெறப்படும் என்று சொன்னார். உடன் மாநில துணைச் செயலாளர் பி. ஸ்டாலின் மகேந்திரசிங் மற்றும் சென்னை பல்கலைக்கழக செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் இருந்தனர்.

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.