Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களை பொறியில் சிக்க வைக்கும் தந்திரேமாகவே வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது – ஐ.தே.க: பட்ஜட் ஒரு பார்வை:

Featured Replies

மக்களை பொறியில் சிக்க வைக்கும் தந்திரேமாகவே வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது – ஐ.தே.க: பட்ஜட் ஒரு பார்வை:

http://www.globaltamilnews.net/tamil_news....=1921&cat=1

பொது மக்களை பொறியில் சிக்க வைக்கும் ஓர் தந்திரோபாயமாக இம்முறையை வரவு செலவுத் திட்டத்தை தாம் நோக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தேசியவாதம் என்ற போர்வையில் மக்களை பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைக்கு இந்த வரவுசெலவுத் திட்டம் இட்டுச் செல்லும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது.

பொது மக்களின் பணத்தை சூட்சுமமான முறையில் கொள்ளையிடும் வகையில் இந்த வரவு செலவுத் திட்ட யோசனைகள் அமைந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டதனைப் போன்று காட்சியளித்தாலும், பாடசாலை மாணவர்களின் பாதணி முதல் அநேக பொருட்களுக்கு மறைமுகமான முறையில் வரி அறவிட திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் எதிர்பார்த்த நிவாரணங்களை அரசாங்கம் வழங்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அரச மற்றும் தனியார் துறையின் சம்பளங்களை அதிகரிக்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் இந்த நிலைமை பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வரவு செலவுத் திட்டம், மஹிந்த ராஜபக்ஷ குடும்ப அரசியலை நிலைநாட்டுவதற்காக அப்பாவி பொதுமக்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ரவி கருணாநாயக்க – ஐ.தே.க

அரசாங்கம் 1000 ரூபாவை பறித்துக்கொண்டு 100 ரூபாவை மக்களுக்கு வழங்கியுள்ளது. தனியார் முதலீடு அதிகரிப்பிற்கு எவ்வித சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை. சாதாரண நுகர்வோரின் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. இம்முறை வரவு செலவுத்திட்டம் பொதுமக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை.

பெசில் ராஜபக்ஷ : UPFA

உத்துரட்ட நவதோய திட்டத்தின் மூலம் வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளன. எரிபொருள் விலை குறைப்பின் மூலம் பொதுமக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர். முதல் முறையாக வரவு செலத்திட்டத்தின் ஜனாதிபதியொருவர் தமிழில் பேசியுள்ளார் என பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கே.என்.சொக்ஸி – UNP

இம்முறை வரவு செலவுத் திட்டம் மூன்று முக்கிய காரணிகளை புறந்தள்ளி தயாரிக்கப்பட்டுள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற காரணிகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பொதுமக்களுக்கு சென்று சேரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கே.டி.லால்காந்த – JVP

வரவு செலவத்திட்ட உரை உண்மையில் ஓர் அரசியல் லாபத்தை அடிப்படையாகக்கொண்டு அமைந்துள்ளது. இந்த வரவு செலவுத் திட்ட யோசனைகளின் மூலம் உழைக்கும் வர்க்கத்திற்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை அவர் தெரிவித்துள்ளார்.

கருணா - UPFA

வடக்கின் அபிவிருத்தித் தொடர்வில்; ஜனாதிபதி கரிசனையுடன் செயற்பட்டுள்ளார். கிழக்கில் மீன்பிடித்துறை உள்ளிட்ட துறைகளை அபிவிருத்தி செய்ய யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் வகையில் இந்த வரவு செலவுத்திட்ட யோசனை அமைந்துள்ளது.

மக்கள் நலனை கருத்தில் கொண்ட வரவுசெலவுத் திட்டம் - ஜாதிக ஹெல உறுமய:

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அரசாங்கம் மக்கள் நலனை கருத்தில் கொண்ட வரவுசெலவுத் திட்டம் ஒன்றை சமாப்;பித்துள்ளது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. மக்களுக்கு பல நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.அத்துடன் விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். விவசாயிகள், கைத்தொழில்துறையினர் மற்றும் வர்த்தகர்களை பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. எரிபொருள் விலையை குறைக்க எடுத்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது எனவும் அத்துரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளாh.

மக்களிடம் இருந்து பிக்பொக்கட் அடிக்கும் திட்டம் - திஸ்ஸ அத்தநாயக்க:

அரசாங்கத்தின் இந்த வரவு செலவுத் திட்டம் மக்களிடம் இருந்து பிக்பொக்கட் அடிக்கும் திட்டம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டம் குறித்து கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் கூறிள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்களின் பணத்தைக் கொள்ளையிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.மக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் பாரியளவில் அதிகரிக்கும், துண்டுவிழும் தொகையை ஈடுசெய்வது குறித்து, உரிய வினைத்திறான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை. பணத்தை அச்சிட்டு, அரசாங்கம் துண்டு விழும் தொகையை ஈடுசெய்ய முயற்சிபபதாகவும் இது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் போரில் ஈடுபட்டுள்ள படையினருக்கு பல்வேறு நிவாரணங்கள் - விமல்:

வடக்கில் போரில் ஈடுபட்டுள்ள படையினருக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். பாரிய யுத்தம் ஒன்றை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மக்களுக்கு பல நிவாரணங்களை அறிவித்துள்ளது. இதனை வரவேற்கவேண்டும்.தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தொழில்நுட்பம், விவசாயம் போன்ற துறைகளில் அபிவிருத்தி செய்து அதன் ஊடாக தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தெளிவாகி உள்ளதாக விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் எந்த உற்பத்தி திட்டங்களும் இல்லை - அனுரகுமார திசாநாயக்க:

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் எந்த உற்பத்தி திட்டங்களும் இல்லை என்பது தெளிவாகியிருப்பதாக ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வரி சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது, அத்துடன் அரசாங்க ஊழியர்களின் எதிர்பார்ப்பு இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஈடேறவில்லை. அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுக்கு அமைய தமக்கு ஊதிய அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க ஊழியர்கள் எண்ணியிருந்தனர்.எனினும் அவர்களுக்கு ஒரு சிறிய தொகையே வழங்கப்பட்டுள்ளதாக அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.